நாகரா
27-10-2012, 07:52 AM
எச்சிலை(எப்படந்) தனில்உனைப் பிடித்திட இயலும்
நெஞ்சுளே எந்தையோ டமர்ந்திடுந் தாயே
மெய்யுளே உயிர்த்துள உமையுனை விட்டு
எங்குதான் ஓடினும் பிடிபடு வாயோ
சற்குரு உருவினில் எம்மை ஈன்றாய்
பல்லுயிர்த் திரட்கும் தயவினைப் புரிந்திட
இச்சகத் தெருவினில் எம்மை வைத்தாய்
எப்படி மறந்தோம் எம்மெய் தாயே
அசத்துவம் என்னும் அஞ்ஞானத் திமிர்தான்
அழுத்திட எம்மைக் குருட்டுக் குழிக்குள்
தாமதம் என்னும் இயங்கா முடக்கமும்
இராசதம் என்னும் அடங்கா இயக்கமும்
கதியாய் சுத்த அசுத்த மாயை
மிதிக்க எம்மெய் மறந்தோம் தாயே
மதியில் ஞாபகம் மீளஎம் இருதயப்
பதியின் வாயிலைத் திறப்பாய் தாயே
நெஞ்சுளே எந்தையோ டமர்ந்திடுந் தாயே
மெய்யுளே உயிர்த்துள உமையுனை விட்டு
எங்குதான் ஓடினும் பிடிபடு வாயோ
சற்குரு உருவினில் எம்மை ஈன்றாய்
பல்லுயிர்த் திரட்கும் தயவினைப் புரிந்திட
இச்சகத் தெருவினில் எம்மை வைத்தாய்
எப்படி மறந்தோம் எம்மெய் தாயே
அசத்துவம் என்னும் அஞ்ஞானத் திமிர்தான்
அழுத்திட எம்மைக் குருட்டுக் குழிக்குள்
தாமதம் என்னும் இயங்கா முடக்கமும்
இராசதம் என்னும் அடங்கா இயக்கமும்
கதியாய் சுத்த அசுத்த மாயை
மிதிக்க எம்மெய் மறந்தோம் தாயே
மதியில் ஞாபகம் மீளஎம் இருதயப்
பதியின் வாயிலைத் திறப்பாய் தாயே