PDA

View Full Version : கொஞ்சநேரம் அறிவியலுக்காக.



M.Jagadeesan
13-08-2012, 03:37 AM
சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு (http://viduthalai.in/home/viduthalai/science/79-2010-12-17-11-37-57.html)



பூமியில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் மைல் தூரத்தில் உள்ளது சந்திரன். மனிதர்கள் வாழ்வதற்கு மிகத் தேவையான காற்று, தண்ணீர் ஆகியவை இல்லை. எனவே, சந்திரனுக்கு செல்வது இயலாத செயல் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. சமீபத்திய ஆய்வுகள் மூலம் சந்திரனில் தண்ணீர் இருப் பதற்கான வாய்ப்பு அறியப் பட்டுள்ளது. இந்நிலையில், தண்ணீர் மட்டும் அல்லாமல், வெள்ளி, கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட கனிமங்களும் அதிகளவில் அங்கு கலவை யாக இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் மனிதனை சந்திரனுக்கு அனுப்ப முயற்சி செய்து வந்தன.


http://www.viduthalai.periyar.org.in/20101209/photo24.jpg


இதில், அமெரிக்கா முதலில் வெற்றி பெற்றது. கடந்த நூற்றாண்டில், 1969ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி அமெரிக்க விண்வெளி வீரர் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் இறங்கி சாதனை படைத்தார். இதை தொடர்ந்து பல முறை விண்வெளி வீரர்கள், ஆளில்லாத ராக்கெட்டுகளை பறக்க விட்டு சந்திரனில் பல்வேறு சோதனைகள் செய்யப்பட் டுள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபரில் சந்திரனுக்கு சந்திரயான்-1 என்ற ராக்கெட்டை இந்தியா வெற்றிகரமாக அனுப்பி சாதனை செய்தது. சந்திரனை சுற்றி வந்த சந்திரயான்1, பல்வேறு கோணங்களில் சந்திரனை படம் எடுத்து அனுப்பியது.
அதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், சந்திரனில் தண்ணீர் உள்ளது என்று கண்டுபிடித் தனர்.இந்நிலையில், சந்திரனில் அதிக அளவில் தண்ணீர் உள்ளது என்று தெரிய வந்துள்ளது. மேலும், பல்வேறு கனிமங்களும் உள்ளன என்றும், குறிப்பாக, வெள்ளி, கார்பன் டை ஆக்சைடு ஆகியவை அங்கு அதிகளவில் கலவையாக இருக்கின்றன. இத்தகவல்களை உணர்வு செயற்கைக் கோளை கடந்த ஆண்டு சந்திரனில் மோதச் செய்து அதன் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்ததன் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது.
இது குறித்து சந்திரனை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கூறியிருப்ப தாவது:
சந்திரனில் லேசான ஹைட்ரோ கார்பன்கள், கந்தகம், கார்பன் டை ஆக்சைடு ஆகியவை இருப்பது உணர்வு செயற்கைக்கோள் மோதியதில் தெரிய வந்துள்ளது. சந்திரனில் காணப்படும் பெரிய பள்ளங்களில் தண்ணீர் அதிகமாக இருப்பதும், அந்த பள்ளங்களின் பரப்பில் 5.6 சதவிகிதம் தண்ணீர் இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது. இதுவரை சந்திரனைப்பற்றி தெரியாத நிலையில், உணர்வு செயற்கைக்கோள் சந்திரனின் இருட்டுப் பகுதியில் மோதிய வேகத்தில் 10 கி.மீ., உயரத்திற்கு தூசிகள் கிளம்பின. இதில், உறை நிலையில் நிரந்தரமாய் தண்ணீர் இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. சந்திரனின் தென் துருவப் பகுதியில் காணப்படும் கேபஸ்' என்ற பெரும் பள்ளத்தில் இருந்து எழும் தூசிகள் குறித்த தகவல்களை அறிய உலகின் பல இடங்களில் உள்ள தொலைநோக்கிகள் செயல்பட்டு வருகின்றன.
சந்திரனில் பல முறை விண்கற்கள் மோதி பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, சந்திரனில் காணப்படும் நூறு கிலோ மீட்டர் அகலம் நான்கு கி.மீ., ஆழம் உள்ள பெரும் பள்ளத்தில் ராக்கெட்டை மோத விட்டு ஆய்வு செய்ய நாசா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக 585 கிலோ எடையில் ராக்கெட் தயாரிக்கப்படுகிறது. இந்த ராக்கெட், சந்திரனில் காணப்படும் பெரும் பள்ளத்தில் இரண்டு மீட்டர் ஆழத்தில் மோதுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். -இவ்வாறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


நன்றி : விடுதலை நாளேடு.

.

aren
13-08-2012, 04:49 AM
நல்ல தகவல். இதன் தொடர்ச்சி இருந்தால் அதனையும் பதிக்கவும்.

M.Jagadeesan
13-08-2012, 04:55 AM
நன்றி! ஆரென். இதன் தொடர்ச்சி கிடைக்குமானால் பதிவு செய்கிறேன்.

M.Jagadeesan
14-08-2012, 01:56 PM
அறிவியல் சோதனை







http://www.periyarpinju.com/new/templates/gk_icki_sports/images/emailButton.png (http://www.periyarpinju.com/new/component/mailto/?tmpl=component&link=aHR0cDovL3d3dy5wZXJpeWFycGluanUuY29tL25ldy9hcHItMjAxMS8xMjYtMjAxMS0wNS0zMS0xMC01MC0zMi5odG1s)






மீன்சாரத்தால் மீன் பிடிப்போமா?

தேவையான பொருள்கள் :

இலேசான தகரத்தகடு, பசை மின்கலம், காப்பிட்ட கம்பி அல்லது ஜரிகை

அகலமான பிளாஸ்டிக் தட்டு, கத்தரிக்கோல், பெரிய ஆணி. கத்தரிக்கோலால் தகரத்திலிருந்து சிறு சிறு மீன் வடிவங்களைக் கத்தரித்துக் கொள்ளுங்கள். பிளாஸ்டிக் தட்டில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு தகரவடிவ மீன்களை அதில் போடுங்கள்.
பெரிய ஆணியின் மேல் பூக்காகிதச் சுருளைச் சுற்றுவதுபோல் ஜரிகை அல்லது காப்பிட்ட கம்பியை ஒரு சுருள் மற்றொரு சுருளைத்தொடாமல் நெருக்கமாகச் சுற்றுங்கள். சுற்றிய இரு நுனிகளையும் மின்கலத்தோடு மேலும் கீழுமாக இணையுங்கள். ஆணியின் தலைப்பகுதியை தண்ணீர் மட்டத்தில் பிடியுங்கள். தகர மீன்கள் தண்ணீரை விட்டு வெளியே துள்ளிவந்து ஆணியின் தலைப்பைக் கவ்விக்கொள்ளும்.
ஏன்? எப்படி?
காந்தம் இரும்பை இழுக்கும் தன்மை கொண்டது. மின்கலத்திலிருந்து வரும் மின்சாரம் கம்பிச் சுருள்களின் வழியே வரும்பொழுது மின்சக்தி காந்த சக்தியாக மாறி ஆணியைத் தற்காலிகக் காந்தமாக மாற்றுகிறது. ஆகவே, இரும்பு மீன்துண்டுகள் ஆணியில் ஒட்டுகின்றன.


நன்றி: பெரியார் பிஞ்சு


ஆக்கம் : அணு கலைமகள், சிவகங்கை

நாஞ்சில் த.க.ஜெய்
14-08-2012, 02:18 PM
மாறுபட்டதோர் அறிவியல் தொகுப்பு ....அருமை ...

M.Jagadeesan
14-08-2012, 03:25 PM
பாராட்டுக்கு நன்றி நாஞ்சில் த.க. ஜெய் !

kulakkottan
14-08-2012, 03:43 PM
M.Jagadeesan,செவ்வாயில் மற்றுமொரு ரோவர் சில்லு பதித்திருக்கும் இந்த வேளையில் நல்ல தகவல் .!
"கொஞ்சநேரம்-அறிவியலுக்காக" நல்ல திரி தலைப்பு தொடருங்கள்.
இனி தமிழுக்கு ஒரு சங்கம் அமையின் அது முத்தமிழாய் இருக்காது இயல் ,இசை, நாடகத்துடன் அறிவியலையும் நான்காம் தமிழாய் சேர்த்து அமையட்டும்

M.Jagadeesan
14-08-2012, 03:45 PM
நன்றி ! குளக்கோட்டன்.

kulakkottan
14-08-2012, 03:57 PM
அறிவியல் சோதனை







http://www.periyarpinju.com/new/templates/gk_icki_sports/images/emailButton.png (http://www.periyarpinju.com/new/component/mailto/?tmpl=component&link=aHR0cDovL3d3dy5wZXJpeWFycGluanUuY29tL25ldy9hcHItMjAxMS8xMjYtMjAxMS0wNS0zMS0xMC01MC0zMi5odG1s)






மீன்சாரத்தால் மீன் பிடிப்போமா?

தேவையான பொருள்கள் :

இலேசான தகரத்தகடு, பசை மின்கலம், காப்பிட்ட கம்பி அல்லது ஜரிகை

அகலமான பிளாஸ்டிக் தட்டு, கத்தரிக்கோல், பெரிய ஆணி. கத்தரிக்கோலால் தகரத்திலிருந்து சிறு சிறு மீன் வடிவங்களைக் கத்தரித்துக் கொள்ளுங்கள். பிளாஸ்டிக் தட்டில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு தகரவடிவ மீன்களை அதில் போடுங்கள்.
பெரிய ஆணியின் மேல் பூக்காகிதச் சுருளைச் சுற்றுவதுபோல் ஜரிகை அல்லது காப்பிட்ட கம்பியை ஒரு சுருள் மற்றொரு சுருளைத்தொடாமல் நெருக்கமாகச் சுற்றுங்கள். சுற்றிய இரு நுனிகளையும் மின்கலத்தோடு மேலும் கீழுமாக இணையுங்கள். ஆணியின் தலைப்பகுதியை தண்ணீர் மட்டத்தில் பிடியுங்கள். தகர மீன்கள் தண்ணீரை விட்டு வெளியே துள்ளிவந்து ஆணியின் தலைப்பைக் கவ்விக்கொள்ளும்.
ஏன்? எப்படி?
காந்தம் இரும்பை இழுக்கும் தன்மை கொண்டது. மின்கலத்திலிருந்து வரும் மின்சாரம் கம்பிச் சுருள்களின் வழியே வரும்பொழுது மின்சக்தி காந்த சக்தியாக மாறி ஆணியைத் தற்காலிகக் காந்தமாக மாற்றுகிறது. ஆகவே, இரும்பு மீன்துண்டுகள் ஆணியில் ஒட்டுகின்றன.


நன்றி: பெரியார் பிஞ்சு


ஆக்கம் : அணு கலைமகள், சிவகங்கை





சிறு வயது நினைவு ஒன்று மீண்டு கொண்டது என் சிந்தையில் உங்கள் இத் திரியை வாசித்த போது !

பொம்மலாட்டம் வழமையாக நூல் கொண்டு செய்வார்கள் !
இப்படி ஒரு காட்சி நாம் செய்த நாடக காட்சி ஒன்றில் செய்ய வேண்டி இருந்தது !
தசாவராதம் முகுந்த முகுந்தா பாட்டில் அசின் கடதாசி பொம்மைகளை வைத்து செய்வார்களே அதை போல தான் !
இதற்கு நூலுக்கு பதிலாய் நாம் வேற நுட்பம் பாவித்தோம் !காந்தம் தான் அதை கொண்டு காகித வடிவங்களை வெள்ளை கடதாசிக்கு பின்னால் இருந்து நகர்த்தினோம் !இதற்கு ஒலிபெருக்கி காந்தம் பெற படாத பாடு பட வேண்டி இருந்தது .

இதை போல இரு சிறு toyகாரை எடுத்து ஒன்றி பின் புறமும் ,மற்றதன் முன் புறமும் ஒன்றை ஒன்று தள்ளும் மாறு காந்தத்தை ஒட்டி விட்டு ஒரு காரை மற்றதன் பின்னால் கொண்டு செல்ல அந்த கார் தானே ஓடும் !
(மற்றவர்கள் நம்மை விரும்புகிறார்களோ வெறுக்கிறார்களோ எதை வேண்டுமானாலும் சாதகமாய் பயன் படுத்தலாம் எனதான் இந்த காந்த தள்ளுகை,கவர்ச்சி சொல்கிறதோ!)
இதை பள்ளி கூடம் கொண்டு சென்று அந்த கார்கள்ஆசிரியரிடம் பறி போனது பக்கத்து நண்பனோடு விளையாடியதால்!


இன்னொரு விடயம் நீங்கள் பயன் படுத்திய ஆணி
இரும்பானால் மின்னை நிறுத்தியதும் காந்தம் போய் விடும்
உருக்கானால் (ஸ்டீல்) மின்னை நிறுத்தினாலும் காந்த தன்மை இருக்கும் . நிரந்தரமாய்!

kulakkottan
14-08-2012, 04:02 PM
"ஒத்த முகம்பார்திட வெறுத்திடுமே
முகம் திருப்பி நிற்கையில் கவர்ச்சி வருமே
சுருள் மூடி ஏற்றம் பாய காந்தமேரும் இரும்பில்
இருக்குமே அந்தம் வரை உருக்கெனில்"
காந்த இயல்பு ,மின்காந்த தன்மை பற்றி திருமந்திரம்,அல்லது தொல்காப்பியம் போன்ற நம் நூல்களில் எழுதப்பட்டிருப்பின் இப்படி தான் இருக்கும் அந்த செய்யுள் !

aren
15-08-2012, 05:42 AM
"ஒத்த முகம்பார்திட வெறுத்திடுமே
முகம் திருப்பி நிற்கையில் கவர்ச்சி வருமே
சுருள் மூடி ஏற்றம் பாய காந்தமேரும் இரும்பில்
இருக்குமே அந்தம் வரை உருக்கெனில்"
காந்த இயல்பு ,மின்காந்த தன்மை பற்றி திருமந்திரம்,அல்லது தொல்காப்பியம் போன்ற நம் நூல்களில் எழுதப்பட்டிருப்பின் இப்படி தான் இருக்கும் அந்த செய்யுள் !

வாவ் அருமை!!! இன்னும் நிறைய கொடுங்கள்.

M.Jagadeesan
15-08-2012, 01:26 PM
அவித்த முட்டையை பாட்டிலின் உள்ளே தள்ளுதல்
http://members.ozemail.com.au/%7Emacinnis/scifun/egg.gif












தேவையான பொருட்கள்: கழுத்து குறுகலாக உள்ள ஒரு கண்ணாடி பாட்டில், ஓடு எடுக்கப்பட்ட அவித்த முட்டை, மூன்று தீக்குச்சிகள்.

செய்முறை: கண்ணாடி பாட்டிலின் உள்ளே எரியும் தீக்குச்சிகள் மூன்று போடவும். தீக்குச்சிகள் அணைந்ததும் , அவித்த முட்டையை, படத்தில் காட்டியபடி , முட்டையின் குவிந்த பாகம் பாட்டிலின் வாய்ப்புறத்தில் இருக்குமாறு வைக்கவும். அடுத்த வினாடி , முட்டை பாட்டிலின் உள்புறத்தில் இழுக்கப்படுவதைக் காணலாம்.

காரணம்: தீக்குச்சிகள் எரியும்போது, பாட்டிலின் உள்ளே இருக்கும் காற்றானது வெப்பத்தால் விரிவடைந்து மேலே செல்லுகிறது. தீக்குச்சிகள் அணைந்தவுடன், உள்ளே இருக்கும் காற்றின் அழுத்தம், வெளிக்காற்றின் அழுத்தத்தைவிட குறைவாக இருக்கும். அதை ஈடு செய்வதற்காக வெளிக்காற்று , மிகுந்த வேகத்துடன் பாட்டிலின் உள்ளே செல்ல முயலும். பாட்டிலின் மீது அவித்த முட்டை வைக்கப்பட்டு இருப்பதால், அதைத் தள்ளிக்கொண்டு உள்ளே செல்லும். முட்டையும் பாட்டிலின் உள்ளே விழுந்து விடும்.

jayanth
15-08-2012, 06:54 PM
நல்லாருக்கு... தொடருங்க ஐய்யா...

A Thainis
22-08-2012, 06:31 PM
அதிசியதக்க அருமையான தகவல்கள், பகிர்வுக்கு மிக்க நன்றி.

M.Jagadeesan
23-08-2012, 01:04 AM
ஜெயந்த், தைனிஷ் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!

M.Jagadeesan
23-08-2012, 02:16 AM
உப்பு நீரில் முட்டையை மிதக்கச் செய்தல்

தண்ணீர் நிரம்பிய ஒரு டம்ளரில் ஒரு முட்டையைப் போட்டால் அது மூழ்கிவிடும். அந்த நீருடன் உப்பைச் சேர்த்தால் என்ன

நடக்கும்?கிடைக்கும் முடிவு சுவாரஸ்யமாகவும், அடர்த்தியைப் பற்றிய சில உண்மைகளைத்
தெரிவிப்பதாகவும் இருக்கும்.


தேவையான பொருட்கள்.

1. ஒரு முட்டை.

2. நீர்.

3. கொஞ்சம் உப்பு.

4. ஒரு கண்ணாடி டம்ளர்.

செய்முறை

1. கண்ணாடி டம்ளரில் பாதி அளவுக்கு நீர் ஊற்றவும்.

2. அதில் 6 தேக்கரண்டிகள் உப்பைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

3. இந்த உப்புக் கலவையின் மீது கண்ணாடி டம்ளர் நிரம்பும் வரை மெதுவாக நீரைச் சேர்க்கவும்.

உப்புக் கலவையுடன் , நாம் சேர்க்கும் நீர் கலந்து விடாமல் கவனமாக நீரை ஊற்றவேண்டும்.

4. மெதுவாக முட்டையை நீரின் உள்ளே இறக்கவும். என்ன நடக்கிறது என்று பார்.

முட்டை மெதுவாக கீழே இறங்கும். கண்ணாடி டம்ளரின் நடுவில் உப்புக் கலவை உள்ளதால்,

முட்டை நடு டம்ளரில் மிதப்பதைக் காணலாம். உப்பு நீரின் அடர்த்தியின் காரணமாக , முட்டை

அவ்வாறு நடு டம்ளரில் மிதக்கிறது.