PDA

View Full Version : இயல்போ? விதியோ?...........



sukhan
17-08-2012, 03:00 PM
குப்பைத்தொட்டி பெற்ற குழந்தை
குப்பைகள் சூழ்ந்த சுற்றுச்சூழல்
உடைந்த வாகனம் விபத்தில்
உதிரம் ஓடும் சாலை
உணவிற்கு யாசகம் வேண்டும் மக்கள்
பணப்பற்று கொண்ட பலர்
இயல்போ விதியோ இவையெல்லாம்
மனிதன் மனதுள் மறைந்த
மனிதநேயத்தின் சாயல்......................

கீதம்
18-08-2012, 12:56 AM
அறியாமையாலும், அகந்தையாலும் அலட்சியத்தாலும் விளைவிக்கப்படுகின்றன விபத்துகளும், சில விபரீதங்களும்.

சுற்றி நிகழும் அவலம் கண்டும் தன் சோற்றுமூட்டையில் கவனம் வைக்கும் சுயநலமிக்க மனங்கள், விதியின் பெயரில் பழியைப் போடுதல் இயல்பு.

மனம் தொட்ட வரிகள். பாராட்டுகள் சுகன்.

ஜானகி
18-08-2012, 03:35 AM
கலியின் இயல்பாம் இது...

பலியாகும் நமது விதியாம் இது...!