View Full Version : என்னுள் நீ
இனியவள்
03-10-2012, 08:59 PM
நீ என்னுள் ஆட்சி
செய்யும் நிமிடங்களனைத்தும்
பொக்கிக்ஷமாய் என்னுள்
ஆழப் புதைந்து
நாணிச் சிவந்து கண்
மூடும் வேளை
கனவாய் வந்து
செல்லச் சில்மிக்ஷங்கள்
நீ செய்கையில்
நிஜத்தில் உன்னோடு
வாழுமின்பத்தை நிழலுகலில்
நான் அடைந்தேன்..!
A Thainis
04-10-2012, 03:47 PM
என்னுள் நீ இன்ப வெள்ளம், வாழ்த்துக்கள் இனியவளே
இனியவள்
04-10-2012, 10:46 PM
நன்றி தைனிஸ்..!
கீதம்
09-10-2012, 03:46 AM
கனவு நனவாகட்டும் என்று வாழ்த்துவார்கள். இங்கே கனவு நனவிலும் இனிக்கிறதே...
வாழ்த்துக்கள் இனியவள். இன்னும் தொடரட்டும் இனிய கனவுகள்.
ரௌத்திரன்
12-10-2012, 10:53 AM
நிழலுகலில்---அப்படீன்னா?----------ரெளத்திரன்
Sasi Dharan
12-10-2012, 12:48 PM
காதலில் பெண்மையின் நாணம்
என்றுமே அழகுதான்...
இந்த கவிதையும்...
இனியவள்
17-10-2012, 03:50 PM
ரொளத்திரன் அவர்களே..
நினைவுகள்,கனவுகளை இங்கு நான் நிழல்+உலகம் - நிழலுகு எனக்குறிப்பிட்டுள்ளேன்..!
தவறு இருப்பின் மன்னிக்கவும்..!
சுகந்தப்ரீதன்
28-10-2012, 08:06 PM
ஏக்கங்களே கனவுகளாக... அவையே எழுத்துகளாக... உளக்குறிப்பை உரைத்தவிதம் உவகையூட்டுகிறது.. வாழ்த்துக்கள்..!!:icon_b:
நிழலுகலில் நிழலுலகில் (நிழல்+உலகில்)
இனியவள்.. தங்கள் எழுத்துபிழை யாமறிவோம்... எல்லோரும் அறிவரோ..?!