கோபாலன்
20-09-2012, 10:08 PM
இறைவா,
இனி உன்னிடம் மகிழ்ச்சியிருக்காது
எல்லாவற்றையும் ஒன்றுதிரட்டி
நண்பர்களாய் தந்துவிட்டாய் !
இனி உன்னிடம் பாசமிருக்காது
எல்லாவற்றையும் பதப்படுத்தி
பந்தங்களாய் படைத்துவிட்டாய் !
இனி உன்னிடம் மதியிருக்காது
எல்லாவற்றையும் கடைந்தெடுத்து
குருவாய் கொடுத்துவிட்டாய் !
இனி உன்னிடம் அழகிருக்காது
எழிலாவற்றையும் முயன்றெடுத்து
அவளை படைத்துவிட்டாய் !
இனி உன்னிடம் உயிரிருக்காது
அதையும் கொடுக்க
பெற்றோராய் வந்துவிட்டாய் !:)
இனி உன்னிடம் மகிழ்ச்சியிருக்காது
எல்லாவற்றையும் ஒன்றுதிரட்டி
நண்பர்களாய் தந்துவிட்டாய் !
இனி உன்னிடம் பாசமிருக்காது
எல்லாவற்றையும் பதப்படுத்தி
பந்தங்களாய் படைத்துவிட்டாய் !
இனி உன்னிடம் மதியிருக்காது
எல்லாவற்றையும் கடைந்தெடுத்து
குருவாய் கொடுத்துவிட்டாய் !
இனி உன்னிடம் அழகிருக்காது
எழிலாவற்றையும் முயன்றெடுத்து
அவளை படைத்துவிட்டாய் !
இனி உன்னிடம் உயிரிருக்காது
அதையும் கொடுக்க
பெற்றோராய் வந்துவிட்டாய் !:)