PDA

View Full Version : காற்று



sukhan
10-11-2012, 03:11 AM
வாசமதில் நிறைந்திருக்கிறேன்
சத்தமின்றி சாய்ந்திருக்கிறேன்
தேடும்போது மறைந்திருக்கிறேன்
வாடும்போது தழுவிச்செல்கிறேன்
சத்தமாய் சாளரம் திறந்து

மௌனமொழி பேசுகிறேன்
உன் என் சுவாசமாய் நான்

- காற்று

சுகந்தப்ரீதன்
10-11-2012, 05:04 PM
காற்றே... நீக்கமற நிறைந்து உள்ளேயும் வெளியேயும் உலவிக்கொண்டிருக்கிறாய் உருவமற்ற அருவமாய் உலகத்தில் நீ..!!

வாழ்த்துக்கள்.. சுகன்..!!

ந.க
10-11-2012, 06:18 PM
காற்றைக் கண் கொள்ள வைத்து காதல் செய்ய வைத்து தத்துவம் தந்துள்ளமைக்கு மகிழ்ச்சி. நன்றி.

கீதம்
10-11-2012, 09:58 PM
அருவமாய் திரிந்தும் அன்றாடம் வாழ்விக்கும் அருங்காற்றுக்கொரு அழகிய கவிதை.

புழுங்கிய மனங்களுக்கு ஆறுதலாய் வீசி இதம்தரும் இன்காற்றுக்கொரு இனிய கவிதை.

பாராட்டுகள் சுகன். தொடர்ந்து எழுதுங்கள்.

jayanth
11-11-2012, 09:26 AM
காற்று........சூறாவளி...!!!

M.Jagadeesan
11-11-2012, 11:33 AM
காற்று பேசுவதுபோல ஒரு கவிதை! இன்னும் கொஞ்சம் கற்பனை கலந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள் சுகன்!

nandagopal.d
19-11-2012, 04:37 PM
வரிகளில் வாழ்கிறது கவிதை