PDA

View Full Version : பெண் குழந்தையின் எச்சரிக்கை!!!!!



nandagopal.d
11-11-2012, 04:26 AM
அடிக்கடி சண்டை,
அவனுக்குரியவளிடம்.
அடுப்பு எரிக்க விறகு இல்லை,
ஆனாலும்
ஆண் குழந்தை இல்லையென்ற
சோகம் அவனுக்கு.

எப்பொழுதும்
வெறுப்பின் வெளிப்பாடு,
எல்லோர் மீதும்.

பால் சாப்பிட்டு முடித்த,
அவனுடைய குழந்தை ,
அரை நித்திரையில் திடுக்கிட்டது.
அம்மாவின் வயிற்றை தொட்ட போது,
தயார் நிலையில் அடுத்த குழந்தை!

எச்சரிக்கை விடுத்தது குழந்தை,
அந்த உயிரிடம்.
வரு முன் யோசி,
ஏற்கனவே இங்கு இருக்கும்
எல்லோரும்
அப்பாவின் வாயில்,
சனியன்தான்.

"நீ அடுத்த சனியன்,
ஆகிவிடுவாய் "
நீ பெண்ணாக இருந்தால்,

எச்சரிக்கை,
வெளி வரு முன்னே,
எச்சரிக்கை!

மஞ்சுபாஷிணி
11-11-2012, 07:14 AM
சிந்திக்கவைத்த வரிகள்....

பெண்குழந்தை என்றாலே பயம், அதனால் ஏற்படும் வெறுப்பு.... பெண் குழந்தை என்றால் அதிக செலவு செய்து படிக்கவைத்து திருமணம் வரதட்சணை, அதன்பின் ஆடிச்சீர், பொங்கல் சீர்....

ஆனால் பெண்கள் தலைநிமிர்ந்து தன் கால்களில் நின்று தன் எதிர்க்காலத்தை திட்டமிட ஆரம்பித்துவிட்டனர்....

அருமையான வரிகள் பகிர்வுக்கு அன்பு நன்றிகள் நண்பரே...

ந.க
11-11-2012, 08:43 AM
..வரு முன் யோசி... கருவோடு பேசும் கவி யுக்தி நன்று, நன்றி.

jayanth
11-11-2012, 09:31 AM
கவிதை நன்றாக இருக்கின்றது...

குணமதி
11-11-2012, 02:04 PM
நாட்டு நடப்பை வெளிச்சம் போட்டுக்காட்ட புதிய உத்தி; பாராட்டு!

செல்வா
15-11-2012, 01:37 AM
குழந்தையே கருவிடம் பேசுவது போல் யோசித்த விதம்
அருமை.

வலியைப் பேசும் கவிதை இன்னும் சற்று வலுவாயிருந்திருக்கலாமோ?

தொடர்ந்து நிறைய எழுதுங்கள் கோபால்.

கீதம்
17-11-2012, 07:26 AM
வெளிவந்து தான் படும் அவதியை வயிற்று சிசுவுக்குப் புகட்டி வரவிடாமல் தடுக்கும் வார்த்தைகள் மனம் கனக்கச் செய்கின்றன.

மழலை உணர்ந்த யதார்த்தம் மனிதன் உணர்வது எப்போது? நல்லதொரு கவிதை. பாராட்டுகள்.

nandagopal.d
20-11-2012, 11:13 AM
கருத்து கூறிய நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்