PDA

View Full Version : தீபாவளி குழப்பம் ..!



vasikaran.g
22-11-2012, 01:17 PM
வளிக்குசெவியில் வலி !
என்ன என்று
விசாரித்தேன் ,
தீபாவளி கொண்டாடட்டமாம் !

உறங்கிகொண்டிருந்த
நரகாசுரனிடம்
கேட்டேன் ! அப்படி
என்னதான் கேட்டாய்
இறைவனிடம் !
பூலோகம் புதிது புதிதாய்
கண்டுபிடுத்துக் கொண்டாடுகிறதே ?


அடபோப்பா !
என் தூக்கம் கெடுத்துவிட்டாய் ..
உலகம் இருக்கும்வரை ,
உண்மை நிலைக்கும் வரை
தவறு செய்வோர் இருக்கும்வரை
என் நினைவும் செயலும்
நினைக்கபடட்டும் !
அல்லவை அழிக்கபடட்டும் !
இதுதான் நான் கேட்டது !
ஏன் கேட்கிறாய் ?

ஒன்றும் இல்லை ,
உலகம் உன்பெயரை சொல்லி
புத்தாடை ,பட்டாசு ,பட்டிமன்றம்
மத்தாப்பு , மற்றவர்களுக்கு ஆப்பு,
துப்பாக்கி பார்க்க தப்பாமல் போவது ,
சிட்டாய் போயி கட்டாய் பணம் செலவழித்து
மிட்டாய் வாங்குவது ,மிடுக்காய் நடந்து
குறுக்காய் சுருக்காய் சென்று
உற்சாக பானம் அருந்தி
எதிர்காலம் மறந்து
தற்காலம் மட்டும் மகிழ்ந்து
பொறுப்பில்லாமல் துட்டை கரைக்கின்றனர் !
பின்னேர் கரைகின்றனர் !
புலம்பி தவிக்கின்றனர் !
அதுதான் ஐயம் கேட்டேன் என்றேன் !

அடபோப்பா ! எனக்கே சந்தேகம்
அவ்வப்போது வருகிறது !
நான் கேட்டது என்னவோ
எல்லா ஆண்டும்
என்னை நினைக்க வேண்டும் என்று தான் ...
ஆனால் உங்கள் சமூகம்
வடஇந்தியாவில் ராமனின்
வனவாசம் முடிந்து
திரும்ப வரும் நாள்
என்று கொண்டாடுகின்றனர் ,
தென் இந்தியாவில் மகாபாரதம்
கிருஷ்ணர் வதம் என்கின்றனர் !
எனக்கே மறந்துவிட்டது
என்ன நடந்தது என்று ?

குழப்பம் இரண்டு பேருக்கும் !
உங்களுக்கு ?
திடுமென எழுந்தேன் ,
அட கனவு !
விளக்கம் கிடைக்காமல்
குழப்பம் மட்டும் அப்படியே ...