மதுரை மைந்தன்
18-09-2012, 10:09 AM
பின்னூட்டங்கள் இல்லாமல் முடங்கி கிடந்த இந்த கதையை மன்றத்தில் புறக்கணிக்கப்பட்டாலும் தொடர்வது என்று தொடர்கிறேன். கவிதைகளுக்கு மட்டுமே ஆதரவு தரும் இந்த மன்றத்தை தமிழ் கவிதை மன்றம் என்று பெயர் மாற்றம் செய்யலாம். இருந்தும் துணிவாக இந்த கதையை தொடர்கிறேன். சொந்த படைப்புகளுக்கு ஆதரவு இல்லை என்று அங்கலாய்ப்பவர்களாவது இந்த கதைக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்.
இந்த கதையின் முதல் இரண்டு பாகங்களை இத்திரியில் காணலாம்.
http://www.tamilmantram.com/vb/showthread.php/24603-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2?p=493204&viewfull=1#post493204
சித்திரகுள்ளனும் மர்மயோகியும் 3
http://img828.imageshack.us/img828/5805/13983f2f64623af647ec321.jpg (http://img828.imageshack.us/i/13983f2f64623af647ec321.jpg/)http://img339.imageshack.us/img339/6828/401s288009.jpg (http://img339.imageshack.us/i/401s288009.jpg/)
மேலே காணப்படும் புகைப்படங்களிலுள்ள சர்க்கஸ் கலைஞர்களை இந்த கதையில் குறிப்பிடவில்லை. ஆனால் அப்பு, மருது, சந்தியா போன்ற கதபாத்திரங்கள் இவர்களைப் போன்றவர்கள்.
பாகம் 3
http://img819.imageshack.us/img819/3840/50807515.jpg (http://img819.imageshack.us/i/50807515.jpg/)
அப்புவும் மருதுவும் மர்ம யோகியின் ஆசிரமத்தை அடைந்தனர். மர்ம யோகியின் குடிலுக்கு வெளியே அவரை தரிசிக்க சிலர் நின்றிருந்ததால் அப்புவுக்கும் மருதுவுக்கும் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. குடிலின் உள்ளே மர்ம யோகி ஒரு மான் தோலின் மீது அமர்ந்திருந்தார். அவர் எதிரே ஒருவன் பய பக்தியுடன் அமர்ந்திருந்தான்.
ஒருவன்: சாமி கும்பிடறேங்க. என் பெஞ்சாதி மங்களம்....
மர்ம யோகி: மங்களம் உண்டாகட்டும்.
ஒருவன்: மங்களம் உண்டாக மாட்டேங்கறா. எங்களுக்கு கல்யானம் ஆகி 10 வருசம் ஆயிடுச்சு. இன்னும் பிள்ளை குட்டி இல்லை. நீங்க தான் அருள் புரியணும்.
மர்ம யோகி சிரித்துக்கொண்டே: உன் மனவி கருத்தரிக்க நீ இறைவனிடம் வேண்டிக்கொள்.
ஒருவன்: அட போங்க சாமி, எங்க கஷ்டத்துக்கு பரிகாரம் சொல்லுவீங்கனு நான் உங்க ஆசிரமத்தை வலம் வந்திருக்கேன். நீங்க இப்படி சொல்றீங்க.
மர்ம யோகி சிரித்துக்கொண்டே: வலம் வர வேண்டியது நீ இல்லை. உன் மனைவியை இந்த 'சிசு தருவினி' ஒளஷதத்தை அருந்தி தினம் அரச மரத்தை வலம் வர்ச் சொல். உனக்கு மங்களம் உண்டாகும்.
ஒருவன்: ஆகட்டுங்க சாமி.
அவன் வெளியேறிய பின் சிலர் உள்ளே சென்று வந்தனர். இறுதியில் அப்புவும் மருதுவும் மர்ம யோகியின் முன்னால் சென்று கொண்டு வந்திருந்த பழங்களை சமர்ப்பித்து வணங்கினர்.
மர்ம யோகி: வாருங்கள் சிறுவர்களே. என்னை தேடி வந்ததின் நோக்கம் என்னவோ?
அப்பு: சாமி, நாங்க சிறுவர்கள் இல்லை. வாலிபர்கள். ஆனால் உருவத்தில் குள்ளமாக இருப்பதால் நாங்கள் சிறுவர்களாக காணப்படுகிறோம்.
அப்பு மர்ம யோகியிடம் தான் அனாதையாக குப்பை தொட்டியில் கிடந்ததையும் கருணையுள்ளம் படைத்த சர்க்கஸ் முதலாளி ஒருவர் அவனை எடுத்து வளர்த்து சர்க்கஸில் சேர்த்துவிட்டு வாழ்வு தந்ததை கூறினான். அந்த முதலாளி காலமான பின் அவரது புதல்வன் பாஸ்கரன் சர்க்கஸ் பொறுப்புகளை ஏற்று அவர்களை கொடுமை படுத்துவதையும் கூறினான்.
அப்பு சொன்னதை கேட்டு வருத்தமுற்ற மர்ம் யோகி: இதில் நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
மருது: அப்புவை பாஸ்கரன் மாதிரி உயரமாகவும் வலிமையானவனாகவும் ஆக்கவேண்டும்.
மர்ம யோகி அப்புவிடம்: உன்னை வலிமையானவனாக மாற்ற முடியும். என்னுடைய 'சக்தி தருவினி' ஒளஷதத்தை அருந்தி வந்தால் நீ வலிமையாளனாக ஆக முடியும். ஆனால் உனது உயரத்தை மாற்ற இயலாது. கடவுளின் படைப்பை யாரால் மாற்ற முடியும்? கையின் 5 விரல்களும் ஒன்றாக இல்லையே. குட்டையான கட்டை விரல் தான் ஆள்காட்டி விரலைப்போலவோ மோதிர விரலைப்போலவோ நீளமாக* இல்லையே என்றால் நாம் என்ன செய்ய முடியும்? ஒவ்வொரு விரலுக்கும் அதன் பயன் உண்டு. நீங்கள் இருவரும் சர்க்கஸில் உங்கள் குட்டையான உயரத்தைக் கொண்டு பலரை மகிழ்விப்பதில்லையா? ஒன்றுக்கும் பயனில்லாத நெட்டயனை விட பலரும் நேசிக்கும் குள்ளனாக வாழ்வது மேல். அகத்திய முனி குள்ளராக இருந்தும் சாதிக்கவில்லையா?
மருது: சாமி, உங்களை நம்பி வந்திருக்கோம். அப்புவை பாஸ்கரன் மாதிரி உயரமானவனா மாற்றவே முடியாதா?
மர்ம யோகி சிரித்துக்கொண்டே: அப்புவை பாஸ்கரன் உயரத்துக்கு கொண்டு வரவேண்டும் என்றால், பாஸ்கரன் தன் கால்களை இழக்க செய்ய வேன்டியிருக்கும். காலிழந்த பாஸ்கரன் அப்புவின் உயரத்துக்கு சமமாக முடியும்.
அப்பு: அய்யோ, சாமி அப்படி செஞ்சுடாதீங்க. அப்படி செய்தால் பாஸ்கரனின் தந்தைக்கு நான் துரோகம் இழைத்தவனாவேன்.
மர்ம யோகி சற்று யோசித்து: மற்றுமோர் வழி இருக்கிறது. ஆனால் அது ஆபத்தான வழி.
தொடரும்..
*
இந்த கதையின் முதல் இரண்டு பாகங்களை இத்திரியில் காணலாம்.
http://www.tamilmantram.com/vb/showthread.php/24603-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2?p=493204&viewfull=1#post493204
சித்திரகுள்ளனும் மர்மயோகியும் 3
http://img828.imageshack.us/img828/5805/13983f2f64623af647ec321.jpg (http://img828.imageshack.us/i/13983f2f64623af647ec321.jpg/)http://img339.imageshack.us/img339/6828/401s288009.jpg (http://img339.imageshack.us/i/401s288009.jpg/)
மேலே காணப்படும் புகைப்படங்களிலுள்ள சர்க்கஸ் கலைஞர்களை இந்த கதையில் குறிப்பிடவில்லை. ஆனால் அப்பு, மருது, சந்தியா போன்ற கதபாத்திரங்கள் இவர்களைப் போன்றவர்கள்.
பாகம் 3
http://img819.imageshack.us/img819/3840/50807515.jpg (http://img819.imageshack.us/i/50807515.jpg/)
அப்புவும் மருதுவும் மர்ம யோகியின் ஆசிரமத்தை அடைந்தனர். மர்ம யோகியின் குடிலுக்கு வெளியே அவரை தரிசிக்க சிலர் நின்றிருந்ததால் அப்புவுக்கும் மருதுவுக்கும் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. குடிலின் உள்ளே மர்ம யோகி ஒரு மான் தோலின் மீது அமர்ந்திருந்தார். அவர் எதிரே ஒருவன் பய பக்தியுடன் அமர்ந்திருந்தான்.
ஒருவன்: சாமி கும்பிடறேங்க. என் பெஞ்சாதி மங்களம்....
மர்ம யோகி: மங்களம் உண்டாகட்டும்.
ஒருவன்: மங்களம் உண்டாக மாட்டேங்கறா. எங்களுக்கு கல்யானம் ஆகி 10 வருசம் ஆயிடுச்சு. இன்னும் பிள்ளை குட்டி இல்லை. நீங்க தான் அருள் புரியணும்.
மர்ம யோகி சிரித்துக்கொண்டே: உன் மனவி கருத்தரிக்க நீ இறைவனிடம் வேண்டிக்கொள்.
ஒருவன்: அட போங்க சாமி, எங்க கஷ்டத்துக்கு பரிகாரம் சொல்லுவீங்கனு நான் உங்க ஆசிரமத்தை வலம் வந்திருக்கேன். நீங்க இப்படி சொல்றீங்க.
மர்ம யோகி சிரித்துக்கொண்டே: வலம் வர வேண்டியது நீ இல்லை. உன் மனைவியை இந்த 'சிசு தருவினி' ஒளஷதத்தை அருந்தி தினம் அரச மரத்தை வலம் வர்ச் சொல். உனக்கு மங்களம் உண்டாகும்.
ஒருவன்: ஆகட்டுங்க சாமி.
அவன் வெளியேறிய பின் சிலர் உள்ளே சென்று வந்தனர். இறுதியில் அப்புவும் மருதுவும் மர்ம யோகியின் முன்னால் சென்று கொண்டு வந்திருந்த பழங்களை சமர்ப்பித்து வணங்கினர்.
மர்ம யோகி: வாருங்கள் சிறுவர்களே. என்னை தேடி வந்ததின் நோக்கம் என்னவோ?
அப்பு: சாமி, நாங்க சிறுவர்கள் இல்லை. வாலிபர்கள். ஆனால் உருவத்தில் குள்ளமாக இருப்பதால் நாங்கள் சிறுவர்களாக காணப்படுகிறோம்.
அப்பு மர்ம யோகியிடம் தான் அனாதையாக குப்பை தொட்டியில் கிடந்ததையும் கருணையுள்ளம் படைத்த சர்க்கஸ் முதலாளி ஒருவர் அவனை எடுத்து வளர்த்து சர்க்கஸில் சேர்த்துவிட்டு வாழ்வு தந்ததை கூறினான். அந்த முதலாளி காலமான பின் அவரது புதல்வன் பாஸ்கரன் சர்க்கஸ் பொறுப்புகளை ஏற்று அவர்களை கொடுமை படுத்துவதையும் கூறினான்.
அப்பு சொன்னதை கேட்டு வருத்தமுற்ற மர்ம் யோகி: இதில் நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
மருது: அப்புவை பாஸ்கரன் மாதிரி உயரமாகவும் வலிமையானவனாகவும் ஆக்கவேண்டும்.
மர்ம யோகி அப்புவிடம்: உன்னை வலிமையானவனாக மாற்ற முடியும். என்னுடைய 'சக்தி தருவினி' ஒளஷதத்தை அருந்தி வந்தால் நீ வலிமையாளனாக ஆக முடியும். ஆனால் உனது உயரத்தை மாற்ற இயலாது. கடவுளின் படைப்பை யாரால் மாற்ற முடியும்? கையின் 5 விரல்களும் ஒன்றாக இல்லையே. குட்டையான கட்டை விரல் தான் ஆள்காட்டி விரலைப்போலவோ மோதிர விரலைப்போலவோ நீளமாக* இல்லையே என்றால் நாம் என்ன செய்ய முடியும்? ஒவ்வொரு விரலுக்கும் அதன் பயன் உண்டு. நீங்கள் இருவரும் சர்க்கஸில் உங்கள் குட்டையான உயரத்தைக் கொண்டு பலரை மகிழ்விப்பதில்லையா? ஒன்றுக்கும் பயனில்லாத நெட்டயனை விட பலரும் நேசிக்கும் குள்ளனாக வாழ்வது மேல். அகத்திய முனி குள்ளராக இருந்தும் சாதிக்கவில்லையா?
மருது: சாமி, உங்களை நம்பி வந்திருக்கோம். அப்புவை பாஸ்கரன் மாதிரி உயரமானவனா மாற்றவே முடியாதா?
மர்ம யோகி சிரித்துக்கொண்டே: அப்புவை பாஸ்கரன் உயரத்துக்கு கொண்டு வரவேண்டும் என்றால், பாஸ்கரன் தன் கால்களை இழக்க செய்ய வேன்டியிருக்கும். காலிழந்த பாஸ்கரன் அப்புவின் உயரத்துக்கு சமமாக முடியும்.
அப்பு: அய்யோ, சாமி அப்படி செஞ்சுடாதீங்க. அப்படி செய்தால் பாஸ்கரனின் தந்தைக்கு நான் துரோகம் இழைத்தவனாவேன்.
மர்ம யோகி சற்று யோசித்து: மற்றுமோர் வழி இருக்கிறது. ஆனால் அது ஆபத்தான வழி.
தொடரும்..
*