PDA

View Full Version : மரணிக்கிறேன்



குருதவசி
08-11-2012, 11:29 AM
கண் பட்ட முதல் பார்வையில் முளைத்துவிட்ட
காதல் பூங்கொடி ..
வாய்விட்டு பேச நினைக்கையில் மொழிமறந்த
மாயம் என்னடி..
எனைதொட்டு கொஞ்சிவிட்டு போன இளம்
தென்றல் நீயடி ..
மனகண்ணால் உனைநுகர மணம் கமழும்
மல்லிகை தானடி..
உன்கண் இமைக்கும் உண்மைகள் வாய்மொழி
மறைப்பது ஏனடி ..
எனைவிட்டு நீயகன்றால் இயல்பில் இப்பிறவி
பாழ்தானோ சொல்லடி...

ந.க
08-11-2012, 12:35 PM
'கொஞ்சிவிட்டு போன இளம்
தென்றல் ..'
மீண்டும்வரும் கெஞ்சிக்கொண்டு...
வாழ்த்துக்கள்...நன்றி..

கீதம்
08-11-2012, 10:03 PM
அழகான கவிதை. முதல் பார்வையிலேயே பற்றிக்கொண்ட காதல் பூங்கொடி தென்றலின் வரவால் இன்னும் இன்னும் சுற்றிக்கொண்டு படர வாழ்த்துக்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
09-11-2012, 03:55 AM
சித்தம் தெளிய வைக்கும் காதல் இங்கே சித்தம் கலைய வைக்கிறதே..வாழ்த்துக்கள் குருதவசி ...

jayanth
09-11-2012, 07:30 AM
அதுதாங்க காதல்...!!!

குருதவசி
15-11-2012, 10:05 AM
வாசித்த தோழர்களுக்கு நன்றி..

சுகந்தப்ரீதன்
15-11-2012, 01:45 PM
பூங்கொடியில் புறப்பட்ட தென்றலில் வீசிய மல்லிகையின் மணத்தில் மன்னவன் மதி மயங்கினானோ..?!:)