PDA

View Full Version : தீபாவளி வாழ்த்துக்கள்



மதி
23-10-2012, 05:07 PM
அன்பு மன்ற உறவுகளுக்கு,

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி திருநாள் சிறப்பு நிகழ்ச்சிக்கு தன் வாழ்த்தை குரல் மூலமாவும் திரியில் பதிவு செய்தும் நிகழ்ச்சி வெற்றியாக்கி 'இது நம்ம பண்பலைங்க' என்று நிரூபிச்சிட்டீங்க..

இதையே வெற்றியின் முதல்படியாக நினைத்து நம்ம பண்பலையில் உங்களுடைய குரலும் தீபாவளி வாழ்த்துக்களாய் ஒலிக்க வேண்டும். அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை ஒலிக்கோப்பாய் பதிவு செய்து tmantramfm@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

குரலைப் பதிவு செய்வதில் சந்தேகம் இருப்பின் இந்தத் (http://www.tamilmantram.com/vb/showthread.php/30374-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D) திரி உங்களுக்கு உதவும்.

உங்களின் மேலான வாழ்த்துக்களை எதிர்பார்த்து

தமிழ்மன்ற பண்பலைக் குழுவினர்

ஆதி
25-10-2012, 06:55 AM
உறவுகளே, ராக்கெட் வேகத்தில் வந்து சர வெடி மாதிரி உங்கள் தீபாவளி வாழ்த்தை சங்கு சக்கிரமா சுழலவிடுங்கள் அவை பூத்தொட்டி போல தீபாவளி அன்று பண்பலையில் பூதூவும்

அனுராகவன்
28-10-2012, 05:31 AM
பல சரவெடிகள் காணலாம் போல..

மதி
31-10-2012, 05:05 AM
மேலெழுப்புகிறேன்.. வாழ்த்துக்களை அனுப்பிய உறவுகள் இங்கே தெரிவியுங்கள்.. :icon_b:

இந்த வார இறுதிக்குள் அனுப்பி விட்டால் பிண்ணனி வேலைகள் சுலபம்.

அனுப்பிடுவீங்கல்ல...! :cool:

ம்ம்.. அதான்.. கண்டிப்பா அனுப்பணும்..சொல்லிட்டேன்..:icon_rollout:

சிவா.ஜி
31-10-2012, 07:32 AM
நான் இன்னைக்கு அனுப்பிடுறேன் மதி.

Mano.G.
31-10-2012, 07:55 AM
நான் கேள்விகளை எதிர் பார்த்துகிட்டு இருக்கேன்

மதி
31-10-2012, 08:08 AM
மனோண்ணே கேள்விகள் பரிசீலனையில் இருக்கு. அனுப்பிக்கிட்டே இருக்கேன். :icon_b:

jayanth
31-10-2012, 09:25 AM
அன்பு மன்ற உறவுகளுக்கு,

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி திருநாள் சிறப்பு நிகழ்ச்சிக்கு தன் வாழ்த்தை குரல் மூலமாவும் திரியில் பதிவு செய்தும் நிகழ்ச்சி வெற்றியாக்கி 'இது நம்ம பண்பலைங்க' என்று நிரூபிச்சிட்டீங்க..

இதையே வெற்றியின் முதல்படியாக நினைத்து நம்ம பண்பலையில் உங்களுடைய குரலும் தீபாவளி வாழ்த்துக்களாய் ஒலிக்க வேண்டும். அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை ஒலிக்கோப்பாய் பதிவு செய்து tmantramfm@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

குரலைப் பதிவு செய்வதில் சந்தேகம் இருப்பின் இந்தத் (http://www.tamilmantram.com/vb/showthread.php/30374-பண்பலையில்-உங்கள்-குரல்-ஒலிக்க-என்ன-செய்யவேண்டும்-விளக்கப்படங்களுடன்) திரி உங்களுக்கு உதவும்.

உங்களின் மேலான வாழ்த்துக்களை எதிர்பார்த்து

தமிழ்மன்ற பண்பலைக் குழுவினர்

மதி,
ஒலிக்கோப்பாய் பதிவு செய்து அனுப்ப இயலவில்லையென்றால் வெறும் வாழ்த்துக்களை மாத்திரம் பதிவு செய்யலாமா...

ஆதி
31-10-2012, 10:24 AM
மதி,
ஒலிக்கோப்பாய் பதிவு செய்து அனுப்ப இயலவில்லையென்றால் வெறும் வாழ்த்துக்களை மாத்திரம் பதிவு செய்யலாமா...

செய்யலாம் அண்ணா

jayanth
31-10-2012, 11:06 AM
செய்யலாம் அண்ணா

தகவலுக்கு நன்றி ஆதி...

இப்பொழுதே பதிவு செய்து விடுகின்றேன்...

jayanth
31-10-2012, 11:48 AM
என் அன்பினும் அன்பிற்குரிய தமிழ் மன்ற உறவுகளுக்கு என் சார்பிலும் என் குடும்பத்தார் சார்பிலும் மனமார்ந்த இனிய தீபஒளித் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இத் தீபஒளித் திருநாளில் எல்லாம் வல்ல இறைவன் உறவுகளுக்கு நல்ஆரோக்கியத்தையும், நிறைந்த செல்வத்தையும் மற்றும் குறைவில்லா வளத்தையும் வழங்க வேண்டுகின்றேன். இத்தருணத்தில் தீப ஒளித் திருநாளுக்கு உகந்த பி. சுசீலா அவர்கள் பாடிய "உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீயாட" என்ற "கல்யாணப் பரிசு" படப் பாடலை மன்ற உறவுகளுடன் கேட்க விரும்புகின்றேன்.

ஆதி
31-10-2012, 12:37 PM
வணக்கம் மக்கா,

தீபாவளிக்கு வாழ்த்தை ஒலியாக்கம் செய்து அனுப்பவோரும், இங்கே வாழ்த்தை பதிவு செய்கிறவோரும், நவம்பர் 9 தேதிக்கு முன் செய்துவிட்டால் மற்ற வேலைகளை செய்ய வசதியாக இருக்கும்..

அது போல் தீபாவளி வாழ்த்தோடு பண்பலை துவங்குவது பற்றி சில வார்த்தைகளை சொல்லுங்கள் மக்கா, உங்க எதிர்ப்பார்ப்பு, விருப்பம் இப்படி எதையும் சொல்லுங்க, பண்பலைக்கு வாழ்த்து சொல்ல விரும்புகிறவர்களும் உங்கள் வாழ்த்தை சொல்லுங்கள் மக்கா

வேறு எந்த சந்தேகம் இருந்தாலும் மதியை அணுகவும் :)

மஞ்சுபாஷிணி
31-10-2012, 01:13 PM
மன்ற உறவுகள் எல்லோருக்கும் அன்பு தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்பா....

கலைவேந்தன்
31-10-2012, 01:30 PM
ஒரு கவிதை அரங்கம் வைத்து சிலரின் கவிதைகளை வாசிக்கச்சொல்லி அரைமணி அல்லது ஒருமணி நேர ப்ரோகிராமை வைக்கலாமே.. சரின்னு சொன்னா என் கவிதை ரெண்டு மூணு நாளில் எழுதி வாசித்து ஒலிப்பதிவு செய்து அனுப்புகிறேன். ஆதி கவனிங்கப்பா..

மதி
31-10-2012, 02:32 PM
ஐயா
எல்லாவற்றையும் ஆலோசித்தோம். முதல் முயற்சி என்பதாலும் பண்பலையில் நமக்கு அனுபவம் இல்லாமையாலும் கவியரங்கத்தை பின்னொரு நாளில் செய்யலாமென்று முடிவு செய்தோம். பொங்கலுக்கு செய்துடலாம் கலைவேந்தரே.

arun
31-10-2012, 04:06 PM
மன்ற உறவுகளுக்கு எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

இந்த தருணத்தில் ரமணா படத்தில் வரும் வானும் அதிரவே வானம் வெடிக்கலாம் ரோசி ரோசி என்ற பாடலை ஒலிபரப்ப வேண்டுகிறேன்

ந.க
31-10-2012, 05:14 PM
வானலை வருவோம் -
மத்தாப்பாய் தமிழ் மன்றம் வாழ்த்து வெடித்து
வானலையில் மகிழும்......

எங்கள் தமிழுறவு
எங்கும் என்றும் எதிலும்
ஓர் அணியாய்
வேர் பிடிக்கும் ....

ஓங்கி வளரும் எம் சமுதாயம்
நம் தமிழர்
நாம் தமிழர் என்றுரைத்து
தலை நிமிர்வார்..........

தீபத்திருநாள் சிறப்பு வாழ்த்துக்கள் மன்றம் வரும் உறவுகளுக்கு உரித்தாகட்டும்.......எல்லோரும் வாழ்க!

ஜானகி
02-11-2012, 04:18 AM
மருள் எனும் இருள் நீங்கி

அருள் எனும் வரம் தங்கி - மெய்ப்

பொருள் எனும் ஒளி காண

தீப ஆவளி ஏற்றி வைப்போம், வாரீர் !

உற்சாகம், உல்லாசம் மத்தாய்ப்பாய்ப் பூரிக்க,

வேற்றுமை, பொல்லாங்கு சரவெடியாய்ச் சிதறி ஓட,

வாழ்க்கைச் சக்கரம் நிறைவாய் மலர்ந்து சுழல,

கைகோர்த்து ஒன்றாய்க் கொண்டாடுவோம், வாரீர் !

[ மன்ற உறவுகளுக்கான என்னுடைய தீபாவளி வாழ்த்துக்களை, ஆதி அவர்கள் தன் குரலில் ஒலிபரப்புவதாக முன்னமேயே கூறியுள்ளார்...நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன் ]

M.Jagadeesan
02-11-2012, 06:12 AM
ஒரு கவிதை அரங்கம் வைத்து சிலரின் கவிதைகளை வாசிக்கச்சொல்லி அரைமணி அல்லது ஒருமணி நேர ப்ரோகிராமை வைக்கலாமே.. சரின்னு சொன்னா என் கவிதை ரெண்டு மூணு நாளில் எழுதி வாசித்து ஒலிப்பதிவு செய்து அனுப்புகிறேன். ஆதி கவனிங்கப்பா..

தாங்கள் முயற்சி செய்த முதல் கவியரங்கம் என்னாயிற்று?

HEMA BALAJI
02-11-2012, 04:39 PM
மன்ற நட்புகள் அனைவருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள். ஒலி வழி பதிந்தும் அனுப்பிவிட்டேன். இங்கேயும் பதிகின்றேன்..

Keelai Naadaan
02-11-2012, 06:25 PM
தமிழ் மன்ற உறவுகள் எல்லோருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

த.ஜார்ஜ்
04-11-2012, 04:01 PM
தீப திருநாள் வாழ்வில் புதிய விடியலாகவும், உங்கள் வீடுகளின் மின் தட்டுபாட்டை நீக்குவதாகவும் அமையட்டும் என்று வாழ்த்துகிறேன்.

rema
05-11-2012, 06:20 AM
தாங்கள் முயற்சி செய்த முதல் கவியரங்கம் என்னாயிற்று?

அதானே ! நல்ல யோசனை..ஜகதீசன் ஐயா சொல்வதுப் போல் முயற்சிக்கலாமே ?

முரளி
05-11-2012, 09:25 AM
தீப ஒளி திருநாளில்,
துன்பங்கள் தொலைய ,
மகிழ்ச்சி பெருக,
ஒளிமயமாக வாழ்வு மலர,
மன்ற அன்பர்கள்,
அவரது உற்றார் உறவினர்
நண்பருடன் , பகையின்றி நீடு வாழ
உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்...

நாஞ்சில் த.க.ஜெய்
05-11-2012, 11:39 AM
அனுப்பிய வாழ்த்து கிடைத்ததெனில் பதில் மொழிந்தால் நன்று..

மதி
05-11-2012, 12:35 PM
கிடைத்தது

நன்றி ஜெய்

ஆதி
05-11-2012, 02:29 PM
வணக்கம் உறவுகளே, வியாழக்கிழமைக்குள்(08/11/12) உங்கள் வாழ்த்தை அனுப்பி வைத்துவிடுங்கள் தோழர்களே, அப்போதுதான் நிகழ்ச்சியை சிறப்பாக செய்ய முடியும், அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்க்கிறோம்

இது நமது பண்பலை, நாமே முன்னடித்திச் செல்வோம்

ஜான்
06-11-2012, 01:14 AM
தகவலுக்கு நன்றி தம்பி ஆதி

rema
10-11-2012, 07:19 AM
வானம்போல் விரிந்து பரந்திருக்கும் தமிழ் மன்ற வெளியில் மின்னிக் கொண்டிருக்கும் மன்றச் சுடர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் , தீபாவளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்....இந்த நன்னாளிலே உலக மானிடர் அனைவருக்கும் அக இருளும் புற இருளும் அகன்று அருளெனும் ஒளி அன்பெனும் விளக்கினால் எங்கும் படர்ந்து சுடரிட ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்வோம்....அனைவருக்கும் இவ்வாய்ப்பினை வழங்கிய தமிழ் மன்ற நிர்வாகிகளுக்கு சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் .....வாழ்த்துவது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ரேமா

jayanth
10-11-2012, 12:45 PM
தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பு எப்பொழுது...???

மதி
10-11-2012, 01:31 PM
தீபாவளியன்று மாலை ஐந்துமணியளவில் துவங்கும். விரைவில் அறிவிப்பு வரும் ஜெயந்த் அண்ணா

jayanth
10-11-2012, 01:41 PM
தீபாவளியன்று மாலை ஐந்துமணியளவில் துவங்கும். விரைவில் அறிவிப்பு வரும் ஜெயந்த் அண்ணா


தகவலுக்கு நன்றி மதி...

பால்ராஜ்
12-11-2012, 05:06 AM
தமிழ் மன்ற நண்பர்கள் அனைவருக்கும்
தீபாவளி வாழ்த்துக்கள்

Mano.G.
12-11-2012, 08:13 AM
தீபாவளியன்று மாலை ஐந்துமணியளவில் துவங்கும். விரைவில் அறிவிப்பு வரும் ஜெயந்த் அண்ணா

நாளை ஐந்து மணியளவில் மலேசியாவிற்க்கு ஏழரை மணியளவில் , ஓகே , ஓகே, நான் ரெடி பண்பலை அதிகாரபூர்வ ஒலிபரப்பை கேட்பதற்கு, அதோடு தம்பி நிகழ்வின் நிரல் வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்குமே. மனோ.ஜி

nilavu5
12-11-2012, 10:15 AM
தமிழ் மன்ற நண்பர்கள் அனைவருக்கும்
தீபாவளி வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி வாழ்த்து
உழைப்பே மத்தாப்பு....! உண்மையே பட்டாசு...!
அறவழி வாழ்வும்......அரவணைப்பும்....
அழகாய் சுழலும்.....தரச் சக்கரம்...!
கோபம் குறைப்பது புஸ் வானம்..!
குழந்தை போல் சிரிப்பது சீனி சரம்..!
அன்பாய் பேசினால் அது அல்வா...!
பாசமாய் நேசித்தால் பால்கோவா...!
ரசித்து வாழ்ந்தால் அது ரசகுல்லா...!
இனிக்க நடந்தால் இனிய பாதுசா..!
பூந்தி கேசரி நெய் முறுக்கு - அது
பக்தி சாந்தி மெய் உணர்வு...!- நாம்
கடமையை ஒழுங்காய் செய்வோம் - நம்
கவலைகள் புஸ்ஸாய்ப் போகும்- நாம்
கடவுளை வணங்கி வாழ்வோம் - வரும்
காலங்கள் சக்சஸ் ஆகும்... ! நம்
இதயம் என்பது திரு விளக்கு - நல்ல
நினைவுகள் அதிலே ஒளி தீபம்...! எனவே
நீங்கள் நினைத்தால் தினமும் தீபாவளி...!
நினைவில் ஏற்றுங்கள் நம்பிக்கை தீப ஒளி..!
அனைவருக்கும் எனது
இதயம் நிறைந்த இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..!

நன்றி /
நிலவு

ஜான்
13-11-2012, 12:56 AM
தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.....

நாஞ்சில் த.க.ஜெய்
13-11-2012, 07:49 AM
மனோஜ் ஐயா கூறுவது போல் நிகழ்ச்சி நிரல் தொகுத்தால் நன்றாக இருக்கும்..