poo
06-01-2004, 01:36 PM
நாம் இப்போது பார்க்கப்போவது...மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல... மிகச்சிறந்த மனிதரும்கூட......
1985-ஆம் ஆண்டு தனது 20-வது வயதில்...மெல்லிய தேகத்தோடு
சிட்னி அரங்கில் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில்
அறிமுகம்..
அன்று ஜாம்பாவான்கள் மத்தியில் அஞ்சா நெஞ்சனாய் நெஞ்சை
நிமிர்த்தியவர்..
இன்று எல்லோர் நெஞ்சிலும் இடம் பிடித்து இமயமாய் உயர்ந்தவர்..
செல்லமாய் "ஸ்டீவ்" என அழைக்கப்படும் "ஸ்டீவன் வாஹ்.."
ஆஸி அணியின் புகழ் இன்று உச்சத்தில் நிற்பதற்கு ஏணிப்படிகளாய் நின்றவர்...
மூன்றாம்தர வீரராய் உள்ளே வந்தவர்...1999-ஆம் ஆண்டு முதல்தர
வீரராய்...தலைமைப் பதவியை ஏற்றார்...
அதே ஆண்டில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் தனி நபராய்
போராடி ஆஸியை இறுதிக்கு இட்டுச்சென்று கோப்பையை தட்டிவந்த தங்கம்...
அதுமுதலாய் தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வென்று சாதனை
படைத்த சிங்கம்..
முதல் டெஸ்டில் இருந்த வேகமும் விவேகமும்... 168-வது போட்டியான இறுதி டெஸ்டிலும் இருந்ததை எவராலும் மறுக்க முடியாது...
சத்தான பல சாதனைகளை படைத்த சரித்தர நாயகன்...
தலைமையேற்ற 57 டெஸ்ட் போட்டிகளில் 41 வெற்றிகளை படைத்து
வரலாற்று ஏடுகளில் வாசம் செய்பவர் (9-தோல்வி, 7-டிரா)
இவர் எல்லோரது ஆசிகளுக்கும் சொந்தக்காரர்...அதிக சதங்கள்
எடுத்த ஆஸிக்காரர்... (32-சதங்கள்)
அதிசய வீரர் ஆலன் பார்டருக்கு அடுத்ததாய் அதிக ரன்கள் அள்ளிய துள்ளல் வீரர்..(10,927)
ஒருதினப் போட்டியிலும் உயர்ந்து நின்றவர்... (325 போட்டிகளில் 7,569 ரன்கள்..)
ஒரு தொடரில் அடைந்த தோல்வியால் துரத்தப்பட்டு .. ஏராள ரசிகர்கள் துயரப்பட்டு.... வேதனையில் மூழ்க..
ரணங்கள்.. சாதாரணங்களென... சாதனைகளை கிடைத்த களத்தில்... (டெஸ்ட் போட்டிகளில்) தளராமல் தொடர்ந்த தன்னம்பிக்கை மனிதர்...
இந்தியாவிற்கு எதிராய் தொடங்கிய இவரது கிரிக்கெட் சகாப்தம்...
இந்தியாவிற்கு எதிராகவே முடிந்தது...
இன்று விடைசொல்ல..., களத்தில் வலம்வந்த இவரை தரையில்
கால்படவிடாமல் மற்ற வீரர்கள் மாறிமாறி தோள்களில்
சுமந்துசென்றதை கண்டு கண்கள் பனித்தன....
http://specials.rediff.com/cricket/2004/jan/06cric7.jpg
அந்த நாட்டின் பிரதமர் ஜான் ஹோவார்ட் முதல்... மைதானத்தில்
மழைத்தண்ணீர் பிழியும் தொழிலாளிவரை அரங்கில் எழுந்து நின்று
கரகோஷத்தோடு விழி நனைத்து வழியனுப்பிவைத்த விதம்.....அடடா..
மனைவி-மகள்கள்-மகன்... இவர்களை வாரியணைத்து வாஞ்சையாய்
முத்தமிட்டு மார்போடு அணைத்தபடி அரங்கைவிட்டு வெளியேறிய
காட்சி நெஞ்சத்திரையில் நெகிழ்ச்சியாய் நிற்கிறது...
http://specials.rediff.com/cricket/2004/jan/06cric8.jpg
இவரைக்கண்டு நெஞ்சுருக இன்னொரு காரணமுண்டு.....
இந்தியரால் அதிகம் நேசிக்கப்படும் ஒரே ஆஸிக்காரரான
இவர்...மனிதநேயத்தில் மாணிக்கம்...
கோல்கட்டாவின் புறநகர் பகுதியில் "உதயன்" என்ற அமைப்பை
ஆதவற்ற பெண் குழந்தைகளுக்கு நடத்திவரும் உன்னத மனிதர்...இவர்....
தனது வருமானத்தில் பெரும்பகுதியை இதற்காக செலவிடும் இவரின்
எதிர்கால ஆசை..
"இந்தியாவில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக மிகப்பெரிய
பள்ளியொன்றை தொடங்க வேண்டும்" என்பதே!!!...
1985-ஆம் ஆண்டு தனது 20-வது வயதில்...மெல்லிய தேகத்தோடு
சிட்னி அரங்கில் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில்
அறிமுகம்..
அன்று ஜாம்பாவான்கள் மத்தியில் அஞ்சா நெஞ்சனாய் நெஞ்சை
நிமிர்த்தியவர்..
இன்று எல்லோர் நெஞ்சிலும் இடம் பிடித்து இமயமாய் உயர்ந்தவர்..
செல்லமாய் "ஸ்டீவ்" என அழைக்கப்படும் "ஸ்டீவன் வாஹ்.."
ஆஸி அணியின் புகழ் இன்று உச்சத்தில் நிற்பதற்கு ஏணிப்படிகளாய் நின்றவர்...
மூன்றாம்தர வீரராய் உள்ளே வந்தவர்...1999-ஆம் ஆண்டு முதல்தர
வீரராய்...தலைமைப் பதவியை ஏற்றார்...
அதே ஆண்டில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் தனி நபராய்
போராடி ஆஸியை இறுதிக்கு இட்டுச்சென்று கோப்பையை தட்டிவந்த தங்கம்...
அதுமுதலாய் தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வென்று சாதனை
படைத்த சிங்கம்..
முதல் டெஸ்டில் இருந்த வேகமும் விவேகமும்... 168-வது போட்டியான இறுதி டெஸ்டிலும் இருந்ததை எவராலும் மறுக்க முடியாது...
சத்தான பல சாதனைகளை படைத்த சரித்தர நாயகன்...
தலைமையேற்ற 57 டெஸ்ட் போட்டிகளில் 41 வெற்றிகளை படைத்து
வரலாற்று ஏடுகளில் வாசம் செய்பவர் (9-தோல்வி, 7-டிரா)
இவர் எல்லோரது ஆசிகளுக்கும் சொந்தக்காரர்...அதிக சதங்கள்
எடுத்த ஆஸிக்காரர்... (32-சதங்கள்)
அதிசய வீரர் ஆலன் பார்டருக்கு அடுத்ததாய் அதிக ரன்கள் அள்ளிய துள்ளல் வீரர்..(10,927)
ஒருதினப் போட்டியிலும் உயர்ந்து நின்றவர்... (325 போட்டிகளில் 7,569 ரன்கள்..)
ஒரு தொடரில் அடைந்த தோல்வியால் துரத்தப்பட்டு .. ஏராள ரசிகர்கள் துயரப்பட்டு.... வேதனையில் மூழ்க..
ரணங்கள்.. சாதாரணங்களென... சாதனைகளை கிடைத்த களத்தில்... (டெஸ்ட் போட்டிகளில்) தளராமல் தொடர்ந்த தன்னம்பிக்கை மனிதர்...
இந்தியாவிற்கு எதிராய் தொடங்கிய இவரது கிரிக்கெட் சகாப்தம்...
இந்தியாவிற்கு எதிராகவே முடிந்தது...
இன்று விடைசொல்ல..., களத்தில் வலம்வந்த இவரை தரையில்
கால்படவிடாமல் மற்ற வீரர்கள் மாறிமாறி தோள்களில்
சுமந்துசென்றதை கண்டு கண்கள் பனித்தன....
http://specials.rediff.com/cricket/2004/jan/06cric7.jpg
அந்த நாட்டின் பிரதமர் ஜான் ஹோவார்ட் முதல்... மைதானத்தில்
மழைத்தண்ணீர் பிழியும் தொழிலாளிவரை அரங்கில் எழுந்து நின்று
கரகோஷத்தோடு விழி நனைத்து வழியனுப்பிவைத்த விதம்.....அடடா..
மனைவி-மகள்கள்-மகன்... இவர்களை வாரியணைத்து வாஞ்சையாய்
முத்தமிட்டு மார்போடு அணைத்தபடி அரங்கைவிட்டு வெளியேறிய
காட்சி நெஞ்சத்திரையில் நெகிழ்ச்சியாய் நிற்கிறது...
http://specials.rediff.com/cricket/2004/jan/06cric8.jpg
இவரைக்கண்டு நெஞ்சுருக இன்னொரு காரணமுண்டு.....
இந்தியரால் அதிகம் நேசிக்கப்படும் ஒரே ஆஸிக்காரரான
இவர்...மனிதநேயத்தில் மாணிக்கம்...
கோல்கட்டாவின் புறநகர் பகுதியில் "உதயன்" என்ற அமைப்பை
ஆதவற்ற பெண் குழந்தைகளுக்கு நடத்திவரும் உன்னத மனிதர்...இவர்....
தனது வருமானத்தில் பெரும்பகுதியை இதற்காக செலவிடும் இவரின்
எதிர்கால ஆசை..
"இந்தியாவில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக மிகப்பெரிய
பள்ளியொன்றை தொடங்க வேண்டும்" என்பதே!!!...