ரௌத்திரன்
10-10-2012, 07:15 AM
தூது செல்லத்
தோழி இன்றி
வாடும் உந்தன் தலைவியே! -நான்
எது சொல்ல?
என்ன சொல்ல?
யாவும் அறிவாய் தலைவனே!
கோவி லாக
இருந்த வீடு
காவல் நிலையம் ஆனதே! -அதில்
தாவி வந்த
சொந்த மெல்லாம்
கம்பி யாகிப் போனதே!
கனவில் உன்னைச்
சேர்வ தற்கும்
காவல் போடும் சுற்றமே! -நாம்
மனித ராகப்
பிறந்த தன்றி
செய்த தென்ன குற்றமே?
முகத்தை உந்தன்
முகத்தைப் பார்க்க
முடிய வில்லை கொஞ்சமே! -விரல்
நகத்தைப் போல
உயிரைக் கடித்துத்
துப்பத் தூண்டும் நெஞ்சமே!
எந்தக் குரலைக்
கேட்ட போதும்
காது ரெண்டும் கூசுமே! -அட
உந்தன் மடியில்
செத்து விட்டால்
சாவும் சுகந்தம் வீசுமே!
ஆவல் கொண்ட
நெஞ்சம் என்றும்
காவல் கண்டு நடுங்குமோ? -மழை
தூவும் நீல
வானம் என்றும்
வட்டத் திற்குள் அடங்குமோ?
தூக்கம் எந்தன்
கண்ணை விட்டுத்
தூரம் சென்று விட்டதே! -உன்
ஏக்கம் எந்தன்
உயிருக் குள்ளே
எருக்கம் பாலாய்ச் சொட்டுதே!
உள்ளே வாங்கும்
மூச்சுக் காற்றும்
உந்தன் பேரைச் சொல்லுதே! -அது
உள்ளே எரியும்
விரகத் தீக்கு
விசிறி யாகிக் கொல்லுதே!
தாயின் மடியும்
தணலாய் மாறிச்
சுட்டெ ரிக்கும் வேளையே! -உன்
தூய மார்பில்
சாய்ந்து விட்டால்
நெருஞ்சிக் காடும் சோலையே!
வேலி நூறு
போட்ட போதும்
வேந்தன் நிழலே இலக்காகும்! -நீ
தாலி கொண்டு
வரும்தி சைதான்
பாவை எனக்குக் கிழக்காகும்!
-------------ரௌத்திரன்
தோழி இன்றி
வாடும் உந்தன் தலைவியே! -நான்
எது சொல்ல?
என்ன சொல்ல?
யாவும் அறிவாய் தலைவனே!
கோவி லாக
இருந்த வீடு
காவல் நிலையம் ஆனதே! -அதில்
தாவி வந்த
சொந்த மெல்லாம்
கம்பி யாகிப் போனதே!
கனவில் உன்னைச்
சேர்வ தற்கும்
காவல் போடும் சுற்றமே! -நாம்
மனித ராகப்
பிறந்த தன்றி
செய்த தென்ன குற்றமே?
முகத்தை உந்தன்
முகத்தைப் பார்க்க
முடிய வில்லை கொஞ்சமே! -விரல்
நகத்தைப் போல
உயிரைக் கடித்துத்
துப்பத் தூண்டும் நெஞ்சமே!
எந்தக் குரலைக்
கேட்ட போதும்
காது ரெண்டும் கூசுமே! -அட
உந்தன் மடியில்
செத்து விட்டால்
சாவும் சுகந்தம் வீசுமே!
ஆவல் கொண்ட
நெஞ்சம் என்றும்
காவல் கண்டு நடுங்குமோ? -மழை
தூவும் நீல
வானம் என்றும்
வட்டத் திற்குள் அடங்குமோ?
தூக்கம் எந்தன்
கண்ணை விட்டுத்
தூரம் சென்று விட்டதே! -உன்
ஏக்கம் எந்தன்
உயிருக் குள்ளே
எருக்கம் பாலாய்ச் சொட்டுதே!
உள்ளே வாங்கும்
மூச்சுக் காற்றும்
உந்தன் பேரைச் சொல்லுதே! -அது
உள்ளே எரியும்
விரகத் தீக்கு
விசிறி யாகிக் கொல்லுதே!
தாயின் மடியும்
தணலாய் மாறிச்
சுட்டெ ரிக்கும் வேளையே! -உன்
தூய மார்பில்
சாய்ந்து விட்டால்
நெருஞ்சிக் காடும் சோலையே!
வேலி நூறு
போட்ட போதும்
வேந்தன் நிழலே இலக்காகும்! -நீ
தாலி கொண்டு
வரும்தி சைதான்
பாவை எனக்குக் கிழக்காகும்!
-------------ரௌத்திரன்