ஆதவா
16-08-2012, 07:11 AM
சிறந்த கவிஞர் என்பவர் யார் ? அவரை எப்படி அடையாளங் கண்டுபிடிப்பது ? எந்தக் கவிஞரின் கவிதைகளைத் தவறவிடாமல் படிக்க வேண்டும் ? எல்லாருமே கவிதைகள் எழுதுகிறார்கள். எல்லாருமே ஏதோ ஒரு பிரபல மேடையில் மின்னுகிறார்கள். அவர்களை எப்படித் தரங்காண்பது ? இத்தகைய கேள்விகள் முதல்நிலை வாசக மனத்திற்குள் சுழன்றடித்தபடியே இருக்கும். சிறந்த கவிஞனை அடையாளங்காண கீழ்க்காணும் அவனின் கவிதை இயல்புகள் உதவக்கூடும்.
1. மிக நீளமான வாக்கியத்தை - பதினைந்து இருபது வார்த்தைகள் உள்ள வாக்கியத்தை - மிக அநாயசமாக எழுதிச் செல்கிறானா என்று பாருங்கள். அப்படியானால் அவன் மொழியில் தேர்ந்த பயிற்சியுற்றிருக்கிறான் என்று அர்த்தம்.
2. மிகச் சிறிய வாக்கியங்களை நேர்த்தியோடும் கத்திக் கூர்மையோடும் (Sharp and Perfect) கச்சிதமான பொருள் உணர்த்தும்படி அமைக்க வல்லவனா என்று நோக்குங்கள். மொழியைச் சுண்டக்காய்ச்சி வடிக்கத் தெரிந்தவன் என்று ஆகும்.
3. ஒவ்வொரு கவிதைக்குள்ளும் நீங்கள் அபூர்வமாகக் கேள்விப்படுகிற ஏதேனும் ஒரு சொல்லை இட்டுச் செல்கிறானா என்று பாருங்கள். அந்தச் சொல் உங்களுக்குத் தெரியாததில்லை என்றாலும் அந்தக் கவிதையில் புதிதாகப் பயன்படுத்தக் காண்கிறீர்கள். அப்படியானால், அவன் மேலதிக மொழிப்புலமை பெற்றிருக்கிறான் என்று பொருள்.
4. ஒரே பாடுபொருளில் எழுதிக்கொண்டிராமல் வாழ்வின் அத்தனை இயல்புகளையும் கொட்டிக் கவிழ்க்கிறானா என்று தேடுங்கள். அவன் தோரணங்கட்டும் சம்பவங்களின் வண்ண வகைப்பாடுகள் வியப்பூட்டுகிறதா என்பதைக் கவனியுங்கள். அப்படியானால், அவன் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைக் கூர்ந்து கவனிக்கிறான் எனலாம்.
5. தான் எழுதும் கவிதையை ஒரே மாதிரி வார்த்துக் கொண்டிராமல் வெவ்வேறு தொனியில், மொழியில், சோதனை ரீதியிலேனும் மாறுபட்டு எழுதிப்பார்க்கும் விருப்பம் - கவிதையில் தென்படுகிறதா என்று தேடுங்கள். அவனிடம் புதிய திறப்புகளுக்கான சாவிகள் நிறையவே இருக்கும்.
6. இயற்கை, பெண்மை, வரலாறு குறித்து அவனது பார்வை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். அப்படியிருந்தால், அவன் உலகத் தரமான வாக்கியங்களை அமைக்கும் திசையில் நடைபோடுவான்.
7. ஆன்மீகம், கடவுள், விதி, அரசியல் போன்றவற்றின் மீது முன் தீர்மானமற்ற மனநிலையில் அவன் இருக்கவேண்டும். அதுவே கவிதையியலில் சிகரத்தை அடைவதற்கு உரிய பாதையாகும். கடவுள் சிந்தனையால் கவிதைக்குச் சிறகு முளைக்கும் என்பார் கண்ணதாசன். இதை மதரீதியான பார்வையில் நான் சொல்லவில்லை. கவிதைக்கு இவை யாவும் வலிமையான கச்சாப் பொருள்கள்.
8. வாசகனைத் தன் கவிதையைவிடவும் உயர்வாக மதிக்கிறானா என்று துப்பறியுங்கள். அவ்வாறில்லாதவன் எனில், ஏற்கனவே அகம்பாவத்தோடு இருப்பவனுக்கு நாம் அவனைப் பின் தொடர்வதன் மூலம் அவன் ஆணவம் பெருகவே உதவியதாவோம்.
9. மழை பொழிவது மாதிரி எழுதுவதில் வல்லவனா என்று பாருங்கள். அப்படியானால், கவிஞன் நல்ல பார்மில் இருக்கிறான். முக்கி முனகி ஒரு கவிதை எழுதிக்கொண்டிருப்பவனைத் தொடர்ந்தால் திக்கித் திணறிவிடுவீர்கள்.
10. உலகம், எதிர்காலம் குறித்தெல்லாம் அவன் நேர்மறையான கருத்துகளோடு இருப்பவனா என்று ஆராயலாம். அப்படி இருந்தால் அவன் வாசகரை உள் புகுந்து இயக்கி பொன்னுலகிற்கே அழைத்துச் சென்றுவிடுவான்
நன்றி :
- கவிஞர் மகுடேசுவரன்
1. மிக நீளமான வாக்கியத்தை - பதினைந்து இருபது வார்த்தைகள் உள்ள வாக்கியத்தை - மிக அநாயசமாக எழுதிச் செல்கிறானா என்று பாருங்கள். அப்படியானால் அவன் மொழியில் தேர்ந்த பயிற்சியுற்றிருக்கிறான் என்று அர்த்தம்.
2. மிகச் சிறிய வாக்கியங்களை நேர்த்தியோடும் கத்திக் கூர்மையோடும் (Sharp and Perfect) கச்சிதமான பொருள் உணர்த்தும்படி அமைக்க வல்லவனா என்று நோக்குங்கள். மொழியைச் சுண்டக்காய்ச்சி வடிக்கத் தெரிந்தவன் என்று ஆகும்.
3. ஒவ்வொரு கவிதைக்குள்ளும் நீங்கள் அபூர்வமாகக் கேள்விப்படுகிற ஏதேனும் ஒரு சொல்லை இட்டுச் செல்கிறானா என்று பாருங்கள். அந்தச் சொல் உங்களுக்குத் தெரியாததில்லை என்றாலும் அந்தக் கவிதையில் புதிதாகப் பயன்படுத்தக் காண்கிறீர்கள். அப்படியானால், அவன் மேலதிக மொழிப்புலமை பெற்றிருக்கிறான் என்று பொருள்.
4. ஒரே பாடுபொருளில் எழுதிக்கொண்டிராமல் வாழ்வின் அத்தனை இயல்புகளையும் கொட்டிக் கவிழ்க்கிறானா என்று தேடுங்கள். அவன் தோரணங்கட்டும் சம்பவங்களின் வண்ண வகைப்பாடுகள் வியப்பூட்டுகிறதா என்பதைக் கவனியுங்கள். அப்படியானால், அவன் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைக் கூர்ந்து கவனிக்கிறான் எனலாம்.
5. தான் எழுதும் கவிதையை ஒரே மாதிரி வார்த்துக் கொண்டிராமல் வெவ்வேறு தொனியில், மொழியில், சோதனை ரீதியிலேனும் மாறுபட்டு எழுதிப்பார்க்கும் விருப்பம் - கவிதையில் தென்படுகிறதா என்று தேடுங்கள். அவனிடம் புதிய திறப்புகளுக்கான சாவிகள் நிறையவே இருக்கும்.
6. இயற்கை, பெண்மை, வரலாறு குறித்து அவனது பார்வை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். அப்படியிருந்தால், அவன் உலகத் தரமான வாக்கியங்களை அமைக்கும் திசையில் நடைபோடுவான்.
7. ஆன்மீகம், கடவுள், விதி, அரசியல் போன்றவற்றின் மீது முன் தீர்மானமற்ற மனநிலையில் அவன் இருக்கவேண்டும். அதுவே கவிதையியலில் சிகரத்தை அடைவதற்கு உரிய பாதையாகும். கடவுள் சிந்தனையால் கவிதைக்குச் சிறகு முளைக்கும் என்பார் கண்ணதாசன். இதை மதரீதியான பார்வையில் நான் சொல்லவில்லை. கவிதைக்கு இவை யாவும் வலிமையான கச்சாப் பொருள்கள்.
8. வாசகனைத் தன் கவிதையைவிடவும் உயர்வாக மதிக்கிறானா என்று துப்பறியுங்கள். அவ்வாறில்லாதவன் எனில், ஏற்கனவே அகம்பாவத்தோடு இருப்பவனுக்கு நாம் அவனைப் பின் தொடர்வதன் மூலம் அவன் ஆணவம் பெருகவே உதவியதாவோம்.
9. மழை பொழிவது மாதிரி எழுதுவதில் வல்லவனா என்று பாருங்கள். அப்படியானால், கவிஞன் நல்ல பார்மில் இருக்கிறான். முக்கி முனகி ஒரு கவிதை எழுதிக்கொண்டிருப்பவனைத் தொடர்ந்தால் திக்கித் திணறிவிடுவீர்கள்.
10. உலகம், எதிர்காலம் குறித்தெல்லாம் அவன் நேர்மறையான கருத்துகளோடு இருப்பவனா என்று ஆராயலாம். அப்படி இருந்தால் அவன் வாசகரை உள் புகுந்து இயக்கி பொன்னுலகிற்கே அழைத்துச் சென்றுவிடுவான்
நன்றி :
- கவிஞர் மகுடேசுவரன்