இனியவள்
02-10-2012, 10:50 AM
பத்துமாதம் சுகமான*
சுமையென தன்னுள்ளம்
அன்புவுள்ளம் பெருக்கெடுக்க*
காத்திருந்தாள் அன்னையிவள்
பிஞ்சுள்ளம் முகம்காண..!
விதி வேறு கூற
அவள் விதி இதுவென
கூற அலரிவிட்டாள்
தாயிவள் - நான்
கண்ட கனவனைத்தும்
இவனைப் என்னுள்
செதுக்கி பிஞ்சுவிரல்
நான் பிடிக்க பஞ்சுப்
பாதம் இவ்வுலகை மிதிக்க
என்னிரு கண்களும்
பரவசம் கொள்ளும்
ஆனந்த நிலையே..
நானின்றி போனாலும்
இவன் பிறக்கும் வரம் ஓன்றே
எனக்கு வேண்டும் - இறைவாவென*
தாயுள்ளம் வேண்ட
கர்ப்பக் குழந்தை
பிஞ்சுக் கரம் கொண்டு
கெஞ்சிக் கேட்டது
கடவுளிடம்
என்னைப் பெற
என்னைச் சுமப்பவள்
இயற்கையெய்வதை விட
பத்து மாதம் இவள்
கருவில் தவமிருந்த
மகிழ்வோடு இவ்வுலகை
தீண்டாது உன் மடி - நான்
சேர்கிறேன் இறைவா..!
கண் திறந்தார் தாயுமானவர்
தாயும் சேயும் நலமென
மென்னகை புரிந்தார்
வைத்தியர்..
ஆனந்தம் பொங்கிடும் பரவசம்
அன்னையவள் முகத்தினில்
பொளர்ணமி நிலவொன்று
பச்சிளம் குழந்தையில்...
போராட்டம் இனிதே
நிறைவுற - கொண்டாட்டம்
ஆரம்பமாகியது இவர்கள்
வாழ்க்கையில்
சுமையென தன்னுள்ளம்
அன்புவுள்ளம் பெருக்கெடுக்க*
காத்திருந்தாள் அன்னையிவள்
பிஞ்சுள்ளம் முகம்காண..!
விதி வேறு கூற
அவள் விதி இதுவென
கூற அலரிவிட்டாள்
தாயிவள் - நான்
கண்ட கனவனைத்தும்
இவனைப் என்னுள்
செதுக்கி பிஞ்சுவிரல்
நான் பிடிக்க பஞ்சுப்
பாதம் இவ்வுலகை மிதிக்க
என்னிரு கண்களும்
பரவசம் கொள்ளும்
ஆனந்த நிலையே..
நானின்றி போனாலும்
இவன் பிறக்கும் வரம் ஓன்றே
எனக்கு வேண்டும் - இறைவாவென*
தாயுள்ளம் வேண்ட
கர்ப்பக் குழந்தை
பிஞ்சுக் கரம் கொண்டு
கெஞ்சிக் கேட்டது
கடவுளிடம்
என்னைப் பெற
என்னைச் சுமப்பவள்
இயற்கையெய்வதை விட
பத்து மாதம் இவள்
கருவில் தவமிருந்த
மகிழ்வோடு இவ்வுலகை
தீண்டாது உன் மடி - நான்
சேர்கிறேன் இறைவா..!
கண் திறந்தார் தாயுமானவர்
தாயும் சேயும் நலமென
மென்னகை புரிந்தார்
வைத்தியர்..
ஆனந்தம் பொங்கிடும் பரவசம்
அன்னையவள் முகத்தினில்
பொளர்ணமி நிலவொன்று
பச்சிளம் குழந்தையில்...
போராட்டம் இனிதே
நிறைவுற - கொண்டாட்டம்
ஆரம்பமாகியது இவர்கள்
வாழ்க்கையில்