jayaprakash
09-08-2012, 07:01 PM
நானாக நீயிருந்தால்
உழைப்பின் அருமை
தெரியாத செல்வந்தனாய்
உனை உதாசீனம் செய்திருப்பாய்!
நானாக நீயிருந்தால்
மூடியபூத் திறக்கா
வண்ணத்துப் பூச்சியாய்
வேறு மலர்தேடிச் சென்றிருப்பாய்!
நானாக நீயிருந்தால்
காதலியின் சுடுசொல்லே
காதலின் பிள்ளையார்சுழி
எனும் தத்துவம் மறந்திருப்பாய்!
நானாக நீயிருந்தால்
நமக்குள்ளான யாவும்போல்
காதலுமொரு விளையாட்டு
என்று தப்புக்கணக்குப் போட்டிருப்பாய்!
நானாக நீயிருந்தால்
ஒருதலைக் காதலெனும்
இருதலைக் கொள்ளியால்
தாடி வைத்துத் திரிந்திருப்பாய்!
நானாக நீயிருந்தால்
இதயத்தில் பீறிடும்
பித்தம் தலைக்கேறி
நாளும் பைத்தியமாய் உழன்றிருப்பாய்!
நானாக நீயிருந்தால்
அறிவுஜீவியாய்த் தட*மாறிச்
சோகக்கவிதையாய்க் கிடைக்கின்ற
தாளிலே கிறுக்கிப் பிழைத்திருப்பாய்!
நானாக நீயிருந்தால்
எடுத்தெடுத்த முயற்சியெல்லாம்
அடுத்தடுத்துத் தோற்றுவிடக்
கண்ணீர்ப் பஞ்சத்தைக் கண்டிருப்பாய்!
நானாக நீயிருந்தால்
உனக்கில்லா உயிருடலுடன்
இருந்தென்ன போயென்ன
என்றே தற்கொலை புரிந்திருப்பாய்!
நானாக நீயிருந்தால்
எனக்கில்லா நீயாருக்கும்
இருக்கவும் கூடாதென்றே
உனது உயிரையும் பறித்திருப்பாய்!
உழைப்பின் அருமை
தெரியாத செல்வந்தனாய்
உனை உதாசீனம் செய்திருப்பாய்!
நானாக நீயிருந்தால்
மூடியபூத் திறக்கா
வண்ணத்துப் பூச்சியாய்
வேறு மலர்தேடிச் சென்றிருப்பாய்!
நானாக நீயிருந்தால்
காதலியின் சுடுசொல்லே
காதலின் பிள்ளையார்சுழி
எனும் தத்துவம் மறந்திருப்பாய்!
நானாக நீயிருந்தால்
நமக்குள்ளான யாவும்போல்
காதலுமொரு விளையாட்டு
என்று தப்புக்கணக்குப் போட்டிருப்பாய்!
நானாக நீயிருந்தால்
ஒருதலைக் காதலெனும்
இருதலைக் கொள்ளியால்
தாடி வைத்துத் திரிந்திருப்பாய்!
நானாக நீயிருந்தால்
இதயத்தில் பீறிடும்
பித்தம் தலைக்கேறி
நாளும் பைத்தியமாய் உழன்றிருப்பாய்!
நானாக நீயிருந்தால்
அறிவுஜீவியாய்த் தட*மாறிச்
சோகக்கவிதையாய்க் கிடைக்கின்ற
தாளிலே கிறுக்கிப் பிழைத்திருப்பாய்!
நானாக நீயிருந்தால்
எடுத்தெடுத்த முயற்சியெல்லாம்
அடுத்தடுத்துத் தோற்றுவிடக்
கண்ணீர்ப் பஞ்சத்தைக் கண்டிருப்பாய்!
நானாக நீயிருந்தால்
உனக்கில்லா உயிருடலுடன்
இருந்தென்ன போயென்ன
என்றே தற்கொலை புரிந்திருப்பாய்!
நானாக நீயிருந்தால்
எனக்கில்லா நீயாருக்கும்
இருக்கவும் கூடாதென்றே
உனது உயிரையும் பறித்திருப்பாய்!