PDA

View Full Version : அம்மாவின் அன்பு



nandagopal.d
22-11-2012, 05:22 PM
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRQhhEsfVIcHtkhc-GYNUnziAJACSn8Vs5ubrf7dPrmfrxEihho

பண்டிகை நாளில்
வேண்ட வெறுப்பாய்
பார்க்க போன இடத்தில (முதியோர் இல்லம் )
கிடைத்தது
அவனுக்கு
பூ வேலை பாடு செய்த
புதிய சட்டை
அம்மாவின்
கையில் இருந்து

ந.க
22-11-2012, 07:40 PM
ஆழமான அன்பை நெய்த அம்மா பதிவு........மிக்க நன்றி.

jayanth
23-11-2012, 12:17 AM
வெறுப்போடு சென்றவனுக்கு விருப்பமுடன் கிடைத்த சட்டை...!!!

ஜானகி
23-11-2012, 12:30 AM
பாச இழையோடும் நேசம் !

ஏசிடத் துணியுமோ நெஞ்சம் ?

A Thainis
23-11-2012, 10:24 PM
பெத்தமனம் பித்து பிள்ளைமனம் கல்லு என்பதை மீண்டும் இக்கவிதை உணர்த்தி இருக்கிறது.

தாய்க்கு அன்பு வற்றிபோகுமோ என்பது விவிலியத்தின் வாக்கு ஆம் என்றும் வற்றாது தன் பிள்ளைகளுக்காக என்றும் பூத்து குலுங்கும் பாசமலர் தாய்.

நற்கவிக்கு நயமான வாழ்த்துக்கள்

கீதம்
23-11-2012, 11:18 PM
சங்கு சுட்டாலும் வெண்மை தரும். முதியோர் இல்லத்துக்குத் துரத்தப்பட்டாலும் தாய்மை மிளிரும்.

தாய்மையின் சிறப்பைப் பிரதிபலிக்கும் மற்றுமொரு கவிதை. அவள் பெருமையை எத்தனை வடித்தாலும் நிறைவுறாது மனம்.

அருமையானதொரு கவிதைக்குப் பாராட்டுகள் நந்தகோபால் அவர்களே.

lenram80
05-12-2012, 06:30 PM
முதியோர் இல்லத்தில்
விட்டு விட்டு வந்தவன்
வீட்டு வாசலில் எத்திக் கொண்டு
விழுந்ததும் கத்தினான் "அம்மா...!"