A Thainis
08-08-2012, 08:30 PM
குளிர்ந்திடும் சூரியன் வேண்டும்
சுட்டெரிக்கும் நிலவு வேண்டும்
கொடியில் மின்னிடும் விண்மீன்கள் வேண்டும்
வானத்தில் பூத்திடும் மலர்கள் வேண்டும்
வான்திரள் வையகமாக வேண்டும்
நீர்த்திரள் நீலவனமாக வேண்டும்
வானலை வெண்மேகத்தை வீதிக்கு அழைத்து விளையாட வேண்டும்
கடலை வானத்தில் மிதக்க அதில் நான் நீராட வேண்டும்
வானத்தை கிழித்திடும் மின்கீற்றுகளால் - என்
கனவு கூரையை வேய்ந்திட வேண்டும் - அது
நாளல்லம் நனவாகி வாழ்வு மின்னிட வேண்டும்
புயல் குயிலாக மாறி கூவிட வேண்டும் - அவ்
இனிய ஓசை தென்றலாக என் மேனியை தழுவிட வேண்டும்
கொளுந்துவிடும் தீபந்தம் வேண்டும் - அதை
ஆசை தீர நெஞ்சோடு அணைத்துக் கொள்ளவேண்டும்
இமயத்தின் உச்சியில் கால் பதிக்க வேண்டும்
இவ்விகம் வாழ்வோரின் உள்ளங்களில் வாழ வேண்டும்
பரரெல்லாம் பசுமையாக வேண்டும்
பார்போரின் மனசெல்லாம் பாசத்தால் நிறைய வேண்டும்
மனிதத்தின் மாண்பு வானுயர உழைக்க வேண்டும் - அதற்கு
நீதியும் உண்மையும் என்னில் நிலைக்க வேண்டும்.
தாய்தமிழ் தரணியெல்லாம் தழைத்திட வேண்டும்
கோடியாய் நூல்களை கோர்த்து - நாளும்
அவளின் சிறப்பின் செமமையினை புகழ வேண்டும்
அய்யன் வள்ளுவனின் ஈரடி வரிகள்
அவனியில் பவனிவர வேண்டும் - அது
இம் மானுடரின் வாழ்வியல் நெறியாய் போற்றிட வேண்டும்.
மலைகளில் துள்ளிடும் அருவிகள் வானின்று புறப்பட்டு
மழையாக கொட்டி தீர்த்திட வேண்டும்
வற்றாத ஆறுகளால் வறுமையில்லா உலக வேண்டும்
ஆழ்கடல் நானாக வேண்டும் - அங்கு
நிலவும் அமைதி என் வாழ்வாக வேண்டும்
இவற்றை எல்லாம் புதுமையை படைத்திட - ஒருமுறை
இறைவன் மீண்டும் மண்ணில் வேண்டும் - அவன்
என் உள்ளத்தில் என்றும் உறைந்திட வேண்டும்
அவனோடு நான் சங்கமமாகிட வேண்டும்
சுட்டெரிக்கும் நிலவு வேண்டும்
கொடியில் மின்னிடும் விண்மீன்கள் வேண்டும்
வானத்தில் பூத்திடும் மலர்கள் வேண்டும்
வான்திரள் வையகமாக வேண்டும்
நீர்த்திரள் நீலவனமாக வேண்டும்
வானலை வெண்மேகத்தை வீதிக்கு அழைத்து விளையாட வேண்டும்
கடலை வானத்தில் மிதக்க அதில் நான் நீராட வேண்டும்
வானத்தை கிழித்திடும் மின்கீற்றுகளால் - என்
கனவு கூரையை வேய்ந்திட வேண்டும் - அது
நாளல்லம் நனவாகி வாழ்வு மின்னிட வேண்டும்
புயல் குயிலாக மாறி கூவிட வேண்டும் - அவ்
இனிய ஓசை தென்றலாக என் மேனியை தழுவிட வேண்டும்
கொளுந்துவிடும் தீபந்தம் வேண்டும் - அதை
ஆசை தீர நெஞ்சோடு அணைத்துக் கொள்ளவேண்டும்
இமயத்தின் உச்சியில் கால் பதிக்க வேண்டும்
இவ்விகம் வாழ்வோரின் உள்ளங்களில் வாழ வேண்டும்
பரரெல்லாம் பசுமையாக வேண்டும்
பார்போரின் மனசெல்லாம் பாசத்தால் நிறைய வேண்டும்
மனிதத்தின் மாண்பு வானுயர உழைக்க வேண்டும் - அதற்கு
நீதியும் உண்மையும் என்னில் நிலைக்க வேண்டும்.
தாய்தமிழ் தரணியெல்லாம் தழைத்திட வேண்டும்
கோடியாய் நூல்களை கோர்த்து - நாளும்
அவளின் சிறப்பின் செமமையினை புகழ வேண்டும்
அய்யன் வள்ளுவனின் ஈரடி வரிகள்
அவனியில் பவனிவர வேண்டும் - அது
இம் மானுடரின் வாழ்வியல் நெறியாய் போற்றிட வேண்டும்.
மலைகளில் துள்ளிடும் அருவிகள் வானின்று புறப்பட்டு
மழையாக கொட்டி தீர்த்திட வேண்டும்
வற்றாத ஆறுகளால் வறுமையில்லா உலக வேண்டும்
ஆழ்கடல் நானாக வேண்டும் - அங்கு
நிலவும் அமைதி என் வாழ்வாக வேண்டும்
இவற்றை எல்லாம் புதுமையை படைத்திட - ஒருமுறை
இறைவன் மீண்டும் மண்ணில் வேண்டும் - அவன்
என் உள்ளத்தில் என்றும் உறைந்திட வேண்டும்
அவனோடு நான் சங்கமமாகிட வேண்டும்