செல்வா
24-08-2012, 04:52 PM
“எழவு அந்த பரிச்சைக்க கதைய உடுடே… அது தான் முடிஞ்சி போச்சே…”
“அதானே…! போல அங்க..! பரிச்ச முடிஞ்சி பத்து நாளானாலும் இவனுக்க படிப்பு மயிரு தீராது. நீ என்னதான் கணக்கு போட்டாலும் மார்க்கு கூடவோ கொறயவோ போவா? நீ எழுதுன எளவுக்கு தான் மார்க்கு” மகேந்திரனுக்க இடைச்சொருகலுக்கு ஒத்தூதினான் ஜோஸ்.
நான், மகேந்த், ஜோஸ், ஜேம்ஸ் நாலுபேரும் அந்த வருடத்திய முழுப்பரிச்சையின் கடைசிநாள் மாலை ஆத்தங்கரையில் அமர்ந்திருக்கும் போது நடந்த நானாவிதமான உரையாடல்களுக்கு மத்தியில் வந்ததுதான் மேற்கண்ட வாசகங்கள்.
ஆறு என்று நாங்கள் அழைத்தாலும் இலக்கணப்படி அதை ஆறு எனச் சொல்லலாகாது. பாசனத்திற்காக வெட்டப்பட்ட கால்வாய். குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியாகும் கால்வாய்களில் நீண்ட கால்வாய் அது. கால்வாய் என்றாலும் எங்களுக்கு ஆறுதான். பள்ளி விடுமுறை தினங்களில் எங்கள் குழாம் கூடுவது இதன் கரையில்தான். கரைகள் கற்களால் கட்டப்பட்டு சில இடங்களில் காரை பூசப்பட்டிருக்கும்.
பெரும்பாலும் மார்ச்,ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தண்ணீர் வராது. பள்ளி விடுமுறை மாதங்களில் எங்களது விளையாட்டு மைதானம் அது தான். சீட்டு எறிதல், சிங்காம்புள் (கிட்டிப்புள்) அடித்தல், கழச்சி (கோலி), ஓணப்பந்து மற்றும் இந்தக் கதைநடந்த காலத்தில் பரவவாரம்பித்திருந்த கிரிக்கெட். கிரிக்கெட் விளையாட்டில் ஆத்துக்குள்ளிருந்து மேலே கரைக்கு பந்தை அடிப்பவன் பெரிய ஆள். மாலை நேரங்களில் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பாறைகளில் அமர்ந்து அரட்டையடிப்பது தான் மெயின் வேலை.
தண்ணீர் குறையும் நாட்களில் கரைந்திருக்கும் வெள்ளை, மஞ்சள் சிவப்பு எனக் கிடைக்கும் களிமண்களைத் தோண்டி எடுத்து அவற்றை வைத்து விதவிதமான உருவங்கள் செய்து விளையாடுவது வழக்கம். பானை சட்டிகள், ரேடியோ, டிவி, என்று விதம் விதமாக உருவங்கள் செய்து அவரவர் கலைத்திறனுக்கேற்ப கலக்கிக் கொண்டிருப்போம். இரவிபாலன் தான் இதில் மிகக் கெட்டிக்காரன். அவன் செய்யும் உருவங்கள் எல்லாம் மிகத் தத்ரூபமாக இருக்கும்.
பாருங்கள் மீன்பிடி திருவிழாவைப் பற்றிப் பேசவாரம்பித்து விட்டு எங்கெங்கோ வந்துவிட்டேன். மூன்று முதல் ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக தண்ணீர் பாய்ந்த பின்பு மார்ச் மாத இறுதியில் பெரும்பாலும் அணையை அடைத்து விடுவார்கள். தோளளவு ஓடிய நீர் இடுப்பளவாகி, முழங்காலளவாகி, கணுக்காலளவாகி பின் பாதம் நனைத்து வெறும் ஈரமாகக் குறைந்து விடும். சில சிறிதும் பெரிதுமான பள்ளங்களில் மட்டும் தண்ணீர் தேங்கியிருக்கும். ஆறு முழுவதும் சுதந்திரமாக அலைந்து கொண்டிருந்த மீன்கள் அனைத்தும் இந்தக் குண்டுகளில் சேகரமாகியிருக்கும். அவற்றில் முழங்காலளவைத்தாண்டி கணுக்காலளவு நீர் குறையும் போது கலக்கி மீன்பிடிக்க ஊரின் மொத்த சிறுவர் படையும் திரண்டு வரும்.
முதலில் தண்ணீருக்குள் இறங்கி தண்ணீரைக் கலக்கு கலக்கு என்று கலக்குவோம். கிட்டத்தட்ட வெண்ணைக்காகத் தயிரைக் கடைவது போல. சேறு மண் எல்லாமாகச் சேர்ந்து மீன்கள் நீருக்குள் தேவையான காற்று கிடைக்காமல் மேலே வரவாரம்பிக்கும். அந்த மீன்களை அவரவர் திறமைக்கேற்ப துவர்த்து(துவாலை), வலை, இவற்றால் மீனைப்பிடிக்க வேண்டியது தான். சிலர் வெட்டுக்கத்தியால் வெட்டியோ அல்லது கம்பால் அடித்தும் கூட மீன் பிடிப்பர். இன்னும் சில திறமை மற்றும் தைரியசாலிகள் ஆரல், உளுவை, தேளி மற்றும் விலாங்கு போன்ற மீன்களை வெறும் கைகளால் சேறு மற்றும் பொந்துகளைத் தடவியேப் பிடித்துவிடுவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான மீன்கள் அதிகமாக இருக்கும். ஒரு வருடம் கெண்டை என்றால் அடுத்தவருடம் வெறும் தேளி மற்றும் தேளிக் குஞ்சுகளாக இருக்கும் மறுவருடம் பார்த்தால் ஒரே நன்னீர் எறால் மயமாக இருக்கும்.
இத்தகைய குண்டு ஒன்றின் கரையில் சாலையைத் தாண்டி ஆறுவரை கிளை பரப்பி நிற்கும் பலாமரத்தின் நிழலில் நான் நாங்கள் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தோம். குண்டிற்குள் தண்ணீர் கணுக்காலுக்கும் மேலே முழங்கால் மூட்டிற்கும் கீழே தண்ணீர் இருந்தது.
“மக்கா நாளக்கி முட்டத்துக்கு போமா?” திடீரென்று மவுனம் கலைத்து கேட்டான் ஜேம்ஸ்.
மறுமொழி சொல்ல வாயெடுக்கும்முன் “லேய் அங்க பாரு” என்று உரத்து ஆற்றை நோக்கிக் கைகாட்டினான் ஜோஸ்.
இரண்டு பெரிய கெண்டை மீன்கள் ஆற்றுக்குள் விளையாடிக் கொண்டிருந்தன.
“லேய் பெரிய கெண்ட ல ..!” ஆச்சரியம் காட்டினான் ஜேம்ஸ் குரலில்.
“நாளக்கி பொரிச்சிரலாமா?” ஜோஸின் பார்வை மீன்களை அளவெடுப்பதிலேயே குறியாயிருந்தது.
“தண்ணி கெடக்க கெடய பாரு, வலையிருந்தாலாவது புடிச்சிருலாம்” இது மகேந்த்
“வட்டி போட்டு இறச்சிருலாம்” – ஜோஸ்
வட்டி என்பது கமலம் போன்ற முக்கோண வடிவிலான உபகரணம். அதன் மூன்று முனைகளில் நான்கு கயிறுகள் கட்டப்பட்டிருக்கும். இருவர் எதிர் எதிரே நின்று கொண்டு கயிறுகளைப் பிடித்து தண்ணீர் இறைக்க வசதியாக இருக்கும்.)
“நெட்டாங்கோட்டுல மதுகிட்டயிருக்கு வாங்கலாம்”
“கஷ்டம்பில மக்கா..” இழுத்தான் ஜேம்ஸ்
“நாளக்கி விட்டா அவ்வளவு தான்… பொறவு கெடச்சாது வலபோட்டு புடிச்சிருவானுவ” தீர்க்கமாய் சொன்னான் ஜோஸ்.
“சரி மக்கா நாளக்கி புடிச்சிரலாம்” அரைமனதாகவே சொன்ன படி கலைந்தோம்.
மறுநாள் காலை நான் எழுந்து சாப்பிட்டு வீட்டை விட்டு வெளியேறும் போது காலை 8 மணி ஆகிவிட்டிருந்தது. வெளியே ஆற்றில் பார்த்தால் காலையிலிருந்தே அணைகட்டி நீரிறைக்கும் வேலை ஆரம்பித்திருந்தது. மாற்றி மாற்றி நீரிறைத்துக் கொண்டிருந்தனர் ஜேம்ஸிம் ஜோஸிம். தண்ணீர் ஏற்கெனவே இருந்ததை விட சற்றே குறைந்திருந்தது.
ஆள் மாற்றி மாற்றி இறைத்துக் கொண்டே இருந்தோம். காலையில் மீன்கடைக்குச் செல்பவர்கள் எல்லோரும் அதிசயமாகப் பார்த்தபடியே சென்று கொண்டிருந்தனர். மீன் பிடிப்பதற்காக இப்படி வட்டி போட்டு இறைப்பதை இப்போது தான் பார்க்கிறார்கள்.
“எலேய் என்ன ஒருவாரத்துக்கு எறச்சாலும் கொறயாது போலருக்கு தண்ணி… கண்ணவிஞ்சா போச்சு ஒங்களுக்கு…” என்று திட்டிக் கொண்டு போனவர்கள் அதிகம்.
மணி பத்து ஆனது… களைத்துப் போனோம். தண்ணீரோ குறைவது போலேத் தெரியவில்லை…
மணி ஒன்றானது … தண்ணீர் கணுக்காலுக்கும் சற்று மேலே இருந்தது…
இனி இப்படியே விட்டால் யாராவது மீன் பிடித்து விடுவார்களே என்று சாப்பிடக் கூடப் போகாமல் இறைத்துக் கொண்டிருந்தோம்.
மணி இரண்டரையைத் தொடும் போது சற்றேறக் குறைய கலக்கும் அளவிற்கு தண்ணீர் வந்து விட்டது.
அப்போது பார்த்து ஓட்டப்பந்தயத்தில் ஒலி கொடுத்ததும் தாவி ஓடும் வீரர்கள் போல் வந்திறங்கியது ஒரு கும்பல். இறங்கி எங்களுக்கு நிகராக தண்ணீரைக் கலக்கவாரம்பித்தனர்.
கொஞ்சநேரம் தர்க்கித்துப் பார்த்தோம் ஒண்ணும் செய்ய முடியாது பொதுக் கால்வாய்… யாரையும் இறங்கி மீன் பிடிக்காதே என்று சொல்ல முடியாது. காலையிலிருந்தே எங்களைக் கவனித்தவர்களில் ஒரு பெண்மணி மட்டும்
“லெப்போ காலைலருந்தே அந்தப் பிள்ளைய தண்ணி எறச்சானுவ.. அவனுவ முதல்ல பிடிச்சட்டு” என்று உதவிக்கு வந்தார்.
சரி என்று ரெண்டு கெண்டை மீன் பிடிக்கும் வரை நாங்க மீன் பிடிப்பதாக ஒப்பந்தம் செய்து மீன்களைத் துரத்தவாரம்பித்தோம்.
வர வர பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது.
ஆற்றின் ரெண்டு பக்கமும் வேடிக்கை பார்க்க கூட்டம் கூடிக்கொண்டே யிருந்தது. ரெண்டு கெண்டை மீன்களும் எங்களுக்கு வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தன.
ஒரு வழியாக ஒரு மீனை ஜேம்ஸ் பிடித்து விட்டான்.
பிடித்து கரையிலிருந்த பக்கட்டில் போட்டு துவர்த்தால் மூடி வைத்திருந்தோம்.
சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த அந்தப் பெண்மணி
“லெப்போ மீனு நெறய கெடச்சிருக்கா” என்ற படியே எங்கள் அனுமதிக்குக் காத்திராமல் பக்கெட்டைத் திறந்தவர் “லேய் நல்ல கெண்டடேய்.. நான் எடுத்துக்கட்டா?” எங்கள் பதிலுக்குக் காத்திராமலேயே எடுத்துச் சென்றுவிட்டார்.
எதுவும் பதில் பேசக் கூட எங்களுக்கு அவகாசம் இல்லை…
சரி ஒண்ணு போனாப் போகுது அடுத்த மீன புடிக்கலாம் என்று முழுக்கவனத்தையும் அடுத்த மீனில் வைத்தோம்.
ஒரு முக்கில் மீனைத் துரத்தி ஒதுக்கி கைகளால் தண்ணீரோடு சேர்த்து வாரியெடுத்து கரையில் எறிந்தான் ஜோஸ்.
“பரவால்ல அதவிட இது பெருசு” என்று துடித்த மீனைப் பார்த்து கூறியபடி.. சந்தோச பெருமிதத்துடன் கரையில் ஏறிய நேரம்.
கூட்டத்தில் நின்றிருந்த மகேந்தின் உறவுக்காரப் பெண்மணி ஒருவர் முன்னே வந்து
“லேய் பெரியமீனாக் கெடச்சிருக்கே … இத நான் எடுத்துக்கிறேன்… நீங்க இன்னும் நெறயப் புடிச்சிக்கங்க” என்று கூறியபடி எடுத்துச் சென்றுவிட்டார்.
மீனக் கையில புடிச்சிப் பாக்கக் கூட அவகாசமில்லாத நாங்கல்லாம் நிஜமாவே வெறுத்துப் போனோம்.
காலையிலிருந்து பட்ட பாடெல்லாம் வீணாப்போச்சு..
ஜோஸ் தான் ரொம்ப நொந்து போயிட்டான். அப்புறமா அவன் மீன்பிடிக்க இறங்கவே இல்ல.
ஒரு வழியா மனச தேத்திட்டு குளத்தில போய் சேறு நீங்க குளிச்சுட்டு வீடு போய் சேரும் போது மணி 5.
“அம்மா பசிக்குதுனு” வெளியருந்தே கத்திகிட்டு நான் வீட்டுக்குள் நுழைந்தேன்.
அம்மா என்னை எதிர்பார்த்துக் காத்துகிட்டுருந்தாங்க
கையில நீண்ட பச்ச புளிய மிலாறு என்னப் பாத்து வா வா னு கூப்டுட்டுருந்துச்சு …!
“அதானே…! போல அங்க..! பரிச்ச முடிஞ்சி பத்து நாளானாலும் இவனுக்க படிப்பு மயிரு தீராது. நீ என்னதான் கணக்கு போட்டாலும் மார்க்கு கூடவோ கொறயவோ போவா? நீ எழுதுன எளவுக்கு தான் மார்க்கு” மகேந்திரனுக்க இடைச்சொருகலுக்கு ஒத்தூதினான் ஜோஸ்.
நான், மகேந்த், ஜோஸ், ஜேம்ஸ் நாலுபேரும் அந்த வருடத்திய முழுப்பரிச்சையின் கடைசிநாள் மாலை ஆத்தங்கரையில் அமர்ந்திருக்கும் போது நடந்த நானாவிதமான உரையாடல்களுக்கு மத்தியில் வந்ததுதான் மேற்கண்ட வாசகங்கள்.
ஆறு என்று நாங்கள் அழைத்தாலும் இலக்கணப்படி அதை ஆறு எனச் சொல்லலாகாது. பாசனத்திற்காக வெட்டப்பட்ட கால்வாய். குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியாகும் கால்வாய்களில் நீண்ட கால்வாய் அது. கால்வாய் என்றாலும் எங்களுக்கு ஆறுதான். பள்ளி விடுமுறை தினங்களில் எங்கள் குழாம் கூடுவது இதன் கரையில்தான். கரைகள் கற்களால் கட்டப்பட்டு சில இடங்களில் காரை பூசப்பட்டிருக்கும்.
பெரும்பாலும் மார்ச்,ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தண்ணீர் வராது. பள்ளி விடுமுறை மாதங்களில் எங்களது விளையாட்டு மைதானம் அது தான். சீட்டு எறிதல், சிங்காம்புள் (கிட்டிப்புள்) அடித்தல், கழச்சி (கோலி), ஓணப்பந்து மற்றும் இந்தக் கதைநடந்த காலத்தில் பரவவாரம்பித்திருந்த கிரிக்கெட். கிரிக்கெட் விளையாட்டில் ஆத்துக்குள்ளிருந்து மேலே கரைக்கு பந்தை அடிப்பவன் பெரிய ஆள். மாலை நேரங்களில் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பாறைகளில் அமர்ந்து அரட்டையடிப்பது தான் மெயின் வேலை.
தண்ணீர் குறையும் நாட்களில் கரைந்திருக்கும் வெள்ளை, மஞ்சள் சிவப்பு எனக் கிடைக்கும் களிமண்களைத் தோண்டி எடுத்து அவற்றை வைத்து விதவிதமான உருவங்கள் செய்து விளையாடுவது வழக்கம். பானை சட்டிகள், ரேடியோ, டிவி, என்று விதம் விதமாக உருவங்கள் செய்து அவரவர் கலைத்திறனுக்கேற்ப கலக்கிக் கொண்டிருப்போம். இரவிபாலன் தான் இதில் மிகக் கெட்டிக்காரன். அவன் செய்யும் உருவங்கள் எல்லாம் மிகத் தத்ரூபமாக இருக்கும்.
பாருங்கள் மீன்பிடி திருவிழாவைப் பற்றிப் பேசவாரம்பித்து விட்டு எங்கெங்கோ வந்துவிட்டேன். மூன்று முதல் ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக தண்ணீர் பாய்ந்த பின்பு மார்ச் மாத இறுதியில் பெரும்பாலும் அணையை அடைத்து விடுவார்கள். தோளளவு ஓடிய நீர் இடுப்பளவாகி, முழங்காலளவாகி, கணுக்காலளவாகி பின் பாதம் நனைத்து வெறும் ஈரமாகக் குறைந்து விடும். சில சிறிதும் பெரிதுமான பள்ளங்களில் மட்டும் தண்ணீர் தேங்கியிருக்கும். ஆறு முழுவதும் சுதந்திரமாக அலைந்து கொண்டிருந்த மீன்கள் அனைத்தும் இந்தக் குண்டுகளில் சேகரமாகியிருக்கும். அவற்றில் முழங்காலளவைத்தாண்டி கணுக்காலளவு நீர் குறையும் போது கலக்கி மீன்பிடிக்க ஊரின் மொத்த சிறுவர் படையும் திரண்டு வரும்.
முதலில் தண்ணீருக்குள் இறங்கி தண்ணீரைக் கலக்கு கலக்கு என்று கலக்குவோம். கிட்டத்தட்ட வெண்ணைக்காகத் தயிரைக் கடைவது போல. சேறு மண் எல்லாமாகச் சேர்ந்து மீன்கள் நீருக்குள் தேவையான காற்று கிடைக்காமல் மேலே வரவாரம்பிக்கும். அந்த மீன்களை அவரவர் திறமைக்கேற்ப துவர்த்து(துவாலை), வலை, இவற்றால் மீனைப்பிடிக்க வேண்டியது தான். சிலர் வெட்டுக்கத்தியால் வெட்டியோ அல்லது கம்பால் அடித்தும் கூட மீன் பிடிப்பர். இன்னும் சில திறமை மற்றும் தைரியசாலிகள் ஆரல், உளுவை, தேளி மற்றும் விலாங்கு போன்ற மீன்களை வெறும் கைகளால் சேறு மற்றும் பொந்துகளைத் தடவியேப் பிடித்துவிடுவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான மீன்கள் அதிகமாக இருக்கும். ஒரு வருடம் கெண்டை என்றால் அடுத்தவருடம் வெறும் தேளி மற்றும் தேளிக் குஞ்சுகளாக இருக்கும் மறுவருடம் பார்த்தால் ஒரே நன்னீர் எறால் மயமாக இருக்கும்.
இத்தகைய குண்டு ஒன்றின் கரையில் சாலையைத் தாண்டி ஆறுவரை கிளை பரப்பி நிற்கும் பலாமரத்தின் நிழலில் நான் நாங்கள் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தோம். குண்டிற்குள் தண்ணீர் கணுக்காலுக்கும் மேலே முழங்கால் மூட்டிற்கும் கீழே தண்ணீர் இருந்தது.
“மக்கா நாளக்கி முட்டத்துக்கு போமா?” திடீரென்று மவுனம் கலைத்து கேட்டான் ஜேம்ஸ்.
மறுமொழி சொல்ல வாயெடுக்கும்முன் “லேய் அங்க பாரு” என்று உரத்து ஆற்றை நோக்கிக் கைகாட்டினான் ஜோஸ்.
இரண்டு பெரிய கெண்டை மீன்கள் ஆற்றுக்குள் விளையாடிக் கொண்டிருந்தன.
“லேய் பெரிய கெண்ட ல ..!” ஆச்சரியம் காட்டினான் ஜேம்ஸ் குரலில்.
“நாளக்கி பொரிச்சிரலாமா?” ஜோஸின் பார்வை மீன்களை அளவெடுப்பதிலேயே குறியாயிருந்தது.
“தண்ணி கெடக்க கெடய பாரு, வலையிருந்தாலாவது புடிச்சிருலாம்” இது மகேந்த்
“வட்டி போட்டு இறச்சிருலாம்” – ஜோஸ்
வட்டி என்பது கமலம் போன்ற முக்கோண வடிவிலான உபகரணம். அதன் மூன்று முனைகளில் நான்கு கயிறுகள் கட்டப்பட்டிருக்கும். இருவர் எதிர் எதிரே நின்று கொண்டு கயிறுகளைப் பிடித்து தண்ணீர் இறைக்க வசதியாக இருக்கும்.)
“நெட்டாங்கோட்டுல மதுகிட்டயிருக்கு வாங்கலாம்”
“கஷ்டம்பில மக்கா..” இழுத்தான் ஜேம்ஸ்
“நாளக்கி விட்டா அவ்வளவு தான்… பொறவு கெடச்சாது வலபோட்டு புடிச்சிருவானுவ” தீர்க்கமாய் சொன்னான் ஜோஸ்.
“சரி மக்கா நாளக்கி புடிச்சிரலாம்” அரைமனதாகவே சொன்ன படி கலைந்தோம்.
மறுநாள் காலை நான் எழுந்து சாப்பிட்டு வீட்டை விட்டு வெளியேறும் போது காலை 8 மணி ஆகிவிட்டிருந்தது. வெளியே ஆற்றில் பார்த்தால் காலையிலிருந்தே அணைகட்டி நீரிறைக்கும் வேலை ஆரம்பித்திருந்தது. மாற்றி மாற்றி நீரிறைத்துக் கொண்டிருந்தனர் ஜேம்ஸிம் ஜோஸிம். தண்ணீர் ஏற்கெனவே இருந்ததை விட சற்றே குறைந்திருந்தது.
ஆள் மாற்றி மாற்றி இறைத்துக் கொண்டே இருந்தோம். காலையில் மீன்கடைக்குச் செல்பவர்கள் எல்லோரும் அதிசயமாகப் பார்த்தபடியே சென்று கொண்டிருந்தனர். மீன் பிடிப்பதற்காக இப்படி வட்டி போட்டு இறைப்பதை இப்போது தான் பார்க்கிறார்கள்.
“எலேய் என்ன ஒருவாரத்துக்கு எறச்சாலும் கொறயாது போலருக்கு தண்ணி… கண்ணவிஞ்சா போச்சு ஒங்களுக்கு…” என்று திட்டிக் கொண்டு போனவர்கள் அதிகம்.
மணி பத்து ஆனது… களைத்துப் போனோம். தண்ணீரோ குறைவது போலேத் தெரியவில்லை…
மணி ஒன்றானது … தண்ணீர் கணுக்காலுக்கும் சற்று மேலே இருந்தது…
இனி இப்படியே விட்டால் யாராவது மீன் பிடித்து விடுவார்களே என்று சாப்பிடக் கூடப் போகாமல் இறைத்துக் கொண்டிருந்தோம்.
மணி இரண்டரையைத் தொடும் போது சற்றேறக் குறைய கலக்கும் அளவிற்கு தண்ணீர் வந்து விட்டது.
அப்போது பார்த்து ஓட்டப்பந்தயத்தில் ஒலி கொடுத்ததும் தாவி ஓடும் வீரர்கள் போல் வந்திறங்கியது ஒரு கும்பல். இறங்கி எங்களுக்கு நிகராக தண்ணீரைக் கலக்கவாரம்பித்தனர்.
கொஞ்சநேரம் தர்க்கித்துப் பார்த்தோம் ஒண்ணும் செய்ய முடியாது பொதுக் கால்வாய்… யாரையும் இறங்கி மீன் பிடிக்காதே என்று சொல்ல முடியாது. காலையிலிருந்தே எங்களைக் கவனித்தவர்களில் ஒரு பெண்மணி மட்டும்
“லெப்போ காலைலருந்தே அந்தப் பிள்ளைய தண்ணி எறச்சானுவ.. அவனுவ முதல்ல பிடிச்சட்டு” என்று உதவிக்கு வந்தார்.
சரி என்று ரெண்டு கெண்டை மீன் பிடிக்கும் வரை நாங்க மீன் பிடிப்பதாக ஒப்பந்தம் செய்து மீன்களைத் துரத்தவாரம்பித்தோம்.
வர வர பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது.
ஆற்றின் ரெண்டு பக்கமும் வேடிக்கை பார்க்க கூட்டம் கூடிக்கொண்டே யிருந்தது. ரெண்டு கெண்டை மீன்களும் எங்களுக்கு வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தன.
ஒரு வழியாக ஒரு மீனை ஜேம்ஸ் பிடித்து விட்டான்.
பிடித்து கரையிலிருந்த பக்கட்டில் போட்டு துவர்த்தால் மூடி வைத்திருந்தோம்.
சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த அந்தப் பெண்மணி
“லெப்போ மீனு நெறய கெடச்சிருக்கா” என்ற படியே எங்கள் அனுமதிக்குக் காத்திராமல் பக்கெட்டைத் திறந்தவர் “லேய் நல்ல கெண்டடேய்.. நான் எடுத்துக்கட்டா?” எங்கள் பதிலுக்குக் காத்திராமலேயே எடுத்துச் சென்றுவிட்டார்.
எதுவும் பதில் பேசக் கூட எங்களுக்கு அவகாசம் இல்லை…
சரி ஒண்ணு போனாப் போகுது அடுத்த மீன புடிக்கலாம் என்று முழுக்கவனத்தையும் அடுத்த மீனில் வைத்தோம்.
ஒரு முக்கில் மீனைத் துரத்தி ஒதுக்கி கைகளால் தண்ணீரோடு சேர்த்து வாரியெடுத்து கரையில் எறிந்தான் ஜோஸ்.
“பரவால்ல அதவிட இது பெருசு” என்று துடித்த மீனைப் பார்த்து கூறியபடி.. சந்தோச பெருமிதத்துடன் கரையில் ஏறிய நேரம்.
கூட்டத்தில் நின்றிருந்த மகேந்தின் உறவுக்காரப் பெண்மணி ஒருவர் முன்னே வந்து
“லேய் பெரியமீனாக் கெடச்சிருக்கே … இத நான் எடுத்துக்கிறேன்… நீங்க இன்னும் நெறயப் புடிச்சிக்கங்க” என்று கூறியபடி எடுத்துச் சென்றுவிட்டார்.
மீனக் கையில புடிச்சிப் பாக்கக் கூட அவகாசமில்லாத நாங்கல்லாம் நிஜமாவே வெறுத்துப் போனோம்.
காலையிலிருந்து பட்ட பாடெல்லாம் வீணாப்போச்சு..
ஜோஸ் தான் ரொம்ப நொந்து போயிட்டான். அப்புறமா அவன் மீன்பிடிக்க இறங்கவே இல்ல.
ஒரு வழியா மனச தேத்திட்டு குளத்தில போய் சேறு நீங்க குளிச்சுட்டு வீடு போய் சேரும் போது மணி 5.
“அம்மா பசிக்குதுனு” வெளியருந்தே கத்திகிட்டு நான் வீட்டுக்குள் நுழைந்தேன்.
அம்மா என்னை எதிர்பார்த்துக் காத்துகிட்டுருந்தாங்க
கையில நீண்ட பச்ச புளிய மிலாறு என்னப் பாத்து வா வா னு கூப்டுட்டுருந்துச்சு …!