குணமதி
25-11-2012, 02:33 PM
காதலும் காதலரும் - இலக்கியங்களில்! - 3.
1. பலவகைத்துயரங்களும் நிரம்பிய உலகியல் வாழ்வில் ஒருவனுக்கு உயிர்த்துணையாம் நல்ல தலைவி ஒருத்தி வாய்ப்பது, சுழித்துச் செல்லும் வெள்ளத்தில்பட்டு துன்புறும் ஒருவனுக்கு வலிய மிதப்பு ஒன்று கையகத்து வந்து வாய்த்தது போல் நலமாகும்.
அருஞ்சுழி நீத்தத் தாழும் ஒருவன்
பெரும்புணை பெற்ற பெற்றி போல
நிற்பெறு சிறப்பு. – பெருங்கதை 2.17.122
2. உருவத்தை விட்டு எத்தகு முயற்சியாலும் பிரிக்க முடியாதது நிழல். அதுபோல்,காதல் என்னும் உயரிய தன்மையும் காதல் உடையாரை விட்டுப் பிரிக்க முடியாத ஒன்றாகும்.
சுழலும் நெஞ்சொடு கைவளை சோருமால்
சுழலும் கண்களும் சூடுறு பொன்னென
அழலும் மேனியும் ஆற்றலென் ஐயவோ
நிழலின் நீப்பரும் காதலும் நீத்தியோ. – சீவகசிந்தாமணி: 1511.
3. நீர் மேலும் மேலும் பெருக்கெடுத்து மோதுதலால் ஓங்கிய மணற்கரை அழியும். அதுபோல், காமம் மிகுந்து உள்ளத்தில் மோதுதலால் நாணம் சிதையவும் நேரிடும்.
வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை
தீம்புனல் நெரிதர வீய்ந்துக் காஅங்குத்
தாங்கும் அளவைத் தாங்கிக்
காமம் நெரிதரக் கைந்நில் லாதே. - குறுந்தொகை. 149.
4. நீங்காக் காதலால் நெஞ்சம் உருகி நைபவர் நிலைமை, திரட்டி வைக்கப்பெற்ற வெண்ணெய்க் குன்றத்தில் தீப்பிடித்துவிட்டாற் போன்றது.
கண்ணியற் காதலாள்தன், கன்னியின் உருவங் கண்டே
வெண்ணெயின் குன்றத் தீயால் வெதும்புகின் றதனோ டொத்தான்.
- சூளாமணி: 1020.
1. பலவகைத்துயரங்களும் நிரம்பிய உலகியல் வாழ்வில் ஒருவனுக்கு உயிர்த்துணையாம் நல்ல தலைவி ஒருத்தி வாய்ப்பது, சுழித்துச் செல்லும் வெள்ளத்தில்பட்டு துன்புறும் ஒருவனுக்கு வலிய மிதப்பு ஒன்று கையகத்து வந்து வாய்த்தது போல் நலமாகும்.
அருஞ்சுழி நீத்தத் தாழும் ஒருவன்
பெரும்புணை பெற்ற பெற்றி போல
நிற்பெறு சிறப்பு. – பெருங்கதை 2.17.122
2. உருவத்தை விட்டு எத்தகு முயற்சியாலும் பிரிக்க முடியாதது நிழல். அதுபோல்,காதல் என்னும் உயரிய தன்மையும் காதல் உடையாரை விட்டுப் பிரிக்க முடியாத ஒன்றாகும்.
சுழலும் நெஞ்சொடு கைவளை சோருமால்
சுழலும் கண்களும் சூடுறு பொன்னென
அழலும் மேனியும் ஆற்றலென் ஐயவோ
நிழலின் நீப்பரும் காதலும் நீத்தியோ. – சீவகசிந்தாமணி: 1511.
3. நீர் மேலும் மேலும் பெருக்கெடுத்து மோதுதலால் ஓங்கிய மணற்கரை அழியும். அதுபோல், காமம் மிகுந்து உள்ளத்தில் மோதுதலால் நாணம் சிதையவும் நேரிடும்.
வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை
தீம்புனல் நெரிதர வீய்ந்துக் காஅங்குத்
தாங்கும் அளவைத் தாங்கிக்
காமம் நெரிதரக் கைந்நில் லாதே. - குறுந்தொகை. 149.
4. நீங்காக் காதலால் நெஞ்சம் உருகி நைபவர் நிலைமை, திரட்டி வைக்கப்பெற்ற வெண்ணெய்க் குன்றத்தில் தீப்பிடித்துவிட்டாற் போன்றது.
கண்ணியற் காதலாள்தன், கன்னியின் உருவங் கண்டே
வெண்ணெயின் குன்றத் தீயால் வெதும்புகின் றதனோ டொத்தான்.
- சூளாமணி: 1020.