குணமதி
06-11-2012, 03:21 AM
காதலும் காதலரும் - இலக்கியங்களில்!
தொகுப்பு -1
இக்காலத்தில், படிப்போர் சலிப்படையாதவாறு காதலைப் பற்றியும் காதலரைப்பற்றியும் பல்வேறு இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைத் துணுக்குத்தொகுப்பாக எழுத வேண்டுமென்ற கருத்தில் தொடங்குகிறேன். வரவேற்பைப் பொறுத்து, தொடர்வதா நிறுத்திவிடுவதா என்று முடிவுசெய்யலாம்!
1. அழகும் மணமும் உடைய இரண்டு மாலைகளை ஒருங்குப் பிணைந்த ஒருமாலை போன்ற பொலிவு உடையவர் இக்காதலர்!
துணைமலர்ப் பிணையல் அன்னஇவர்
மணமகிழ் இயற்கை - குறுந்தொகை: 229.
2. நாங்கள் பிரிவின்றிப் பொருந்திய பிளவுபடாத காதலில் இரண்டு தலைகளைக் கொண்ட ஒரு பறவைபோல் இரண்டு உடற்கு ஓர் உயிரினம் ஆவோம்.
யாமே,
பிரிவின் றியைந்த துவரா நட்பின்
இருதலைப் புள்ளின் ஓருயிரம்மே! - அகநானூறு 12.
3. உயிரொடு கலந்து தோன்றும் உயர்ந்த காதலன் காதலியரின் அரிய நட்பு, அவிழ்த்துப் பிரித்தெடுக்க முடியாத முடிச்சுப் போல்வதாகும்.
யாத்தேம்; யாத்தன்று நட்பே;
அவிழ்த்தற்கு அரிது; அது முடிந்து அமைந்தன்றே. - குறுந். 313[/COLOR]
4. உனக்கு நான் ஓருயிரை இரண்டு உடம்புகளில் பகுத்து வைத்தாற் போன்ற மாண்பினை உடையவன்.
நினக்கு யான்
உயிர் பகுத்தன்ன மாண்பினனே. - நற்றிணை 128.
தொகுப்பு -1
இக்காலத்தில், படிப்போர் சலிப்படையாதவாறு காதலைப் பற்றியும் காதலரைப்பற்றியும் பல்வேறு இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைத் துணுக்குத்தொகுப்பாக எழுத வேண்டுமென்ற கருத்தில் தொடங்குகிறேன். வரவேற்பைப் பொறுத்து, தொடர்வதா நிறுத்திவிடுவதா என்று முடிவுசெய்யலாம்!
1. அழகும் மணமும் உடைய இரண்டு மாலைகளை ஒருங்குப் பிணைந்த ஒருமாலை போன்ற பொலிவு உடையவர் இக்காதலர்!
துணைமலர்ப் பிணையல் அன்னஇவர்
மணமகிழ் இயற்கை - குறுந்தொகை: 229.
2. நாங்கள் பிரிவின்றிப் பொருந்திய பிளவுபடாத காதலில் இரண்டு தலைகளைக் கொண்ட ஒரு பறவைபோல் இரண்டு உடற்கு ஓர் உயிரினம் ஆவோம்.
யாமே,
பிரிவின் றியைந்த துவரா நட்பின்
இருதலைப் புள்ளின் ஓருயிரம்மே! - அகநானூறு 12.
3. உயிரொடு கலந்து தோன்றும் உயர்ந்த காதலன் காதலியரின் அரிய நட்பு, அவிழ்த்துப் பிரித்தெடுக்க முடியாத முடிச்சுப் போல்வதாகும்.
யாத்தேம்; யாத்தன்று நட்பே;
அவிழ்த்தற்கு அரிது; அது முடிந்து அமைந்தன்றே. - குறுந். 313[/COLOR]
4. உனக்கு நான் ஓருயிரை இரண்டு உடம்புகளில் பகுத்து வைத்தாற் போன்ற மாண்பினை உடையவன்.
நினக்கு யான்
உயிர் பகுத்தன்ன மாண்பினனே. - நற்றிணை 128.