PDA

View Full Version : இறைவன்



கோபாலன்
20-09-2012, 10:08 PM
இறைவா,
இனி உன்னிடம் மகிழ்ச்சியிருக்காது
எல்லாவற்றையும் ஒன்றுதிரட்டி
நண்பர்களாய் தந்துவிட்டாய் !
இனி உன்னிடம் பாசமிருக்காது
எல்லாவற்றையும் பதப்படுத்தி
பந்தங்களாய் படைத்துவிட்டாய் !
இனி உன்னிடம் மதியிருக்காது
எல்லாவற்றையும் கடைந்தெடுத்து
குருவாய் கொடுத்துவிட்டாய் !
இனி உன்னிடம் அழகிருக்காது
எழிலாவற்றையும் முயன்றெடுத்து
அவளை படைத்துவிட்டாய் !
இனி உன்னிடம் உயிரிருக்காது
அதையும் கொடுக்க
பெற்றோராய் வந்துவிட்டாய் !:)

மதி
21-09-2012, 12:50 AM
அனைத்தையும் இழந்து
அனைத்தையும் கொடுத்தவன்
இறைவன்

நன்றாய் இருக்கிறது கோபாலன். தொடருங்கள்.

jayanth
21-09-2012, 03:46 AM
அருமை...அருமை...
தொடருங்கள் கோபாலன்...

ஜானகி
21-09-2012, 04:17 AM
இறைவனின் வள்ளல் தன்மையைப் போற்றும் உங்களுக்குப் பாராட்டுக்கள் !

எங்கும், எதிலும் இறைவனைக் காணுதல் நலமே !

சுகந்தப்ரீதன்
21-09-2012, 06:23 AM
இறைவாழ்த்து நன்றாக இருக்கிறது கோபாலரே..!!:icon_b:

மகிழ்ச்சியின் மறுபெயர் இறைவனென்று சொல்ல விழைந்தீரோ..!!:)

A Thainis
21-09-2012, 06:27 AM
இறைவனை பற்றிய கவிதையில் இறை அன்பு இறை பராமரிப்பு இறை வழிநடத்தல் கண்டேன். நல்ல கவிதை வாழ்த்துக்கள் கோபாலன்.

கோபாலன்
21-09-2012, 02:28 PM
அனைத்தையும் இழந்து
அனைத்தையும் கொடுத்தவன்
இறைவன்

நன்றாய் இருக்கிறது கோபாலன். தொடருங்கள்.

கவிதையின் மையக்கருத்தை முத்தாய்ப்பாக எடுத்துரைத்ததற்கு நன்றி

ஊக்கமளித்த அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் நன்றி...