PDA

View Full Version : உலகம் இது!



அனுராகவன்
03-09-2012, 04:36 AM
என்ன உலகம் இது...
எங்கு பார்த்தாலும்
துக்கமும் ,துயரமும்
வேதனையும்,வெறுமையும்
சோம்பலும், சோகமும்
வறுமையும்,வன்முறையும்
இப்படி பார்த்த நான்..........

ஆகா!! என்ன உலகம் இது!
இங்கு பார்!!
மகிழ்ச்சியும் ,மங்களமும்
செர்க்கமும், சொந்தமும்
சுகங்களும்,சுவைகளும்
வசந்தமும்,வண்ண்ங்களும்
எப்படி பார்த்தேன்..

இவை எல்லாம்
நம் பார்க்கும்
பார்வையில் தான்
உள்ளது....

நாஞ்சில் த.க.ஜெய்
03-09-2012, 06:41 AM
ஆம் வேண்டியது மாறுபட்ட பார்வை ..சிந்திக்கலாமே ...

அனுராகவன்
03-09-2012, 09:11 AM
ஆம் வேண்டியது மாறுபட்ட பார்வை ..சிந்திக்கலாமே ...
நன்றி நாஞ்சில் த.க.ஜெய் (http://www.tamilmantram.com/vb/member.php/14802-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D) ...

கீதம்
03-09-2012, 09:45 AM
தருமனும் துரியோதனனும் தாம் கண்ட உலகைப் பற்றி மொழிந்தவற்றை நினைவுபடுத்தும் நல்லதொரு கவிக்கருத்து. பாராட்டுகள் அச்சலா.

ஜானகி
03-09-2012, 11:03 AM
ஞானம் பிறந்ததால் பார்வை மாறியதா....?

பார்வை மாறியதால் ஞானம் பிறந்ததா...?

A Thainis
03-09-2012, 07:31 PM
அழகு அச்சலா, புதிய பார்வை வேண்டும், தீமை விடைபெற்று நன்மை விளைந்திட

அனுராகவன்
05-09-2012, 09:43 AM
நன்றி நன்றி.. ஆ. தைனிஸ் ,கீதம்,ஜானகி ..