முரளி
20-10-2012, 05:36 AM
என்னைப் போல் எவன்? (‘கூர்’ந்து ‘பார்க்’கவும்)
ஒரு நாளைப் போல இதே தொந்திரவு. தூங்க விட மாட்டேங்கிறாங்க. “பாருங்க! உங்களுக்கு வயசாயிண்டே போறது. ரத்த கொதிப்பு, சர்க்கரை, இதோட சேர்ந்து கொலஸ்ட்ரால் வேற. வாக்கிங் கிளம்புங்க.” மனைவயின் அதட்டல்.
வேறே வழியில்லை. கிளம்பிட்டேன். காலை 6.00 மணி. பார்க்லே கொஞ்சம் கூட்டம். கேட் கிட்டே வரிசையாக ஸ்கூட்டர்/மோட்டார் பைக்குகள், ஒட்டி ஒட்டி. வழியே இல்லை, வண்டிகளை இடித்து கொண்டே உள்ளே நுழைந்தேன்.
“கொஞ்சம் கூட அறிவே இல்லை. இப்படியா வண்டிகளை பார்க் பண்ணுவாங்க” அலுத்துக் கொண்டே சக நண்பர் வளைந்து வளைந்து நுழைந்தார். அவரது கையில் ஒரு சைனா மொபைல், “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே” அந்த கால எம்.ஜி.ஆர் பாடல் உரக்க பிளிரிக் கொண்டிருந்தது. ‘யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே’. பார்க்க முரட்டு மீசையுடன், கொஞ்சம் பெரிய தொப்பையுடன், போலீஸ் மாதிரி இருப்பார்.. நான் அவருக்கு வைத்திருந்த பெயர் எஸ்.பி (சவுண்ட் பார்ட்டி).
“பார்க் வந்திருக்காங்க இல்லியா! அதான் இப்படி பார்க் பண்ணியிருக்காங்க.!” ஜோக் கடித்தேன். என்னை ஏதோ பூச்சி மாதிரி பார்த்துக் கொண்டே வேகமாக நடந்தார். அப்படி என்ன தப்பாக சொல்லி விட்டேன்?
நெறைய பேர் பார்க்கை சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார்கள். சில பேர் இடம் வந்து கொண்டிருந்தார்கள், என்ன வேண்டுதலோ? கொஞ்சம் பேர் ஸ்லோவாக, சிலர் அசுர கதியில், அரசியல் பேசிக் கொண்டு, போனில் காலேஜ் சீட் பேரம் பேசிக்கொண்டு.
சில யுவதிகள், பறக்காத தலை முடியை கோதிய படியே இடுப்பசைக்க, சில வாலிப வயோதிக அன்பர்கள் அவர்களை ஜொள்ள, ரெண்டு மூணு விடலை ஜோடிகள் வாக்கிங் பெயரில் கடலை போட்டுக்கொண்டு, ‘பார்க்’க கண் ரெண்டு போதாது. பார்த்துக் கொண்டே ஊர்ந்தேன்.
என்னோட வேக நடைக்கு, எறும்பு கூட ஓவர் டேக் பண்ணிடும். எறும்பு என்பது இன்னொரு வயதான தம்பதியினருக்கு நான் வெச்ச பேர். ஜோடியாக ஒருவர் பின் ஒருவராக அசைவார்கள்.
சொல்ல மறந்திட்டேன். பார்க் ரெகுலராக வரவங்க எனக்கு வெச்ச பேர் ‘ஆமை’. அவ்வளவு வேகம். இந்த லட்சணத்தில் எனக்கு உடல் எடை குறைய வேறு ஆசை.
ஆயிற்று, 10 ரவுண்டு முடிந்தது. கிளம்ப வேண்டும். வெளியே கேட்டில் வரிசையாக வண்டிகள். “இங்கு வண்டிகளை நிறுத்தக் கூடாது” கேட் நோட்டீஸ் போர்டு கீழே ஸ்கூட்டர்/ பைக்குகள். இடைவெளி இல்லாமல். வெளியே வரும் போது, ஒரு பைக் தொப்பையில் இடி. அனிச்சையாக திரும்பினேன். இந்த பக்கம் இன்னொரு வண்டியின் ஹான்டல் பார் இடித்து முட்டி அடி. அந்த வண்டி கவிழ்ந்து, பின்னால் வந்த ஒருவருக்கு காயம். அதற்குள், எங்கிருந்து பார்த்தாரோ, விழுந்த வண்டியின் ஓனர் ஓடோடி வந்து “என்ன சார், வண்டிய தள்ளிட்டீங்களே! ‘பார்க்’காம கண்ணை மூடிட்டு வரீங்களே?” அடிக்கற மாதிரி பதறினார். இன்டிகேட்டர் லைட் உடைந்தால் யாருக்கு தான் கோபம் வராது?
“ஹலோ! வண்டியை உங்களை யார் சார் வழியில் நிறுத்த சொன்னாங்க? இங்கேயே அடி பட்டு கிடக்கிறோம், சத்தம் போடறீங்க” நான் ஆரம்பிப்பதற்கு முன்னால் கீழே விழுந்தவர் எகிறினார். அவ்வளவு தான், பிபி எனக்கும் எகிறிவிட்டது. நான் கத்த, “நாங்க பின்னே எங்கே விடறது, இந்த பக்கம் குப்பை வண்டி, அந்த பக்கம் கார்ப்பரேஷன் தோண்டிய பள்ளம். எங்களுக்கு ஏது இடம்? சொல்லுங்க! ” வண்டி காரர் கத்த , மற்றவர்கள் கூச்சல் போட, கூட்டம் சேர்ந்து விட்டது. கொஞ்சம் ரசா பாசம் ஆகிவிட்டது.
என்கிட்டே இல்லாத ஒண்ணை இருக்கான்னு வண்டி காரரின் நண்பர் வினவியதும் (வேறென்ன, மூளைதான்), கோபம் தாங்காமல் அடிக்க போனேன். (அவரும் அங்கேதான் தன் ஸ்கூட்டியை பார்க் பண்ணியிருந்தார்). துரதிர்ஷ்டவசமாக அவரிடம் அடி வாங்கிக்கொண்டேன்.
அன்றிலிருந்து மனசுக்குள் ஒரு வெறுப்பு.. பத்து நாள் பார்க் பக்கமே போகாமலிருந்தேன். என்னை அடித்தவர் முகம் மற்றும் அவரது டூ வீலர் ஞாபகம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர பழி வாங்க மனது துடித்தது. மறக்க முயன்று கொண்டிருந்தேன். முடியவில்லை.
இந்த பத்து நாளும் ரோட்டில் வாக்கிங். ஆனால், மாநகராட்சி தோண்டல். அவர்களது உபயத்தில் ரோடே பள்ளமும் மேடுமாக. குழியில் விழுந்தால், எழுந்துக்க முடியாது. போட்டு மூட வேண்டியதுதான். குப்பை வேறு.
வேறு வழி, திரும்பவும் பார்க்குக்கு போனேன். நோ சேஞ். வண்டிகள் கேட் வாசலில் பார்கிங். என்னை அடித்தவரோட ஸ்கூட்டி நின்று கொண்டிருந்தது. அடி வாங்கியது மறக்க முடியவில்லை. பழி வாங்க மனது துடித்தது. என்ன பண்ணலாம்? வண்டியை தள்ளி விடுவோமா? யாராவது பார்த்து விட்டால்? டயரை பஞ்சராக்கி விட்டால்? ஆனால் அது சாத்தியமில்லையே. படிச்சவங்க பண்ற காரியமா இது? மாட்டிக்கொண்டால் எவ்வளவு அவமானம் ? யோசனையுடன் பார்க்கில் நடந்தேன்.. அன்று ஆமையே அசால்டாக என்னை ஓவர்டேக் பண்ணியிருக்கும். திடீரென்று ஒரு பல்பு என் மண்டைக்குள் எரிந்தது. ஐடியா. பழி வாங்க.
***
மீதி ... . இந்த திரியிலேயே
ஒரு நாளைப் போல இதே தொந்திரவு. தூங்க விட மாட்டேங்கிறாங்க. “பாருங்க! உங்களுக்கு வயசாயிண்டே போறது. ரத்த கொதிப்பு, சர்க்கரை, இதோட சேர்ந்து கொலஸ்ட்ரால் வேற. வாக்கிங் கிளம்புங்க.” மனைவயின் அதட்டல்.
வேறே வழியில்லை. கிளம்பிட்டேன். காலை 6.00 மணி. பார்க்லே கொஞ்சம் கூட்டம். கேட் கிட்டே வரிசையாக ஸ்கூட்டர்/மோட்டார் பைக்குகள், ஒட்டி ஒட்டி. வழியே இல்லை, வண்டிகளை இடித்து கொண்டே உள்ளே நுழைந்தேன்.
“கொஞ்சம் கூட அறிவே இல்லை. இப்படியா வண்டிகளை பார்க் பண்ணுவாங்க” அலுத்துக் கொண்டே சக நண்பர் வளைந்து வளைந்து நுழைந்தார். அவரது கையில் ஒரு சைனா மொபைல், “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே” அந்த கால எம்.ஜி.ஆர் பாடல் உரக்க பிளிரிக் கொண்டிருந்தது. ‘யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே’. பார்க்க முரட்டு மீசையுடன், கொஞ்சம் பெரிய தொப்பையுடன், போலீஸ் மாதிரி இருப்பார்.. நான் அவருக்கு வைத்திருந்த பெயர் எஸ்.பி (சவுண்ட் பார்ட்டி).
“பார்க் வந்திருக்காங்க இல்லியா! அதான் இப்படி பார்க் பண்ணியிருக்காங்க.!” ஜோக் கடித்தேன். என்னை ஏதோ பூச்சி மாதிரி பார்த்துக் கொண்டே வேகமாக நடந்தார். அப்படி என்ன தப்பாக சொல்லி விட்டேன்?
நெறைய பேர் பார்க்கை சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார்கள். சில பேர் இடம் வந்து கொண்டிருந்தார்கள், என்ன வேண்டுதலோ? கொஞ்சம் பேர் ஸ்லோவாக, சிலர் அசுர கதியில், அரசியல் பேசிக் கொண்டு, போனில் காலேஜ் சீட் பேரம் பேசிக்கொண்டு.
சில யுவதிகள், பறக்காத தலை முடியை கோதிய படியே இடுப்பசைக்க, சில வாலிப வயோதிக அன்பர்கள் அவர்களை ஜொள்ள, ரெண்டு மூணு விடலை ஜோடிகள் வாக்கிங் பெயரில் கடலை போட்டுக்கொண்டு, ‘பார்க்’க கண் ரெண்டு போதாது. பார்த்துக் கொண்டே ஊர்ந்தேன்.
என்னோட வேக நடைக்கு, எறும்பு கூட ஓவர் டேக் பண்ணிடும். எறும்பு என்பது இன்னொரு வயதான தம்பதியினருக்கு நான் வெச்ச பேர். ஜோடியாக ஒருவர் பின் ஒருவராக அசைவார்கள்.
சொல்ல மறந்திட்டேன். பார்க் ரெகுலராக வரவங்க எனக்கு வெச்ச பேர் ‘ஆமை’. அவ்வளவு வேகம். இந்த லட்சணத்தில் எனக்கு உடல் எடை குறைய வேறு ஆசை.
ஆயிற்று, 10 ரவுண்டு முடிந்தது. கிளம்ப வேண்டும். வெளியே கேட்டில் வரிசையாக வண்டிகள். “இங்கு வண்டிகளை நிறுத்தக் கூடாது” கேட் நோட்டீஸ் போர்டு கீழே ஸ்கூட்டர்/ பைக்குகள். இடைவெளி இல்லாமல். வெளியே வரும் போது, ஒரு பைக் தொப்பையில் இடி. அனிச்சையாக திரும்பினேன். இந்த பக்கம் இன்னொரு வண்டியின் ஹான்டல் பார் இடித்து முட்டி அடி. அந்த வண்டி கவிழ்ந்து, பின்னால் வந்த ஒருவருக்கு காயம். அதற்குள், எங்கிருந்து பார்த்தாரோ, விழுந்த வண்டியின் ஓனர் ஓடோடி வந்து “என்ன சார், வண்டிய தள்ளிட்டீங்களே! ‘பார்க்’காம கண்ணை மூடிட்டு வரீங்களே?” அடிக்கற மாதிரி பதறினார். இன்டிகேட்டர் லைட் உடைந்தால் யாருக்கு தான் கோபம் வராது?
“ஹலோ! வண்டியை உங்களை யார் சார் வழியில் நிறுத்த சொன்னாங்க? இங்கேயே அடி பட்டு கிடக்கிறோம், சத்தம் போடறீங்க” நான் ஆரம்பிப்பதற்கு முன்னால் கீழே விழுந்தவர் எகிறினார். அவ்வளவு தான், பிபி எனக்கும் எகிறிவிட்டது. நான் கத்த, “நாங்க பின்னே எங்கே விடறது, இந்த பக்கம் குப்பை வண்டி, அந்த பக்கம் கார்ப்பரேஷன் தோண்டிய பள்ளம். எங்களுக்கு ஏது இடம்? சொல்லுங்க! ” வண்டி காரர் கத்த , மற்றவர்கள் கூச்சல் போட, கூட்டம் சேர்ந்து விட்டது. கொஞ்சம் ரசா பாசம் ஆகிவிட்டது.
என்கிட்டே இல்லாத ஒண்ணை இருக்கான்னு வண்டி காரரின் நண்பர் வினவியதும் (வேறென்ன, மூளைதான்), கோபம் தாங்காமல் அடிக்க போனேன். (அவரும் அங்கேதான் தன் ஸ்கூட்டியை பார்க் பண்ணியிருந்தார்). துரதிர்ஷ்டவசமாக அவரிடம் அடி வாங்கிக்கொண்டேன்.
அன்றிலிருந்து மனசுக்குள் ஒரு வெறுப்பு.. பத்து நாள் பார்க் பக்கமே போகாமலிருந்தேன். என்னை அடித்தவர் முகம் மற்றும் அவரது டூ வீலர் ஞாபகம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர பழி வாங்க மனது துடித்தது. மறக்க முயன்று கொண்டிருந்தேன். முடியவில்லை.
இந்த பத்து நாளும் ரோட்டில் வாக்கிங். ஆனால், மாநகராட்சி தோண்டல். அவர்களது உபயத்தில் ரோடே பள்ளமும் மேடுமாக. குழியில் விழுந்தால், எழுந்துக்க முடியாது. போட்டு மூட வேண்டியதுதான். குப்பை வேறு.
வேறு வழி, திரும்பவும் பார்க்குக்கு போனேன். நோ சேஞ். வண்டிகள் கேட் வாசலில் பார்கிங். என்னை அடித்தவரோட ஸ்கூட்டி நின்று கொண்டிருந்தது. அடி வாங்கியது மறக்க முடியவில்லை. பழி வாங்க மனது துடித்தது. என்ன பண்ணலாம்? வண்டியை தள்ளி விடுவோமா? யாராவது பார்த்து விட்டால்? டயரை பஞ்சராக்கி விட்டால்? ஆனால் அது சாத்தியமில்லையே. படிச்சவங்க பண்ற காரியமா இது? மாட்டிக்கொண்டால் எவ்வளவு அவமானம் ? யோசனையுடன் பார்க்கில் நடந்தேன்.. அன்று ஆமையே அசால்டாக என்னை ஓவர்டேக் பண்ணியிருக்கும். திடீரென்று ஒரு பல்பு என் மண்டைக்குள் எரிந்தது. ஐடியா. பழி வாங்க.
***
மீதி ... . இந்த திரியிலேயே