குணமதி
15-11-2012, 12:20 PM
காதலும் காதலரும் - இலக்கியங்களில்! - 2
1. தலைவனுடன் மாறுபட்டு நின்று துயரூட்டும் தலைவியிடம், "உடலும் உயிரும் ஒன்றாகித் தலைமட்டும் இரண்டாகிய பறவையின் இரண்டு தலைகளுள் ஒன்று மற்றொன்றைத் தாக்கிப் போரிடும் தன்மைத்தாக உன் புலவி (ஊடல்) உள்ளது" என்று தலைவன் கூறுகிறான்.
ஓருயிர்ப் புள்ளின் இருதலை யுள்ளொன்று
போரெதிர்ந் தற்றாப் புலவல்நீ. - கலி.89.
2. தலைவன் தலைவியர் ஆகிய இருவரின் செருக்குமிக்க செயலால் நிகழ்ந்த பூசலால், அவர்களுள் ஒருவரை மட்டுமே ஒரு நல்லபாம்பு கடித்தாற் போல தன் அல்லல் நெஞ்சம் மிகவும் கலக்கத்தை அடைகின்றது என்று தலைவி வருந்துகிறாள்.
இருபேராண்மை செய்த பூசல்
நல்ல்லராக் கதுவி யாங்கென்
அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே. - குறுந். 43.
3. நீரின் ஓட்டத்தில் இடையீடு பட்டுக் கிடக்கும் நுண்ணிய மணல் அதுபோல், ஒருவேளை விட்டு ஒருவேளை உண்ணும் நிலைமையில் தன்னைக் கொண்ட கொழுநன் குடும்பம் வறுமையுற்றாலும், செல்வம் மிக்க தன் தந்தையின் வீட்டுச் செழிப்பான உணவைப் பண்புடைய தலைவி நினையாள்.
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கு அறல் போலப்
பொழுது மறுத்துண்ணும் சிறு மதுகையளே.- நற்றிணை.110.
4. ஒரு காலத்தில் இன்பத்தையும் மற்றொரு காலத்தில் துன்பத்தையும் தலைவிக்குத் தரும் தலைவனின் செய்கை, இனிய காற்றை வழங்கிய வானமே, கொடிய தீயையும் வழங்கியது போன்றது.
தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு
நோயும் துன்பமும் ஆகின்று மாதோ
... ... ... ...
இலங்குமலை நாடன் மலர்ந்த மார்பே - நற்றிணை.294..
-------------------------------------------------------------------------------------------------------------------------------
1. தலைவனுடன் மாறுபட்டு நின்று துயரூட்டும் தலைவியிடம், "உடலும் உயிரும் ஒன்றாகித் தலைமட்டும் இரண்டாகிய பறவையின் இரண்டு தலைகளுள் ஒன்று மற்றொன்றைத் தாக்கிப் போரிடும் தன்மைத்தாக உன் புலவி (ஊடல்) உள்ளது" என்று தலைவன் கூறுகிறான்.
ஓருயிர்ப் புள்ளின் இருதலை யுள்ளொன்று
போரெதிர்ந் தற்றாப் புலவல்நீ. - கலி.89.
2. தலைவன் தலைவியர் ஆகிய இருவரின் செருக்குமிக்க செயலால் நிகழ்ந்த பூசலால், அவர்களுள் ஒருவரை மட்டுமே ஒரு நல்லபாம்பு கடித்தாற் போல தன் அல்லல் நெஞ்சம் மிகவும் கலக்கத்தை அடைகின்றது என்று தலைவி வருந்துகிறாள்.
இருபேராண்மை செய்த பூசல்
நல்ல்லராக் கதுவி யாங்கென்
அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே. - குறுந். 43.
3. நீரின் ஓட்டத்தில் இடையீடு பட்டுக் கிடக்கும் நுண்ணிய மணல் அதுபோல், ஒருவேளை விட்டு ஒருவேளை உண்ணும் நிலைமையில் தன்னைக் கொண்ட கொழுநன் குடும்பம் வறுமையுற்றாலும், செல்வம் மிக்க தன் தந்தையின் வீட்டுச் செழிப்பான உணவைப் பண்புடைய தலைவி நினையாள்.
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கு அறல் போலப்
பொழுது மறுத்துண்ணும் சிறு மதுகையளே.- நற்றிணை.110.
4. ஒரு காலத்தில் இன்பத்தையும் மற்றொரு காலத்தில் துன்பத்தையும் தலைவிக்குத் தரும் தலைவனின் செய்கை, இனிய காற்றை வழங்கிய வானமே, கொடிய தீயையும் வழங்கியது போன்றது.
தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு
நோயும் துன்பமும் ஆகின்று மாதோ
... ... ... ...
இலங்குமலை நாடன் மலர்ந்த மார்பே - நற்றிணை.294..
-------------------------------------------------------------------------------------------------------------------------------