முரளி
28-10-2012, 10:58 AM
மாணிக்கம்:
மாணிக்கம் ஒரு கை தேர்ந்த திருடன். இப்போது ஒரு வீட்டைக் குறி. தேட்டை போட. நோட்டம் போட்டுக்கொண்டு இருந்தான் பத்து நாளாக..
14, காந்தி தெரு, இதுதான் அவனது இலக்கு, ஆட்டைய போட. பெரிய பங்களா. வாசல் செக்யூரிட்டி, தோட்டக்காரன், வேலைக்காரர்கள். மூணு பெரிய கார். பசையுள்ள பார்ட்டிதான். அந்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு வேலைக்காரன் இவனுக்கு இன்பார்மர்.
சிறிய குடும்பம் போலிருக்கு. பங்களா சொந்தக்காரர், மனைவி, மகன்.
“ஆயிற்று!. இன்று அந்த குடும்பம் வெளியூர் செல்கிறது. நாளை தான் திரும்புகிறார்கள். இன்று இரவே வேலையை முடித்துக்கொண்டு நாளை மும்பை போய்விட வேண்டும். நிச்சயமாக ஒரு 100 சவரனாவது நகை கிடைக்கும்.”
அவனுக்கு தெரியாது, அப்போது விதியின் விளையாட்டு பற்றி !
***
வேணு என்கிற ராபர்ட் வேணு:
மேற்சொன்ன அந்த வீட்டின் செல்ல மகன். ஒரே மகன். நல்ல படிப்பு. விளையாட்டில் மிகுந்த ஆர்வம. ஒரு 32 வயது இருக்கும். வேணுவின் அப்பா ராபர்ட் ஒரு வெள்ளைக்காரர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். இப்போது உயிருடன் இல்லை. இப்போது இருப்பது அம்மாவின் இரண்டாவது கணவர். கொஞ்ச நாளாகவே குடும்பத்தில் நிம்மதி இல்லை. வேணுவின் காரணமாகத்தான்.
கடந்த ஒரு வருடமாக வேணுவின் உடல் நிலை மோசமாகி கொண்டிருந்தது. வயிற்று வலி, எப்போதும் ஓய்ச்சல், முட்டி வலி. நாளாக நாளாக அதிகமாகி கொண்டிருக்கிறது. முடி உதிர ஆரம்பித்து விட்டது, உடல் இளைக்க ஆரம்பித்து விட்டது. பார்க்காத டாக்டர் இல்லை, எடுக்காத டெஸ்ட் இல்லை. என்னென்னமோ செய்து பார்த்தாகிவிட்டது.
இரப்பை பழுதாகி விட்டது , குடிப்பது தான் காரணம் என்றார் ஒரு டாக்டர். ஆனால், வேணுவிற்கு குடிப்பழக்கமே இல்லை. கான்சர் ஆக இருக்கலாமென்று ஒரு டாக்டர். இல்லை, மன அழுத்தம் தான் காரணம் என்றார் வேறொரு ஸ்பெஷலிஸ்ட். இது எதுவுமில்லை! வேறே டெஸ்ட்கள் எடுக்கணும் என்றார் ஒரு வெளி நாட்டு டாக்டர். மொத்தத்தில் டோட்டல் கன்பியுஷன். ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிந்தது. வேணுவின் உலக வாழ்க்கை மிஞ்சினால் மூன்று வருடம்.
நோயென்னவென்று தெரிந்தால்தானே வைத்தியம் செய்ய முடியும்? கண்ணெதிரே மகன் இறந்து கொண்டிருப்பதை எந்த பெற்றோரால் பார்த்து கொண்டிருக்க முடியும்?
தெரிந்த ஒரே வழி! கடவுளிடம் முறையிடுவது தான். அதுதான் கிளம்பி விட்டார்கள், வைதீஸ்வரன் கோவிலுக்கு. பரிகாரம் பண்ண.
கூட வருவதாக இருந்த வேணு, கடைசி நிமிஷத்தில் உடல் நிலை காரணமாக போகவில்லை. இந்த விஷயம் திருடன் மாணிக்கத்திற்கு தெரியாது.
***
பங்களா : 20 -06-2012
இரவு மணி 2.00. பங்களா வாட்ச்மேன் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த நேரம். மாணிக்கம் காம்பவுண்ட் சுவர் எகிறி குதித்தான். மெதுவாக வீட்டின் கதவை கள்ள சாவி போட்டு திறந்து எஜமானரின் அறைக்குள் புகுந்தான். பீரோவை தொட்டான். உடனே ஒரு அலாரம் அலறியது. பக்கத்து அறையிலிருந்த வேணு “திருடன்” “திருடன்” என்று சத்தம் போட்டபடியே ஓடி வந்தான்.
தப்பிக்க நினைத்த மாணிக்கம், ஓர் கத்தியை காட்டி “சத்தம் போடாதே, கொன்னுடுவேன் “ என்று மிரட்டினான். இளங்கன்று பயமறியாது. வேணு தனது உடல் நோயை மறந்து, மாணிக்கத்தை நோக்கி பாய்ந்தான். “சதக்”. மாணிக்கத்தின் கத்தி வேணுவின் தொடையில் ஆழமாக பாய்ந்தது. ரத்தம் பீறிட்டது. வேணு கீழே சாய்ந்தான். மாணிக்கம், மற்ற வேலையாட்கள் வரு முன் தப்பி ஓடினான். வேலைக்காரர்கள் ‘பிடி பிடி’ என பின்னாடியே ஓடினர். அதற்குள் மாணிக்கம் ஜுட்.
***
போலீஸ் ஸ்டேஷன்: 21-06-2012
இன்ஸ்பெக்டர் நேர்கொண்டான். மகா திறமைசாலி. அவர் திருடன் மாணிக்கத்தை வலை போட்டு தேடிக் கொண்டிருந்தார். மாணிக்கத்தால் குத்தப் பட்டு ஒரு பையன் ஆஸ்பத்திரியில். உயிருக்கு போராடிக் கொண்டு. பணக்கார குடும்பம். அரசியல் செல்வாக்கு உள்ளவங்க. மேலதிகாரிகள் குடையறாங்க. நேர்கொண்டான் எல்லோரையும் விரட்டிக்கொண்டிருந்தார்
போன் கால். “ சார், மாணிக்கத்தை பிடிச்சிட்டோம். நேரே ஸ்டேஷனுக்கு வரோம்”.
“வெரி குட். கொண்டு வாங்க. ரெண்டு தட்டு தட்டி விசாரிப்போம்”.
***
தனியார் ஹாஸ்பிடல்: 21-06-2012
வேணு ஐ.சி.யு வில். மூக்கில், கையில் குழாய்கள். ஆழ்ந்த மயக்கத்தில். சுற்றி டாக்டர்கள், நர்ஸ்கள். அறை வெளியே , வேணுவின் பெற்றோர், கவலை தோய்ந்த முகத்துடன். பெரிய டாக்டரை பார்த்தவுடன் அம்மா ஓடி வந்தாள்.
“டாக்டர்! என் பையனுக்கு இப்போ எப்படி இருக்கு டாக்டர்?- ஒண்ணுமில்லையே!” நோயினால் உலகத்தை விட்டு எப்படியும் போகப்போறான் என்று தெரிந்தும், பெத்த மனது தனது பையன் பிழைக்க வேண்டுமென்று வேண்டியது.
“ரொம்ப ரத்தம் போயிருக்கு. கிட்டத்தட்ட இரண்டு லிட்டர். ட்ரீட்மென்ட் பண்ணிண்டிருக்கோம் இப்போ எதுவும் சொல்ல முடியாது.. பாக்கலாம். தைரிமாயிருங்க” – டாக்டர் ஸ்டாண்டர்ட் பதில்.
“என்னங்க! வேணு பிழைப்பானா?. டாக்டர் இப்படி சொல்றாரே.”-அம்மா கதறினாள்.
“கவலைப்படாதே! கடவுள் நம்மை நிச்சயம் கைவிட மாட்டார்”- அப்பா.
***
போலீஸ் ஸ்டேஷன்: 22-06-2012
மாணிக்கம் போலீஸ் கஸ்டடியில். தான் திருடப் போனதையும், யதேச்சையாக வேணுவை கத்தியால் குத்தியதையும் ஒப்புக்கொண்டு, ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிட்டான். எப்.ஐ.ஆர் ரெடி.
அப்போது வாசலில் இரண்டு பெரிய கார்கள் வந்து நின்றன. வேணுவின் அப்பா, அம்மா மற்றும் இரண்டு வக்கீல்கள் உள்ளே வந்தனர். இன்ஸ்பெக்டர் நேர்கொண்டான் எழுந்து வரவேற்றார். ஒரு வேளை வேணு இறந்து விட்டாரோ? கொலை கேஸ் ஆகி விட்டதோ? எண்ணங்கள் ஓடின அவர் மனதில்.
“இன்ஸ்பெக்டர்!. அந்த மாணிக்கத்தை...” – ஆரம்பித்தார் அப்பா.
“சார், உங்க பையனுக்கு ஒண்ணும் ஆகலியே? இப்போ எப்படி இருக்கார்? – நேர்கொண்டான் கவலை அவருக்கு.
“ஒண்ணும் ஆகலை. நல்லா இருக்கான். அது விஷயமாக பேசத்தான் வந்திருக்கோம்”.
“சொல்லுங்க சார்! மாணிக்கம் இப்போ எங்க கஸ்டடியில் தான் இருக்கான். எல்லா குற்றத்தையும் ஒப்புக்கொண்டான். கேஸ் போட்டு குறைந்தது ஐந்து வருடமாவது ஜெயில் தண்டனை வாங்கிடலாம்.”
பதறினார் அப்பா. “வேண்டாம்! வேண்டாம்! அதை சொல்லத்தான் ஓடோடி வந்தோம். அவன் பேரிலே இருக்கற கேசை வாபஸ் வாங்கி அவனை வெளியே விட்டுடுங்க. இதோ என் பையன் கையெழுத்திட்ட லெட்டர். எவ்வளவு செலவானாலும், நாங்க கொடுக்கிறோம், கேசை க்ளோஸ் பண்ணிடுங்க.”
இதே திரியில் .. *அடுத்த பாகமும் *பார்க்க ... நாளை !!)
மாணிக்கம் ஒரு கை தேர்ந்த திருடன். இப்போது ஒரு வீட்டைக் குறி. தேட்டை போட. நோட்டம் போட்டுக்கொண்டு இருந்தான் பத்து நாளாக..
14, காந்தி தெரு, இதுதான் அவனது இலக்கு, ஆட்டைய போட. பெரிய பங்களா. வாசல் செக்யூரிட்டி, தோட்டக்காரன், வேலைக்காரர்கள். மூணு பெரிய கார். பசையுள்ள பார்ட்டிதான். அந்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு வேலைக்காரன் இவனுக்கு இன்பார்மர்.
சிறிய குடும்பம் போலிருக்கு. பங்களா சொந்தக்காரர், மனைவி, மகன்.
“ஆயிற்று!. இன்று அந்த குடும்பம் வெளியூர் செல்கிறது. நாளை தான் திரும்புகிறார்கள். இன்று இரவே வேலையை முடித்துக்கொண்டு நாளை மும்பை போய்விட வேண்டும். நிச்சயமாக ஒரு 100 சவரனாவது நகை கிடைக்கும்.”
அவனுக்கு தெரியாது, அப்போது விதியின் விளையாட்டு பற்றி !
***
வேணு என்கிற ராபர்ட் வேணு:
மேற்சொன்ன அந்த வீட்டின் செல்ல மகன். ஒரே மகன். நல்ல படிப்பு. விளையாட்டில் மிகுந்த ஆர்வம. ஒரு 32 வயது இருக்கும். வேணுவின் அப்பா ராபர்ட் ஒரு வெள்ளைக்காரர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். இப்போது உயிருடன் இல்லை. இப்போது இருப்பது அம்மாவின் இரண்டாவது கணவர். கொஞ்ச நாளாகவே குடும்பத்தில் நிம்மதி இல்லை. வேணுவின் காரணமாகத்தான்.
கடந்த ஒரு வருடமாக வேணுவின் உடல் நிலை மோசமாகி கொண்டிருந்தது. வயிற்று வலி, எப்போதும் ஓய்ச்சல், முட்டி வலி. நாளாக நாளாக அதிகமாகி கொண்டிருக்கிறது. முடி உதிர ஆரம்பித்து விட்டது, உடல் இளைக்க ஆரம்பித்து விட்டது. பார்க்காத டாக்டர் இல்லை, எடுக்காத டெஸ்ட் இல்லை. என்னென்னமோ செய்து பார்த்தாகிவிட்டது.
இரப்பை பழுதாகி விட்டது , குடிப்பது தான் காரணம் என்றார் ஒரு டாக்டர். ஆனால், வேணுவிற்கு குடிப்பழக்கமே இல்லை. கான்சர் ஆக இருக்கலாமென்று ஒரு டாக்டர். இல்லை, மன அழுத்தம் தான் காரணம் என்றார் வேறொரு ஸ்பெஷலிஸ்ட். இது எதுவுமில்லை! வேறே டெஸ்ட்கள் எடுக்கணும் என்றார் ஒரு வெளி நாட்டு டாக்டர். மொத்தத்தில் டோட்டல் கன்பியுஷன். ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிந்தது. வேணுவின் உலக வாழ்க்கை மிஞ்சினால் மூன்று வருடம்.
நோயென்னவென்று தெரிந்தால்தானே வைத்தியம் செய்ய முடியும்? கண்ணெதிரே மகன் இறந்து கொண்டிருப்பதை எந்த பெற்றோரால் பார்த்து கொண்டிருக்க முடியும்?
தெரிந்த ஒரே வழி! கடவுளிடம் முறையிடுவது தான். அதுதான் கிளம்பி விட்டார்கள், வைதீஸ்வரன் கோவிலுக்கு. பரிகாரம் பண்ண.
கூட வருவதாக இருந்த வேணு, கடைசி நிமிஷத்தில் உடல் நிலை காரணமாக போகவில்லை. இந்த விஷயம் திருடன் மாணிக்கத்திற்கு தெரியாது.
***
பங்களா : 20 -06-2012
இரவு மணி 2.00. பங்களா வாட்ச்மேன் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த நேரம். மாணிக்கம் காம்பவுண்ட் சுவர் எகிறி குதித்தான். மெதுவாக வீட்டின் கதவை கள்ள சாவி போட்டு திறந்து எஜமானரின் அறைக்குள் புகுந்தான். பீரோவை தொட்டான். உடனே ஒரு அலாரம் அலறியது. பக்கத்து அறையிலிருந்த வேணு “திருடன்” “திருடன்” என்று சத்தம் போட்டபடியே ஓடி வந்தான்.
தப்பிக்க நினைத்த மாணிக்கம், ஓர் கத்தியை காட்டி “சத்தம் போடாதே, கொன்னுடுவேன் “ என்று மிரட்டினான். இளங்கன்று பயமறியாது. வேணு தனது உடல் நோயை மறந்து, மாணிக்கத்தை நோக்கி பாய்ந்தான். “சதக்”. மாணிக்கத்தின் கத்தி வேணுவின் தொடையில் ஆழமாக பாய்ந்தது. ரத்தம் பீறிட்டது. வேணு கீழே சாய்ந்தான். மாணிக்கம், மற்ற வேலையாட்கள் வரு முன் தப்பி ஓடினான். வேலைக்காரர்கள் ‘பிடி பிடி’ என பின்னாடியே ஓடினர். அதற்குள் மாணிக்கம் ஜுட்.
***
போலீஸ் ஸ்டேஷன்: 21-06-2012
இன்ஸ்பெக்டர் நேர்கொண்டான். மகா திறமைசாலி. அவர் திருடன் மாணிக்கத்தை வலை போட்டு தேடிக் கொண்டிருந்தார். மாணிக்கத்தால் குத்தப் பட்டு ஒரு பையன் ஆஸ்பத்திரியில். உயிருக்கு போராடிக் கொண்டு. பணக்கார குடும்பம். அரசியல் செல்வாக்கு உள்ளவங்க. மேலதிகாரிகள் குடையறாங்க. நேர்கொண்டான் எல்லோரையும் விரட்டிக்கொண்டிருந்தார்
போன் கால். “ சார், மாணிக்கத்தை பிடிச்சிட்டோம். நேரே ஸ்டேஷனுக்கு வரோம்”.
“வெரி குட். கொண்டு வாங்க. ரெண்டு தட்டு தட்டி விசாரிப்போம்”.
***
தனியார் ஹாஸ்பிடல்: 21-06-2012
வேணு ஐ.சி.யு வில். மூக்கில், கையில் குழாய்கள். ஆழ்ந்த மயக்கத்தில். சுற்றி டாக்டர்கள், நர்ஸ்கள். அறை வெளியே , வேணுவின் பெற்றோர், கவலை தோய்ந்த முகத்துடன். பெரிய டாக்டரை பார்த்தவுடன் அம்மா ஓடி வந்தாள்.
“டாக்டர்! என் பையனுக்கு இப்போ எப்படி இருக்கு டாக்டர்?- ஒண்ணுமில்லையே!” நோயினால் உலகத்தை விட்டு எப்படியும் போகப்போறான் என்று தெரிந்தும், பெத்த மனது தனது பையன் பிழைக்க வேண்டுமென்று வேண்டியது.
“ரொம்ப ரத்தம் போயிருக்கு. கிட்டத்தட்ட இரண்டு லிட்டர். ட்ரீட்மென்ட் பண்ணிண்டிருக்கோம் இப்போ எதுவும் சொல்ல முடியாது.. பாக்கலாம். தைரிமாயிருங்க” – டாக்டர் ஸ்டாண்டர்ட் பதில்.
“என்னங்க! வேணு பிழைப்பானா?. டாக்டர் இப்படி சொல்றாரே.”-அம்மா கதறினாள்.
“கவலைப்படாதே! கடவுள் நம்மை நிச்சயம் கைவிட மாட்டார்”- அப்பா.
***
போலீஸ் ஸ்டேஷன்: 22-06-2012
மாணிக்கம் போலீஸ் கஸ்டடியில். தான் திருடப் போனதையும், யதேச்சையாக வேணுவை கத்தியால் குத்தியதையும் ஒப்புக்கொண்டு, ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிட்டான். எப்.ஐ.ஆர் ரெடி.
அப்போது வாசலில் இரண்டு பெரிய கார்கள் வந்து நின்றன. வேணுவின் அப்பா, அம்மா மற்றும் இரண்டு வக்கீல்கள் உள்ளே வந்தனர். இன்ஸ்பெக்டர் நேர்கொண்டான் எழுந்து வரவேற்றார். ஒரு வேளை வேணு இறந்து விட்டாரோ? கொலை கேஸ் ஆகி விட்டதோ? எண்ணங்கள் ஓடின அவர் மனதில்.
“இன்ஸ்பெக்டர்!. அந்த மாணிக்கத்தை...” – ஆரம்பித்தார் அப்பா.
“சார், உங்க பையனுக்கு ஒண்ணும் ஆகலியே? இப்போ எப்படி இருக்கார்? – நேர்கொண்டான் கவலை அவருக்கு.
“ஒண்ணும் ஆகலை. நல்லா இருக்கான். அது விஷயமாக பேசத்தான் வந்திருக்கோம்”.
“சொல்லுங்க சார்! மாணிக்கம் இப்போ எங்க கஸ்டடியில் தான் இருக்கான். எல்லா குற்றத்தையும் ஒப்புக்கொண்டான். கேஸ் போட்டு குறைந்தது ஐந்து வருடமாவது ஜெயில் தண்டனை வாங்கிடலாம்.”
பதறினார் அப்பா. “வேண்டாம்! வேண்டாம்! அதை சொல்லத்தான் ஓடோடி வந்தோம். அவன் பேரிலே இருக்கற கேசை வாபஸ் வாங்கி அவனை வெளியே விட்டுடுங்க. இதோ என் பையன் கையெழுத்திட்ட லெட்டர். எவ்வளவு செலவானாலும், நாங்க கொடுக்கிறோம், கேசை க்ளோஸ் பண்ணிடுங்க.”
இதே திரியில் .. *அடுத்த பாகமும் *பார்க்க ... நாளை !!)