M.Jagadeesan
08-08-2012, 02:32 AM
எதிரிகள் என்று எனக்கு
யாருமே இல்லை இவ்வுலகில்!
நன்மை செய்தார்க்கு நன்மையே செய்வேன்!
புன்மை செய்தார்க்கும் நன்மையே செய்வேன்!
அதனால்
எதிரிகள் என்று எனக்கு
யாருமே இல்லை இவ்வுலகில்!
அடுத்தவன் பொருளுக்கு ஆசைப் பட்டதில்லை
இறைவன்
கொடுத்தது போதும் என்று வாழ்பவன்!
அதனால்
எதிரிகள் என்று எனக்கு
யாருமே இல்லை இவ்வுலகில்!
இன்முகம் காட்டி இன்சொல் பேசி
அன்பினைக் காட்டும் பண்பு கொண்டவன்!
அதனால்
எதிரிகள் என்று எனக்கு
யாருமே இல்லை இவ்வுலகில்!
ஓர் இல், ஒரு சொல் என்று வாழ்பவன்
ஊரில் மக்களுக்கு உதவும் பண்பினன்!
அதனால்
எதிரிகள் என்று எனக்கு
யாருமே இல்லை இவ்வுலகில்!
அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டு
ஆலயம் சென்று இறைவனைத் தொழுவேன்!
அதனால்
எதிரிகள் என்று எனக்கு
யாருமே இல்லை இவ்வுலகில்!
ஆனால்
கண்ணுக்குத் தெரியா ஐந்து எதிரிகள்
மண்ணிலே உதித்த நாளது முதலா
என்னுளே இருந்து ஆட்டிப் படைத்து
துன்புறும் நரகிலே என்னைத் தள்ளி
இன்புறத் துடிக்கும் இயல்பினர் ஆவர்.
ஐம்புலன் என்னும் அத்தகு பகைவரை
அடக்கி ஆளும் மந்திரம் ஒன்றை
அடியேன் எந்தன் காதில் ஓதி
அருள்தனைச் செய்வாய் அம்பலத்து இறைவா!
யாருமே இல்லை இவ்வுலகில்!
நன்மை செய்தார்க்கு நன்மையே செய்வேன்!
புன்மை செய்தார்க்கும் நன்மையே செய்வேன்!
அதனால்
எதிரிகள் என்று எனக்கு
யாருமே இல்லை இவ்வுலகில்!
அடுத்தவன் பொருளுக்கு ஆசைப் பட்டதில்லை
இறைவன்
கொடுத்தது போதும் என்று வாழ்பவன்!
அதனால்
எதிரிகள் என்று எனக்கு
யாருமே இல்லை இவ்வுலகில்!
இன்முகம் காட்டி இன்சொல் பேசி
அன்பினைக் காட்டும் பண்பு கொண்டவன்!
அதனால்
எதிரிகள் என்று எனக்கு
யாருமே இல்லை இவ்வுலகில்!
ஓர் இல், ஒரு சொல் என்று வாழ்பவன்
ஊரில் மக்களுக்கு உதவும் பண்பினன்!
அதனால்
எதிரிகள் என்று எனக்கு
யாருமே இல்லை இவ்வுலகில்!
அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டு
ஆலயம் சென்று இறைவனைத் தொழுவேன்!
அதனால்
எதிரிகள் என்று எனக்கு
யாருமே இல்லை இவ்வுலகில்!
ஆனால்
கண்ணுக்குத் தெரியா ஐந்து எதிரிகள்
மண்ணிலே உதித்த நாளது முதலா
என்னுளே இருந்து ஆட்டிப் படைத்து
துன்புறும் நரகிலே என்னைத் தள்ளி
இன்புறத் துடிக்கும் இயல்பினர் ஆவர்.
ஐம்புலன் என்னும் அத்தகு பகைவரை
அடக்கி ஆளும் மந்திரம் ஒன்றை
அடியேன் எந்தன் காதில் ஓதி
அருள்தனைச் செய்வாய் அம்பலத்து இறைவா!