கோபாலன்
26-09-2012, 07:54 PM
முதன்முதலாக உன்னைப் பார்த்த நொடி
வறுமையில் வாடும் வனாந்திரத்திற்கு
வசந்தத்தைக் கொண்டுவரும் புதுவெள்ளமாய்
என்மனதை வாரியெடுத்து உன்னுள் கரைத்தது.
முதன்முதலாக நீ பேசிய வார்த்தைகள்
மலைபோல் மிதக்கும் பெருங்கப்பலையும்
உடைத்து வீசும் சுழற்காற்றாய்
என்னை எடுத்து உன்னுள் வீசியது.
முதன்முதலாக நீ பார்த்த பார்வைகள்
ஏழுலகம் வென்று முடிசூடியவனையும்
காலனை எதிர்த்தால் வீழ்த்தும் கொலைவாளாய்
என்னைக் கொன்று நாமாய் ஒன்றிணைத்தது.
முதன்முதலாக நீ வெளிபடுத்திய நேசம்
சாதனைமேல் சாதனை படைத்தவனையும்
பெரிதாய் சிறப்பிக்கும் மணிமகுடமாய்
உன்னைத் தூக்கி எந்தன் தலையில்வைத்தது.
முதன்முதலாக நீ என்னை ஏற்றுக்கொண்டவேளை
வானவர்களின் வருகையையும் பொருட்படுத்தாமல்
ஏழையையும் ஏற்றுக்கொள்ளும் தியாகசிகரமாய்
எந்தன் உயிரை உன்னில் கரைத்தது.:)
வறுமையில் வாடும் வனாந்திரத்திற்கு
வசந்தத்தைக் கொண்டுவரும் புதுவெள்ளமாய்
என்மனதை வாரியெடுத்து உன்னுள் கரைத்தது.
முதன்முதலாக நீ பேசிய வார்த்தைகள்
மலைபோல் மிதக்கும் பெருங்கப்பலையும்
உடைத்து வீசும் சுழற்காற்றாய்
என்னை எடுத்து உன்னுள் வீசியது.
முதன்முதலாக நீ பார்த்த பார்வைகள்
ஏழுலகம் வென்று முடிசூடியவனையும்
காலனை எதிர்த்தால் வீழ்த்தும் கொலைவாளாய்
என்னைக் கொன்று நாமாய் ஒன்றிணைத்தது.
முதன்முதலாக நீ வெளிபடுத்திய நேசம்
சாதனைமேல் சாதனை படைத்தவனையும்
பெரிதாய் சிறப்பிக்கும் மணிமகுடமாய்
உன்னைத் தூக்கி எந்தன் தலையில்வைத்தது.
முதன்முதலாக நீ என்னை ஏற்றுக்கொண்டவேளை
வானவர்களின் வருகையையும் பொருட்படுத்தாமல்
ஏழையையும் ஏற்றுக்கொள்ளும் தியாகசிகரமாய்
எந்தன் உயிரை உன்னில் கரைத்தது.:)