M.Jagadeesan
11-09-2012, 05:20 AM
கொடுமையிலும் கொடுமை எதுவென்று கேட்டால்
வாழ்ந்து கெடுவதே வாழ்க்கையில் கொடுமையாம்.
தப்புக்கு மேலே தப்புகள் செய்து
குப்புற விழுந்து கூழுக்கு அல்லாடும்
கப்பிய வறுமை வந்த பொழுதினில்
எப்படி இருந்தநான் இப்படி ஆயிட்டேன்! என்று
எண்ணிப் புலம்புவதில் ஏதும் பயனில்லை!
குடலை எரிக்கும் மதுவைக் குடித்து
உடலின் வனப்பை இழந்த பின்னர்
எப்படி இருந்தநான் இப்படி ஆயிட்டேன் என்று
எண்ணிப் புலம்புவதில் ஏதும் பயனில்லை
மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்து தெருவுக்கு வந்தபின்
எப்படி இருந்தநான் இப்படி ஆயிட்டேன் என்று
எண்ணிப் புலம்புவதில் ஏதும் பயனில்லை.
வரவுக்கு மேலே செலவுகள் செய்து
உறவுகள் எல்லாம் கைவிட்ட பின்னர்
எப்படி இருந்தநான் இப்படி ஆயிட்டேன் என்று
எண்ணிப் புலம்புவதில் ஏதும் பயனில்லை.
செப்படி வித்தையல்ல வாழ்க்கை என்பது
கண்ணிமைக்கும் நேரத்தில் காருடன் வீடும்
வண்ண உடைகளும் வகையுடன் வருவதற்கு!
எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையல்ல
இப்படித்தான் வாழணும் என்பதே வாழ்க்கையாம்!
தப்படி தப்படியாய் முன்னேறும் வாழ்க்கையில்
தடுமாற்றம் இருந்தாலும் சறுக்கல் இருக்காது.
எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டான் என்று
ஊரார் உன்னை இகழ்வதைக் காட்டிலும்
அப்படி இருந்தவன் எப்படி ஆயிட்டான் என்று
ஊரார் உன்னைப் புகழ்வதே பெருமை!
வாழ்ந்து கெடுவதே வாழ்க்கையில் கொடுமையாம்.
தப்புக்கு மேலே தப்புகள் செய்து
குப்புற விழுந்து கூழுக்கு அல்லாடும்
கப்பிய வறுமை வந்த பொழுதினில்
எப்படி இருந்தநான் இப்படி ஆயிட்டேன்! என்று
எண்ணிப் புலம்புவதில் ஏதும் பயனில்லை!
குடலை எரிக்கும் மதுவைக் குடித்து
உடலின் வனப்பை இழந்த பின்னர்
எப்படி இருந்தநான் இப்படி ஆயிட்டேன் என்று
எண்ணிப் புலம்புவதில் ஏதும் பயனில்லை
மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்து தெருவுக்கு வந்தபின்
எப்படி இருந்தநான் இப்படி ஆயிட்டேன் என்று
எண்ணிப் புலம்புவதில் ஏதும் பயனில்லை.
வரவுக்கு மேலே செலவுகள் செய்து
உறவுகள் எல்லாம் கைவிட்ட பின்னர்
எப்படி இருந்தநான் இப்படி ஆயிட்டேன் என்று
எண்ணிப் புலம்புவதில் ஏதும் பயனில்லை.
செப்படி வித்தையல்ல வாழ்க்கை என்பது
கண்ணிமைக்கும் நேரத்தில் காருடன் வீடும்
வண்ண உடைகளும் வகையுடன் வருவதற்கு!
எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையல்ல
இப்படித்தான் வாழணும் என்பதே வாழ்க்கையாம்!
தப்படி தப்படியாய் முன்னேறும் வாழ்க்கையில்
தடுமாற்றம் இருந்தாலும் சறுக்கல் இருக்காது.
எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டான் என்று
ஊரார் உன்னை இகழ்வதைக் காட்டிலும்
அப்படி இருந்தவன் எப்படி ஆயிட்டான் என்று
ஊரார் உன்னைப் புகழ்வதே பெருமை!