ரௌத்திரன்
08-10-2012, 04:59 AM
(அன்று ஆகஸ்டு 15 . 2012
காலை நேரம்.
தேநீர்க் கடையில் உட்கார்ந்திருக்கிறேன்.
ஒரு கையில் டீ கிளாஸ். மறுகையில் சிகரெட்
ஒரு முஸ்லிம் நபர் என்னை நெருங்கி தேசியக்கொடியை என் சட்டையில் குத்திவிட்டுப் புன்னகையோடு விடைபெறுகிறார்.
அன்று மட்டும் அதுவரை எந்த ஆண்டும் இல்லாத ஒரு நெகிழ்ச்சி என் நெஞ்சமெங்கும் பரவியது. அது சுதந்திரநாட்டின் குடிமகன் என்ற சந்தோஷமல்ல. மதநல்லிணக்கம் குறித்த மகிழ்ச்சியே!
ஆனால் அந்த மகிழ்ச்சியையும் முறித்துப் போட்டது "புதிய ஜனநாயகம்" புரட்சி மாத இதழ் கொண்டுவந்த செய்தி.
அது தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஒன்று. எது என்பது இப்போது என் நினைவில் இல்லை.
அந்தப் பெண்மணி ஊராட்சி மன்றத் தலைவி. ஆயினும் அவர் தேசியக்கொடியை ஏற்றுவதில் உயர்ந்த ஜாதிக்காரர்களுக்கு உடன்பாடில்லை.
தடுத்து நிறுத்தினார்கள். தாக்கித் துரத்தினார்கள். தாமே ஏற்றினார்கள். இவை அனைத்தும் காவல் துறையின் உதவியோடு நடந்தேறியவை என்பது வேட்கக்கேட்டின் விளிம்பு)
சொல்லுங்கள்!
ஆகஸ்டு 15
சுதந்திர தினமா?
அல்லது
ஆதிக்க வர்க்கம் கொண்டாடும்
ஆண்டுவிழாவா?
அங்கே
ஏற்றி முடித்தது
தேசியக் கொடியா?
அல்லது
ஜாதிக்கொடியா?
அது சரி
தேசியக்கொடியிலேயே
வர்ணபேதங்கள் இருக்கும்போது
தேசத்தில் இருக்கக் கூடாதா என்ன?
சொல்லுங்கள்!
பிராமணக் காற்று
அரிஜனக் காற்று
அகிலத்தில் உண்டா?
"உயர்ந்த ஜாதி"
"உயர்ந்த ஜாதி" என்று
உயிரதிர
உறுமுகிறவர்களே!
உம்மைப் பார்த்துக் கேட்கிறேன்.
கீழ்சாதிக் காரனைத்
தீண்டியதால்
தீட்டுப்பட்டுவிட்டது காற்றென்று
சுவாசத்தை நிறுத்திச்
செத்துவிடச்
சம்மதமா?
எத்தனைச் சூரியன்கள்
உதித்தென்ன?
குருடர்களுக்கு விடியவா போகிறது?
எத்தனை கங்கைகள்
கலந்தென்ன?
கடலின் உப்பு போய்விடுமா?
அறிவிலிகாள்!
அறிவீரா?
அன்று
அந்தத் தேசியக் கொடியை
ஏற்றுவதற்காக
எத்தனைத் தாய்மார்களின்
தாலிக்கொடிகள் இறக்கப்பட்டன
என்பதை அறிவீரா?
தேசியக்கொடியின் வெண்மை
எத்தனைப் பெண்களின்
வெள்ளைப் புடவைகள் என்று
விளங்குவீரா?
அசோகச் சக்கரம்
எத்தனைச் சுமங்கலிகளின்
நெற்றிகளில் இருந்து
துடைக்கப்பட்ட பொட்டென்று
தெரியுமா?
அட
ஜாதிக்குப் பிறந்த
ஜடங்களே!
அதென்ன
பூணூல் என்று நினைத்தீரோ
உயர்ந்த ஜாதிக்காரன் மட்டும்
உரிமையோடு தொட்டுப்பார்க்க?
எப்போது
ஜாதியின் கரங்கள் தீண்டினவோ
அப்போதே
தேசியக்கொடி
தீட்டுப்பட்டுவிட்டது......
எப்போது
ஜாதியின் கரங்கள் ஏற்றினவோ
அப்போதே
தேசியக்கொடி
கோவணத் துண்டாய்க்
கேவலப்பட்டுவிட்டது.....
சந்தேகமென்ன?
நீங்கள் பறக்கவிட்டது
நம் நாட்டின்
தேசியக் கொடியை மாத்திரமல்ல
மானத்தையும் சேர்த்துத்தான்.
--------------ரௌத்திரன்
காலை நேரம்.
தேநீர்க் கடையில் உட்கார்ந்திருக்கிறேன்.
ஒரு கையில் டீ கிளாஸ். மறுகையில் சிகரெட்
ஒரு முஸ்லிம் நபர் என்னை நெருங்கி தேசியக்கொடியை என் சட்டையில் குத்திவிட்டுப் புன்னகையோடு விடைபெறுகிறார்.
அன்று மட்டும் அதுவரை எந்த ஆண்டும் இல்லாத ஒரு நெகிழ்ச்சி என் நெஞ்சமெங்கும் பரவியது. அது சுதந்திரநாட்டின் குடிமகன் என்ற சந்தோஷமல்ல. மதநல்லிணக்கம் குறித்த மகிழ்ச்சியே!
ஆனால் அந்த மகிழ்ச்சியையும் முறித்துப் போட்டது "புதிய ஜனநாயகம்" புரட்சி மாத இதழ் கொண்டுவந்த செய்தி.
அது தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஒன்று. எது என்பது இப்போது என் நினைவில் இல்லை.
அந்தப் பெண்மணி ஊராட்சி மன்றத் தலைவி. ஆயினும் அவர் தேசியக்கொடியை ஏற்றுவதில் உயர்ந்த ஜாதிக்காரர்களுக்கு உடன்பாடில்லை.
தடுத்து நிறுத்தினார்கள். தாக்கித் துரத்தினார்கள். தாமே ஏற்றினார்கள். இவை அனைத்தும் காவல் துறையின் உதவியோடு நடந்தேறியவை என்பது வேட்கக்கேட்டின் விளிம்பு)
சொல்லுங்கள்!
ஆகஸ்டு 15
சுதந்திர தினமா?
அல்லது
ஆதிக்க வர்க்கம் கொண்டாடும்
ஆண்டுவிழாவா?
அங்கே
ஏற்றி முடித்தது
தேசியக் கொடியா?
அல்லது
ஜாதிக்கொடியா?
அது சரி
தேசியக்கொடியிலேயே
வர்ணபேதங்கள் இருக்கும்போது
தேசத்தில் இருக்கக் கூடாதா என்ன?
சொல்லுங்கள்!
பிராமணக் காற்று
அரிஜனக் காற்று
அகிலத்தில் உண்டா?
"உயர்ந்த ஜாதி"
"உயர்ந்த ஜாதி" என்று
உயிரதிர
உறுமுகிறவர்களே!
உம்மைப் பார்த்துக் கேட்கிறேன்.
கீழ்சாதிக் காரனைத்
தீண்டியதால்
தீட்டுப்பட்டுவிட்டது காற்றென்று
சுவாசத்தை நிறுத்திச்
செத்துவிடச்
சம்மதமா?
எத்தனைச் சூரியன்கள்
உதித்தென்ன?
குருடர்களுக்கு விடியவா போகிறது?
எத்தனை கங்கைகள்
கலந்தென்ன?
கடலின் உப்பு போய்விடுமா?
அறிவிலிகாள்!
அறிவீரா?
அன்று
அந்தத் தேசியக் கொடியை
ஏற்றுவதற்காக
எத்தனைத் தாய்மார்களின்
தாலிக்கொடிகள் இறக்கப்பட்டன
என்பதை அறிவீரா?
தேசியக்கொடியின் வெண்மை
எத்தனைப் பெண்களின்
வெள்ளைப் புடவைகள் என்று
விளங்குவீரா?
அசோகச் சக்கரம்
எத்தனைச் சுமங்கலிகளின்
நெற்றிகளில் இருந்து
துடைக்கப்பட்ட பொட்டென்று
தெரியுமா?
அட
ஜாதிக்குப் பிறந்த
ஜடங்களே!
அதென்ன
பூணூல் என்று நினைத்தீரோ
உயர்ந்த ஜாதிக்காரன் மட்டும்
உரிமையோடு தொட்டுப்பார்க்க?
எப்போது
ஜாதியின் கரங்கள் தீண்டினவோ
அப்போதே
தேசியக்கொடி
தீட்டுப்பட்டுவிட்டது......
எப்போது
ஜாதியின் கரங்கள் ஏற்றினவோ
அப்போதே
தேசியக்கொடி
கோவணத் துண்டாய்க்
கேவலப்பட்டுவிட்டது.....
சந்தேகமென்ன?
நீங்கள் பறக்கவிட்டது
நம் நாட்டின்
தேசியக் கொடியை மாத்திரமல்ல
மானத்தையும் சேர்த்துத்தான்.
--------------ரௌத்திரன்