ந.க
30-10-2012, 11:37 PM
யாழ்பாணத்து மாடும் சாரதியும்
வெள்ளை மாடு கடைக்கு நேர் நடுவே முன் காத்து நின்றது.
சத்திரச் சந்தியைத் தாண்டி வந்த அந்த பார ஊர்தி சடுதியாய் 'கிரீச்' சத்தத்தோடு, அந்த அரைவாசி வீதியை மறித்து நின்ற மாட்டுக்காய் நின்றது.
ஊர்தியைப் பற்றி எதுவும் சலனமில்லால் அது நின்றது- சினம் கொண்ட சாரதி மீண்டும் மீண்டுமாய் சத்தமெழுப்பினான் ..
மாடு அசைய மறுத்தது.. எதிர்ப் பக்கத்தில் இன்னொரு பார ஊர்தியிலுருந்து கொழும்புச் சரக்குகளை வேகமாய் முதுகிலேத்தி இறக்கிக் கொண்டிருந்தார்கள்.
அந்த மாடு அசையவே இல்லை ..வாழைக்குலைகள் நிரம்பின இன்னொரு வாகனமும் வந்து அந்தப பக்கமாய் நெருக்கிக் கொண்டு நின்றது..
சிலர் ஓடினர் .. மூட்டை தூக்கிக் கொண்டுருந்தவர்கள் ...கடைக் காரர்கள் .
வைரவர் கோயிலுக்கு முன்னாள் ஒரு கூட்டம் சடுதியாக் கூடியது..
பொலிடோல் குடித்து அங்கே ஒருவன் தற்கொலை செய்து கொண்டான்.
இன்னமும் மாடு அசையவில்லை..
தெற்கால் பொன்னம்மா மில் வரை. கிழக்கால் (f)பாய் கடை வரை...எதிராய் கொட்டடி மோர் கடை வரை இந்தத தடையால் வாகனங்கள் நின்றன..
சாரதி வாகனத்தின் இயந்திரத்தை நிறுத்திவிட்டு மாட்டைப் பயமுறுத்தி கலைக்க ஒரு கம்பியோடு இறங்கினான்.
கலவரத்தில் இறங்கிய கடை முதலாளி இப்போதுதான் மாட்டைக் கண்டார்...அடிக்க வந்த சாரதியை தடுத்து ..மாட்டுக்கு வழக்கம் போல் வாழைப் பழத்தை வாய்க்குள் வைத்து அதன் முகத்திலுருந்து முதுகுவரை தடவிக்கொடுத்தார்..
மெல்ல அசைந்தது மாடு.
முதலாளி வைரவர் கோயிலை நோக்கி ஓடினார் ..
கொழும்புச் சாரதி பார ஊர்தியின் சாவியை திருகினான் அது உறுமிக்கொண்டு புகையைக் கக்கிக் கொண்டு இரும்புக் கம்பிகளோடு ஸ்டான்லி வீதியை நோக்கியது.
வெள்ளை மாடு..அது வீதியைக் கடந்து மெல்ல மெல்ல பெரியகடை சுண்ணாம்புக் கட்டிடத்தின் நுழை வாயிலில் நின்றது.
'அவன் கடன் தொல்லை தாங்கேலாமல் பொலிடோல் குடிச்சுப் போட்டான்..முட்டாள்.. பாவம் பிள்ளையள்' சக வியாபாரிகள் பேசிக் கொண்டு போனார்கள்.
சத்திரத்து வைரவர் கோயிலுக்கு முன்னால் நின்று, அந்த தற்கொலை செய்து கொண்ட , பொலிடோல் குடிததவனை சுற்றி நின்ற கூட்டத்தை பார்த்தது வெள்ளை மாடு, அதன் கண்ணில் கலங்கிக் கண்ணீர் வடிந்த ஈரம் தெரிந்தது..
வெள்ளை மாடு கடைக்கு நேர் நடுவே முன் காத்து நின்றது.
சத்திரச் சந்தியைத் தாண்டி வந்த அந்த பார ஊர்தி சடுதியாய் 'கிரீச்' சத்தத்தோடு, அந்த அரைவாசி வீதியை மறித்து நின்ற மாட்டுக்காய் நின்றது.
ஊர்தியைப் பற்றி எதுவும் சலனமில்லால் அது நின்றது- சினம் கொண்ட சாரதி மீண்டும் மீண்டுமாய் சத்தமெழுப்பினான் ..
மாடு அசைய மறுத்தது.. எதிர்ப் பக்கத்தில் இன்னொரு பார ஊர்தியிலுருந்து கொழும்புச் சரக்குகளை வேகமாய் முதுகிலேத்தி இறக்கிக் கொண்டிருந்தார்கள்.
அந்த மாடு அசையவே இல்லை ..வாழைக்குலைகள் நிரம்பின இன்னொரு வாகனமும் வந்து அந்தப பக்கமாய் நெருக்கிக் கொண்டு நின்றது..
சிலர் ஓடினர் .. மூட்டை தூக்கிக் கொண்டுருந்தவர்கள் ...கடைக் காரர்கள் .
வைரவர் கோயிலுக்கு முன்னாள் ஒரு கூட்டம் சடுதியாக் கூடியது..
பொலிடோல் குடித்து அங்கே ஒருவன் தற்கொலை செய்து கொண்டான்.
இன்னமும் மாடு அசையவில்லை..
தெற்கால் பொன்னம்மா மில் வரை. கிழக்கால் (f)பாய் கடை வரை...எதிராய் கொட்டடி மோர் கடை வரை இந்தத தடையால் வாகனங்கள் நின்றன..
சாரதி வாகனத்தின் இயந்திரத்தை நிறுத்திவிட்டு மாட்டைப் பயமுறுத்தி கலைக்க ஒரு கம்பியோடு இறங்கினான்.
கலவரத்தில் இறங்கிய கடை முதலாளி இப்போதுதான் மாட்டைக் கண்டார்...அடிக்க வந்த சாரதியை தடுத்து ..மாட்டுக்கு வழக்கம் போல் வாழைப் பழத்தை வாய்க்குள் வைத்து அதன் முகத்திலுருந்து முதுகுவரை தடவிக்கொடுத்தார்..
மெல்ல அசைந்தது மாடு.
முதலாளி வைரவர் கோயிலை நோக்கி ஓடினார் ..
கொழும்புச் சாரதி பார ஊர்தியின் சாவியை திருகினான் அது உறுமிக்கொண்டு புகையைக் கக்கிக் கொண்டு இரும்புக் கம்பிகளோடு ஸ்டான்லி வீதியை நோக்கியது.
வெள்ளை மாடு..அது வீதியைக் கடந்து மெல்ல மெல்ல பெரியகடை சுண்ணாம்புக் கட்டிடத்தின் நுழை வாயிலில் நின்றது.
'அவன் கடன் தொல்லை தாங்கேலாமல் பொலிடோல் குடிச்சுப் போட்டான்..முட்டாள்.. பாவம் பிள்ளையள்' சக வியாபாரிகள் பேசிக் கொண்டு போனார்கள்.
சத்திரத்து வைரவர் கோயிலுக்கு முன்னால் நின்று, அந்த தற்கொலை செய்து கொண்ட , பொலிடோல் குடிததவனை சுற்றி நின்ற கூட்டத்தை பார்த்தது வெள்ளை மாடு, அதன் கண்ணில் கலங்கிக் கண்ணீர் வடிந்த ஈரம் தெரிந்தது..