குணமதி
26-11-2012, 08:18 AM
பொருளும் குறளும்!
பொருள் என்ற சொல்லுக்குப் பொருளாக அகராதியில் நாம் காண்பவை:
செல்வம், உண்மை, குணம், சொற்பொருள், தலைமை, பணம், கடவுள், வீடுபேறு, நூற்பயன்களுள் ஒன்று, பலபண்டம், கருத்து, மெய்ம்மை, அறிவு, கொள்கை, பயன், தன்மை முலியன.
பெற்ற குழந்தைகளை மக்கள் என்பது தமிழ் வழக்கு. நல்ல மக்களால் பொருள்கள் பலவும் வருகின்றன. நல்லவரல்லாத மக்களால் பொருள்கள் பலவும் இழக்கப்படுகின்றன. செல்வம் முதலிய பொருள்களைப் பெறக் காரணமான மக்களையே பொருளாகக் கருத வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். இப்பொருள்படவே, “தம்பொருள் என்ப தம்மக்கள்” என்று கூறினார்.
உரையாசிரியர் பரிமேலழகர், “பொருள் செய்த மக்களைப் பொருள் என மதித்தார்" என்று எழுதுகிறார்.
அறுபத்து மூன்றாம் குறளாக அமைந்துள்ள அதன் முழு வடிவம்:
தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
பொருள் என்ற சொல்லுக்குப் பொருளாக அகராதியில் நாம் காண்பவை:
செல்வம், உண்மை, குணம், சொற்பொருள், தலைமை, பணம், கடவுள், வீடுபேறு, நூற்பயன்களுள் ஒன்று, பலபண்டம், கருத்து, மெய்ம்மை, அறிவு, கொள்கை, பயன், தன்மை முலியன.
பெற்ற குழந்தைகளை மக்கள் என்பது தமிழ் வழக்கு. நல்ல மக்களால் பொருள்கள் பலவும் வருகின்றன. நல்லவரல்லாத மக்களால் பொருள்கள் பலவும் இழக்கப்படுகின்றன. செல்வம் முதலிய பொருள்களைப் பெறக் காரணமான மக்களையே பொருளாகக் கருத வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். இப்பொருள்படவே, “தம்பொருள் என்ப தம்மக்கள்” என்று கூறினார்.
உரையாசிரியர் பரிமேலழகர், “பொருள் செய்த மக்களைப் பொருள் என மதித்தார்" என்று எழுதுகிறார்.
அறுபத்து மூன்றாம் குறளாக அமைந்துள்ள அதன் முழு வடிவம்:
தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.