PDA

View Full Version : எப்படி மறந்தோம் எம்மெய் தாயே?!



நாகரா
27-10-2012, 07:52 AM
எச்சிலை(எப்படந்) தனில்உனைப் பிடித்திட இயலும்
நெஞ்சுளே எந்தையோ டமர்ந்திடுந் தாயே
மெய்யுளே உயிர்த்துள உமையுனை விட்டு
எங்குதான் ஓடினும் பிடிபடு வாயோ
சற்குரு உருவினில் எம்மை ஈன்றாய்
பல்லுயிர்த் திரட்கும் தயவினைப் புரிந்திட
இச்சகத் தெருவினில் எம்மை வைத்தாய்
எப்படி மறந்தோம் எம்மெய் தாயே

அசத்துவம் என்னும் அஞ்ஞானத் திமிர்தான்
அழுத்திட எம்மைக் குருட்டுக் குழிக்குள்
தாமதம் என்னும் இயங்கா முடக்கமும்
இராசதம் என்னும் அடங்கா இயக்கமும்
கதியாய் சுத்த அசுத்த மாயை
மிதிக்க எம்மெய் மறந்தோம் தாயே
மதியில் ஞாபகம் மீளஎம் இருதயப்
பதியின் வாயிலைத் திறப்பாய் தாயே

ந.க
28-10-2012, 09:42 AM
சைவ தத்துவம் சாற்றும்(சொல்லும்)
மெய்ப்(உண்மைப்) பொருள் -
என்னை
உள்ளபடி
உன்னத
உண்மை நிலையில்
நீ உருவாக்கிய நிலையில்.

மீண்டும் உருவாக்கு
உலகோர் உய்ய -

தவிக்கின்றேன் இன்று
நான் உலகோடு
கொண்ட குணங்களில்,
உன்னதமான வேண்டுதல்.

நாகரா
01-11-2012, 12:47 PM
உம் அரும்பதிவுக்கு நன்றி திரு. கண்ணப்பு