M.Jagadeesan
30-11-2012, 03:06 PM
எடுத்த காரியம் யாவினும் தோல்வி. தொட்டது எதுவும் துலங்கவில்லை. அடிக்குமேல் அடி; துன்பத்துக்கு மேல் துன்பம். சோதனைக்கு மேல் சோதனை. வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி மாளவில்லை. வரவுக்கு மீறிய செலவு; வீட்டில் காசு பணம் தங்குவதில்லை. செய்வினையோ அன்றித் தெய்வக் குற்றமோ தெரியவில்லை. அலுவலக நண்பன் சோமுவிடம் யோசனைக் கேட்டேன். அவன் ஒரு வாஸ்து நிபுணன்.
" வாசு ! உன்னுடைய வீட்டைப் பார்த்த பிறகுதான் எதுவும் சொல்லமுடியும்! வாஸ்துவின் வக்கிரமமாக இருந்தால் அதற்குப் பரிகாரம் செய்துவிட்டால், உன்னுடைய வறுமை நீங்கி வளமை வந்துவிடும்." என்றான் சோமு.
" சரி! சோமு! நாளை என் வீட்டிற்கு வா! "
" கண்டிப்பாக வருகிறேன் வாசு ! "
சொன்னபடி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சோமு என் வீட்டிற்கு வந்தான். சோமுவை வரவேற்று ஹாலில் அமர வைத்தேன். காபி டிபன் கொடுத்து உபசரித்தேன். அப்போது ஹாலில், சுவரில் மாட்டியிருந்த குழலூதும் கண்ணனின் படத்தை சோமு பார்த்தான். அது மிகவும் அழகான படம். பசு மாடு ஒன்று புல்வெளியில் மேய்ந்துகொண்டு இருந்தது. அந்த மாட்டின்மீது சாய்ந்தவாறு கண்ணன் குழலூதிக் கொண்டிருந்தான். அந்தப் படத்தைப் பார்த்த சோமு,
" குழலூதும் கண்ணனின் படத்தை வீட்டில் மாட்டக் கூடாது; அது வீட்டிற்கு ஆகாது. புல்லாங்குழலில் ஒரு துளையில் ஊதுகின்ற காற்று,பல துளைகளின் வழியாக வெளியேறுவதைப் போல , வீட்டிற்கு ஒரு வழியில் வருகின்ற செல்வம், பல வழிகளில் வெளியே போய்விடும். வீட்டில் தங்காது. உன்னுடைய வறுமைக்கும், எல்லாத் துன்பங்களுக்கும் இந்தப் படம்தான் காரணம். இதைக் கழட்டிவிட்டு, வேறு ஒரு அழகான கண்ணனின் படத்தை மாட்டு." என்று சொன்னான்.
" சரி சோமு! அவ்வாறே செய்கிறேன்; அடுத்த அறைக்குப் போகலாம் வா! "
அடுத்த அறையில் முருகன் ஆண்டிக் கோலத்தில் , மலை மீது நிற்கின்ற ஒரு படத்தை சுவரில் மாட்டியிருந்தேன்.பழநிக்குச் சென்றபோது வாங்கியது. அதைப் பார்த்த சோமு அதிர்ச்சி அடைந்தான்.
' வாசு ! உனக்கு அறிவிருக்கா? கோவிலில் இருக்கவேண்டிய படத்தை யாராவது வீட்டில் மாட்டி வைப்பார்களா? நீ போண்டி ஆனதற்கு இந்த ஆண்டியின் படம்தான் காரணம்.முதலில் இதைக் கழட்டிவிட்டு , வேறு ஒரு அழகான முருகன் படத்தை மாட்டு." என்று சொன்னான்.
" சரி சோமு ! அவ்வாறே செய்கிறேன்; அடுத்த அறைக்குப் போகலாம் வா ! "
அடுத்த அறையில் , சுவரில் ஒரு காளி தேவியின் படத்தை மாட்டியிருந்தேன். உருட்டும் விழிகளுடன், தொங்கும் நாக்குடன், பதினாறு கைகளுடன் காளி பயங்கரமாகக் காட்சி அளித்தாள். அந்தப் படத்தைப் பார்த்த சோமு பதட்டமடைந்தான்.
" அய்யய்யோ! இது உக்கிர காளியின் படமல்லவா! மந்திரவாதிகளின் வீட்டில் இருக்கவேண்டிய படத்தை யாராவது வீட்டில் மாட்டி வைப்பார்களா?
இந்தக் காளியின் படம் வீட்டில் இருப்பது ஆபத்து; உயிர்ப்பலி கேட்கும். ஆகவே இதை கழட்டிவிட்டு வேறு ஒரு காளியின் படத்தை மாட்டு."
இதைக் கேட்டவுடன் எனக்குப் பயத்தில் வியர்த்துக் கொட்டியது. வேகமாக அடுத்த அறைக்குச் சென்று அங்கிருந்த ஒரு படத்தைத் துணியால் மறைத்து வைத்தேன். எனக்குப் பின்னால் மெதுவாக வந்துகொண்டிருந்த சோமு , அதைப் பார்த்துவிட்டான்.
" என்ன வாசு ! அது யாருடைய படம்? அதை ஏன் எனக்குக் காட்டாமல் மறைக்கிறாய்? என்னிடம் ஒளிவு மறைவு கூடாது. என்னிடம் எதையாவது மறைத்தால் சரியான பரிகாரம் என்னால் சொல்ல முடியாது !"
" ஒன்றுமில்லை சோமு! இது என்னுடைய மனைவியின் படம். இதை நீ பார்த்துவிட்டு , என்னுடைய எல்லாத் துன்பங்களுக்கும் இந்தப் படம்தான் காரணம்; இதைக் கழட்டிவிட்டு வேறு ஒரு நல்ல அழகான பெண்ணின் படத்தை மாட்டு என்று நீ சொல்லப் போக, அதை என் மனைவி கேட்கப் போக , வீடு இரணகளமாகிவிடும். அப்புறம் நான் புவ்வாவுக்கு என்ன செய்வது? என்று நான் பயந்த காரணத்தால்தான் இந்தப் படத்தை உன் கண்ணில் படாதவாறு மறைத்தேன்.'
இதைக்கேட்ட சோமு விழுந்து விழுந்து சிரித்தான்.
நன்றி: சன் தொலைக் காட்சியில் கேட்ட ஒரு seythiyai அடிப்படையாகக் கொண்டு நான் புனைந்த கதை.
" வாசு ! உன்னுடைய வீட்டைப் பார்த்த பிறகுதான் எதுவும் சொல்லமுடியும்! வாஸ்துவின் வக்கிரமமாக இருந்தால் அதற்குப் பரிகாரம் செய்துவிட்டால், உன்னுடைய வறுமை நீங்கி வளமை வந்துவிடும்." என்றான் சோமு.
" சரி! சோமு! நாளை என் வீட்டிற்கு வா! "
" கண்டிப்பாக வருகிறேன் வாசு ! "
சொன்னபடி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சோமு என் வீட்டிற்கு வந்தான். சோமுவை வரவேற்று ஹாலில் அமர வைத்தேன். காபி டிபன் கொடுத்து உபசரித்தேன். அப்போது ஹாலில், சுவரில் மாட்டியிருந்த குழலூதும் கண்ணனின் படத்தை சோமு பார்த்தான். அது மிகவும் அழகான படம். பசு மாடு ஒன்று புல்வெளியில் மேய்ந்துகொண்டு இருந்தது. அந்த மாட்டின்மீது சாய்ந்தவாறு கண்ணன் குழலூதிக் கொண்டிருந்தான். அந்தப் படத்தைப் பார்த்த சோமு,
" குழலூதும் கண்ணனின் படத்தை வீட்டில் மாட்டக் கூடாது; அது வீட்டிற்கு ஆகாது. புல்லாங்குழலில் ஒரு துளையில் ஊதுகின்ற காற்று,பல துளைகளின் வழியாக வெளியேறுவதைப் போல , வீட்டிற்கு ஒரு வழியில் வருகின்ற செல்வம், பல வழிகளில் வெளியே போய்விடும். வீட்டில் தங்காது. உன்னுடைய வறுமைக்கும், எல்லாத் துன்பங்களுக்கும் இந்தப் படம்தான் காரணம். இதைக் கழட்டிவிட்டு, வேறு ஒரு அழகான கண்ணனின் படத்தை மாட்டு." என்று சொன்னான்.
" சரி சோமு! அவ்வாறே செய்கிறேன்; அடுத்த அறைக்குப் போகலாம் வா! "
அடுத்த அறையில் முருகன் ஆண்டிக் கோலத்தில் , மலை மீது நிற்கின்ற ஒரு படத்தை சுவரில் மாட்டியிருந்தேன்.பழநிக்குச் சென்றபோது வாங்கியது. அதைப் பார்த்த சோமு அதிர்ச்சி அடைந்தான்.
' வாசு ! உனக்கு அறிவிருக்கா? கோவிலில் இருக்கவேண்டிய படத்தை யாராவது வீட்டில் மாட்டி வைப்பார்களா? நீ போண்டி ஆனதற்கு இந்த ஆண்டியின் படம்தான் காரணம்.முதலில் இதைக் கழட்டிவிட்டு , வேறு ஒரு அழகான முருகன் படத்தை மாட்டு." என்று சொன்னான்.
" சரி சோமு ! அவ்வாறே செய்கிறேன்; அடுத்த அறைக்குப் போகலாம் வா ! "
அடுத்த அறையில் , சுவரில் ஒரு காளி தேவியின் படத்தை மாட்டியிருந்தேன். உருட்டும் விழிகளுடன், தொங்கும் நாக்குடன், பதினாறு கைகளுடன் காளி பயங்கரமாகக் காட்சி அளித்தாள். அந்தப் படத்தைப் பார்த்த சோமு பதட்டமடைந்தான்.
" அய்யய்யோ! இது உக்கிர காளியின் படமல்லவா! மந்திரவாதிகளின் வீட்டில் இருக்கவேண்டிய படத்தை யாராவது வீட்டில் மாட்டி வைப்பார்களா?
இந்தக் காளியின் படம் வீட்டில் இருப்பது ஆபத்து; உயிர்ப்பலி கேட்கும். ஆகவே இதை கழட்டிவிட்டு வேறு ஒரு காளியின் படத்தை மாட்டு."
இதைக் கேட்டவுடன் எனக்குப் பயத்தில் வியர்த்துக் கொட்டியது. வேகமாக அடுத்த அறைக்குச் சென்று அங்கிருந்த ஒரு படத்தைத் துணியால் மறைத்து வைத்தேன். எனக்குப் பின்னால் மெதுவாக வந்துகொண்டிருந்த சோமு , அதைப் பார்த்துவிட்டான்.
" என்ன வாசு ! அது யாருடைய படம்? அதை ஏன் எனக்குக் காட்டாமல் மறைக்கிறாய்? என்னிடம் ஒளிவு மறைவு கூடாது. என்னிடம் எதையாவது மறைத்தால் சரியான பரிகாரம் என்னால் சொல்ல முடியாது !"
" ஒன்றுமில்லை சோமு! இது என்னுடைய மனைவியின் படம். இதை நீ பார்த்துவிட்டு , என்னுடைய எல்லாத் துன்பங்களுக்கும் இந்தப் படம்தான் காரணம்; இதைக் கழட்டிவிட்டு வேறு ஒரு நல்ல அழகான பெண்ணின் படத்தை மாட்டு என்று நீ சொல்லப் போக, அதை என் மனைவி கேட்கப் போக , வீடு இரணகளமாகிவிடும். அப்புறம் நான் புவ்வாவுக்கு என்ன செய்வது? என்று நான் பயந்த காரணத்தால்தான் இந்தப் படத்தை உன் கண்ணில் படாதவாறு மறைத்தேன்.'
இதைக்கேட்ட சோமு விழுந்து விழுந்து சிரித்தான்.
நன்றி: சன் தொலைக் காட்சியில் கேட்ட ஒரு seythiyai அடிப்படையாகக் கொண்டு நான் புனைந்த கதை.