ந.க
25-10-2012, 06:23 AM
உயிர்முளை
ஆக்கம் நடராஜா கண்ணப்பு
சிசு.....
மடக்கிய
கும்பிட்ட கை
உறங்கியபடி உயிர்முளை
கருவில் விழித்த குழந்தை
உயிர்முளை..
கூர்ப்பில் நான்.........
கேள்விக் குறி போல்
கூனிக் கொண்டே
தசைப் பெட்டியில்
தண்ணீர் பலத்தில்
உறைபோல் உலகில்
கரையும் காலுமாய்
மடங்கியபடி
முடிக்கிடந்து உள்ளே விழித்து...
முளையம் முளைக்கும்
அணுவில் உயிர்முளை கொள்ள
சவ்வு கவ்வி
உணர்முளை பரப்பி
செவிட்டு வாழ்வில்
செதில் மூடி
நீந்திக் கடல் குளித்து
ஓட்டில் ஊர்ந்து
புற்றில் அடங்கி
செட்டை அடித்து
குனிந்து இரை பொறுக்கி
ஓட்டுக் கூட்டில்
ஊர்ந்து ஒளிந்து
முளைக்கல்
முலைகள் முளைக்க
நாலுகாலில்
பிரசவம்
தலை கீழாய்
தரைப் பாயில்
தாயோ குருதி கக்கிக் கொண்டு,
கருப்பைச் சுவரில் கொழுவிய
தசையும் நார்களும்
பிய்த்துப் போட்ட பிண்டத் துகளாய்..
நாயும் நரியும் தூக்கிச் செல்லும்
அந்தப் பட்ட வெளியில் பிறந்தேன்,
ஆலமர விழுது ஒன்றில் ஏனை
காற்றில் அடிபட்ட துரும்பாய்
கொழுத்தும் கோடையில் தோளில்
போட்ட துண்டாய் கிடந்து நெளிந்தேன்.
இரண்டாம் பருவம்
சந்தைக் கூச்சலில்
வாயைக் கட்டிய நாயாய்
வலுவிழந்த எட்டி நின்றேன்
தெரு கால்களுக்கு விலக முடியாமல்
பள்ளிக்கூட
மூலை ஒன்றில்
மர பலகை இடுக்குகளில்
கழுத்துப் பட்டியோடு பிணைக்கப்பட்டேன்..
கொடுக்குப் பட்ட இரையாய்
துவரம் பிரம்பில்
தழும்பேறி ........
இரவும் பகலும் இரை நிரப்பி
கண்டதை கடித்துக் களிம்பேறிய பல்லோடு .....
பனை ஓலை
பாய் பதித்த
முத்திரைத் தோல்
பிஞ்சுத் தோலைப்
பாம்புத்தோலாய்
பயப் போர்வையோடு பள்ளி சென்றேன்...
புத்தகக் கட்டு தோளில் அடித்த முத்திரை
அடிமைத் தொழிலில்
அத்திவாரம்..
கணக்கு வாத்தியின்
நகம் கடித்த காதுச் சோணையில்
குருநாதரின் போதனையும்
ஓம் என்ற மந்திரமும் ......
பிரம்மக் குட்டுக்களும்
பயத்தைப் படைக்கும்
சிறைப்ப்ள்ளியில்
கைதிக்காலம் கற்கும்காலம்
தப்புக் கணக்கை வைப்புச் செய்தே ..
சண்டித்தனம் செய்யும்
குண்டனைச் சமாளிக்க
நட்புச்
சங்கீதம்
இதயச் சுரப்பியில் ஊற
பொட்டலமாய்
சட்டைப்பையில் இனிப்புச் சரை..
மெல்லிய முகங்கள்
சொல்லும் புன்னகை
பள்ளிகளில் பாடமாகும்
கல்லும் முள்ளும்
விதைத்த
வீதிகள் கடந்த
புழுதிப் பாதங்களில்
கெந்திப் பிடிக்கும்
இடைவேளை இராகங்கள்
சின்ன பாட்டில் இசைக்க
பசித்த மனம் படிக்கும்
சுகங்கள் கேட்க நிறைய
சிரித்துச் சிரித்துச்
சத்தம் செய்து
கரையும் காலத்தைச்
சுத்தம் செய்தேன்..
மூன்றாம் பருவம்
சரசுவதி கைகள்
கன்னம் அனணத்து முகத்தை ஏந்த
தாமரை தூக்கியது
தளிர் கொழுந்து வருடியது
அன்பு போதிக்க
சின்னவர்கள் உலகம் சிரித்தது
தேவதை பாதம் பள்ளி மணலில்
வளவும் பாதை வளைவும்
சுண்ணாம்புச் சுவர் பாசியும்
தமிழைத் தந்தன
நெஞ்சம் நெகிழ நெட்டுருச் செய்த
மலைக் குறத்தி பாடல்
மந்தியும் தேனும்
கோதிக் கிடக்கும் பலாவும்..
கெந்திய மனத்தைக்
கொம்பைக் கடந்து தாவும்
குரங்காய் பாய்ந்து பாய்ந்து
உண்ணத்
தமிழைத் தந்தாள் ..
மழலை பேசிய மூச்சில்
இலக்கியப் பேராறு
இரண்டாம் வகுப்பில்
மர வாங்கு புதையும்
மணல் மேடையில்
அந்தக் குச்சுக் கல்விக்கூடம்
கோடை மறந்து கொடும் பசிதுறந்து..
குதித்தன குழந்தைகள்
ஒல்லிக் கால்கள்
அன்பு ஓடை நோக்கி ஓடின
சளி சிந்தும் மூக்கில்
கொசு விரட்டி
தமிழ் கொலு ஏற்றிய
அந்தப் புனித தாய்
புகட்டிய தமிழ்
பூட்டிய நட்புச் சங்கிலி
புரிந்தன நண்பர்களின் மொழிகள்
அன்பு வேதமானதனால்
அக்னி ஆகின வெறும் பூச்சிகளும்....
பூசிக்கும் தமிழ் தந்த தாயே
விரண்ட எம்மை
துயர் விரட்டி விண் எட்ட வைத்தாய்,
பாலகர் பருவத்தின் பள்ளி வந்த சரசுவதியே
எல்லா நாளும் எமக்கு விஜயதசமி....
தாயே எம் கை விரல் பிடித்து
அகரம் வளைத்தாய்
உலகம் வளையம்
அது உன் வலயம்..
சுத்தமானவளே
கண்ணில் கருணை ஈரம் எடுத்தவளே
உன்னில் கற்றேன் உலகை உற்றேன்.....
தொடரும்....... ...............
ஆக்கம் நடராஜா கண்ணப்பு
சிசு.....
மடக்கிய
கும்பிட்ட கை
உறங்கியபடி உயிர்முளை
கருவில் விழித்த குழந்தை
உயிர்முளை..
கூர்ப்பில் நான்.........
கேள்விக் குறி போல்
கூனிக் கொண்டே
தசைப் பெட்டியில்
தண்ணீர் பலத்தில்
உறைபோல் உலகில்
கரையும் காலுமாய்
மடங்கியபடி
முடிக்கிடந்து உள்ளே விழித்து...
முளையம் முளைக்கும்
அணுவில் உயிர்முளை கொள்ள
சவ்வு கவ்வி
உணர்முளை பரப்பி
செவிட்டு வாழ்வில்
செதில் மூடி
நீந்திக் கடல் குளித்து
ஓட்டில் ஊர்ந்து
புற்றில் அடங்கி
செட்டை அடித்து
குனிந்து இரை பொறுக்கி
ஓட்டுக் கூட்டில்
ஊர்ந்து ஒளிந்து
முளைக்கல்
முலைகள் முளைக்க
நாலுகாலில்
பிரசவம்
தலை கீழாய்
தரைப் பாயில்
தாயோ குருதி கக்கிக் கொண்டு,
கருப்பைச் சுவரில் கொழுவிய
தசையும் நார்களும்
பிய்த்துப் போட்ட பிண்டத் துகளாய்..
நாயும் நரியும் தூக்கிச் செல்லும்
அந்தப் பட்ட வெளியில் பிறந்தேன்,
ஆலமர விழுது ஒன்றில் ஏனை
காற்றில் அடிபட்ட துரும்பாய்
கொழுத்தும் கோடையில் தோளில்
போட்ட துண்டாய் கிடந்து நெளிந்தேன்.
இரண்டாம் பருவம்
சந்தைக் கூச்சலில்
வாயைக் கட்டிய நாயாய்
வலுவிழந்த எட்டி நின்றேன்
தெரு கால்களுக்கு விலக முடியாமல்
பள்ளிக்கூட
மூலை ஒன்றில்
மர பலகை இடுக்குகளில்
கழுத்துப் பட்டியோடு பிணைக்கப்பட்டேன்..
கொடுக்குப் பட்ட இரையாய்
துவரம் பிரம்பில்
தழும்பேறி ........
இரவும் பகலும் இரை நிரப்பி
கண்டதை கடித்துக் களிம்பேறிய பல்லோடு .....
பனை ஓலை
பாய் பதித்த
முத்திரைத் தோல்
பிஞ்சுத் தோலைப்
பாம்புத்தோலாய்
பயப் போர்வையோடு பள்ளி சென்றேன்...
புத்தகக் கட்டு தோளில் அடித்த முத்திரை
அடிமைத் தொழிலில்
அத்திவாரம்..
கணக்கு வாத்தியின்
நகம் கடித்த காதுச் சோணையில்
குருநாதரின் போதனையும்
ஓம் என்ற மந்திரமும் ......
பிரம்மக் குட்டுக்களும்
பயத்தைப் படைக்கும்
சிறைப்ப்ள்ளியில்
கைதிக்காலம் கற்கும்காலம்
தப்புக் கணக்கை வைப்புச் செய்தே ..
சண்டித்தனம் செய்யும்
குண்டனைச் சமாளிக்க
நட்புச்
சங்கீதம்
இதயச் சுரப்பியில் ஊற
பொட்டலமாய்
சட்டைப்பையில் இனிப்புச் சரை..
மெல்லிய முகங்கள்
சொல்லும் புன்னகை
பள்ளிகளில் பாடமாகும்
கல்லும் முள்ளும்
விதைத்த
வீதிகள் கடந்த
புழுதிப் பாதங்களில்
கெந்திப் பிடிக்கும்
இடைவேளை இராகங்கள்
சின்ன பாட்டில் இசைக்க
பசித்த மனம் படிக்கும்
சுகங்கள் கேட்க நிறைய
சிரித்துச் சிரித்துச்
சத்தம் செய்து
கரையும் காலத்தைச்
சுத்தம் செய்தேன்..
மூன்றாம் பருவம்
சரசுவதி கைகள்
கன்னம் அனணத்து முகத்தை ஏந்த
தாமரை தூக்கியது
தளிர் கொழுந்து வருடியது
அன்பு போதிக்க
சின்னவர்கள் உலகம் சிரித்தது
தேவதை பாதம் பள்ளி மணலில்
வளவும் பாதை வளைவும்
சுண்ணாம்புச் சுவர் பாசியும்
தமிழைத் தந்தன
நெஞ்சம் நெகிழ நெட்டுருச் செய்த
மலைக் குறத்தி பாடல்
மந்தியும் தேனும்
கோதிக் கிடக்கும் பலாவும்..
கெந்திய மனத்தைக்
கொம்பைக் கடந்து தாவும்
குரங்காய் பாய்ந்து பாய்ந்து
உண்ணத்
தமிழைத் தந்தாள் ..
மழலை பேசிய மூச்சில்
இலக்கியப் பேராறு
இரண்டாம் வகுப்பில்
மர வாங்கு புதையும்
மணல் மேடையில்
அந்தக் குச்சுக் கல்விக்கூடம்
கோடை மறந்து கொடும் பசிதுறந்து..
குதித்தன குழந்தைகள்
ஒல்லிக் கால்கள்
அன்பு ஓடை நோக்கி ஓடின
சளி சிந்தும் மூக்கில்
கொசு விரட்டி
தமிழ் கொலு ஏற்றிய
அந்தப் புனித தாய்
புகட்டிய தமிழ்
பூட்டிய நட்புச் சங்கிலி
புரிந்தன நண்பர்களின் மொழிகள்
அன்பு வேதமானதனால்
அக்னி ஆகின வெறும் பூச்சிகளும்....
பூசிக்கும் தமிழ் தந்த தாயே
விரண்ட எம்மை
துயர் விரட்டி விண் எட்ட வைத்தாய்,
பாலகர் பருவத்தின் பள்ளி வந்த சரசுவதியே
எல்லா நாளும் எமக்கு விஜயதசமி....
தாயே எம் கை விரல் பிடித்து
அகரம் வளைத்தாய்
உலகம் வளையம்
அது உன் வலயம்..
சுத்தமானவளே
கண்ணில் கருணை ஈரம் எடுத்தவளே
உன்னில் கற்றேன் உலகை உற்றேன்.....
தொடரும்....... ...............