M.Jagadeesan
29-09-2012, 12:40 PM
கண்ணே ! மணியே ! கற்கண்டுப் பெட்டகமே!
பொன்னே !கொடியே ! புனையா ஓவியமே !
அன்றலர்ந்த தாமரையே ! ஆயிரம் நிலவொளியே !
என்றெல்லாம் உன்னை வர்ணித்த வார்த்தைகள்
பொய்யாகிப் போனதெண்ணி பொருமுகிறேன் பொற்கொடியே !
உனக்குக்
கோவைப்பழ இதழென்று
கொக்கரித்து நானிருந்தேன்
ஆனால் அது
சாயம் விளைவித்த
மாயமென்று நானறிந்து
காயம் மிகக் கொண்டேன்
கண்மணியே நீ அறிவாய் !
உனக்கு
ஆறடிக் கூந்தல் என்று
அதிசயித்து நானிருந்தேன்
ஆனால் அது
வேரடி பிடிக்காத
வெறுங் கூந்தல் என்றறிந்து
வேதனை மிகக் கொண்டேன்
வெந்துயரம் நான் அடைந்தேன்.
உனக்குக்
காளையரைக் கவர்ந்து இழுக்கும்
காந்தக் கண்களென
கர்வம்மிகக் கொண்டிருந்தேன்
ஆனால் அது
காண்டாக்ட் லென்ஸ் பொருத்திய
கண்களென அறிந்தபோது
கவலை மிகக்கொண்டேன்.
உன்னுடைய
அங்கமெல்லாம் மின்னும்
ஆபரணங்கள் அத்தனையும்
தங்கமென எண்ணித்
தருக்கித் திரிந்தேன் நான்.
ஆனால் அது ஆடவரைக்
கவர்வதற்கு ஆயிழை நீ அணிந்த
கவரிங் நகை என்றறிந்து
கவலை மிகக் கொண்டேன்
கர்வ பங்கம் நானடைந்தேன்.
நீயும் பொய் ; உன்நினைவும் பொய்
நீ என்மீது கொண்ட
காதலும் பொய்யென்று கலங்குகிறேன்
நீர் உள்ளளவும்; நிலம் உள்ளளவும்
வான் உள்ளளவும்; வளி உள்ளளவும்
பார் உள்ளளவும்; உன்காதல்
அழியாது நிற்கின்ற
அக்மார்க் காதலென்றால்
நான் உனைச் சந்திப்பேன்
இல்லையெனில்
மன்னிப்பாய்! இதுவே நம்
கடைசி சந்திப்பு!
பொன்னே !கொடியே ! புனையா ஓவியமே !
அன்றலர்ந்த தாமரையே ! ஆயிரம் நிலவொளியே !
என்றெல்லாம் உன்னை வர்ணித்த வார்த்தைகள்
பொய்யாகிப் போனதெண்ணி பொருமுகிறேன் பொற்கொடியே !
உனக்குக்
கோவைப்பழ இதழென்று
கொக்கரித்து நானிருந்தேன்
ஆனால் அது
சாயம் விளைவித்த
மாயமென்று நானறிந்து
காயம் மிகக் கொண்டேன்
கண்மணியே நீ அறிவாய் !
உனக்கு
ஆறடிக் கூந்தல் என்று
அதிசயித்து நானிருந்தேன்
ஆனால் அது
வேரடி பிடிக்காத
வெறுங் கூந்தல் என்றறிந்து
வேதனை மிகக் கொண்டேன்
வெந்துயரம் நான் அடைந்தேன்.
உனக்குக்
காளையரைக் கவர்ந்து இழுக்கும்
காந்தக் கண்களென
கர்வம்மிகக் கொண்டிருந்தேன்
ஆனால் அது
காண்டாக்ட் லென்ஸ் பொருத்திய
கண்களென அறிந்தபோது
கவலை மிகக்கொண்டேன்.
உன்னுடைய
அங்கமெல்லாம் மின்னும்
ஆபரணங்கள் அத்தனையும்
தங்கமென எண்ணித்
தருக்கித் திரிந்தேன் நான்.
ஆனால் அது ஆடவரைக்
கவர்வதற்கு ஆயிழை நீ அணிந்த
கவரிங் நகை என்றறிந்து
கவலை மிகக் கொண்டேன்
கர்வ பங்கம் நானடைந்தேன்.
நீயும் பொய் ; உன்நினைவும் பொய்
நீ என்மீது கொண்ட
காதலும் பொய்யென்று கலங்குகிறேன்
நீர் உள்ளளவும்; நிலம் உள்ளளவும்
வான் உள்ளளவும்; வளி உள்ளளவும்
பார் உள்ளளவும்; உன்காதல்
அழியாது நிற்கின்ற
அக்மார்க் காதலென்றால்
நான் உனைச் சந்திப்பேன்
இல்லையெனில்
மன்னிப்பாய்! இதுவே நம்
கடைசி சந்திப்பு!