PDA

View Full Version : இடித்துவா ஏழைத்தோழா



kulakkottan
07-08-2012, 11:08 AM
https://m.ak.fbcdn.net/photos-g.ak/hphotos-ak-ash4/308952_471710006181249_761254309_a.jpg
மாடிக்கும் மனிதருக்கும் உயரம் கூடிப்போச்சு
மானிடம் மனிதருள் உயிரழந்து மிருகமாச்சு

பணம் குவிந்த குவியலிலேயே குவியுது
பசி பட்ட வயிற்றிலயே புசிக்குது மழலை உயிரையும்

தப்பு எங்கு இருக்கு என்று புரியவில்லையே
தப்ப வைக்கும் வழியும் தெரியவில்லையே

தீர்க்க வரும் கரங்கள் கூட வறண்டு
திராணியற்று வெதும்பும் மனிதருடையதே

கற்க துடிக்கும் கண்ணீர் நனைக்க கல்வியில்லையே
கலகலக்கும் தோள்களில் மூடிக்கிடக்குது புத்தகம்

நீதி கூட நிதியின் பிடியிலேயிங்கு
நீயும் நானும் ஏதும் செய்யலாம் என்றால்

வழி வரைய நான் தயார் - உணர்ந்தவர்
வழித்துணையாய் வருவார் நம்முடன்

இருந்தபடி இருந்தால் இருளும் உன்னை கவ்வும்
இடித்துவா ஏழைத்தோழா குட்டுபவனையும்

யாசகம் வேண்டாமே யாரிடமும் -புதிய மார்க்கம்
யாமும் படைப்போமே உழைப்பாலே

சிந்தித்தால் சிகரமும் சுமக்கலாமே - நீ
சிந்துகிற வியர்வையால் சிதறுமே சில்லறைகள்

தருவதற்கு மாடியும் ஆட்சியும் -கற்பக தருவல்ல
தானே தானே வளருது பனைகூட உயரத்துக்கு


குடிமூழ்கி கிடக்கையில் வேண்டுமோ -குடி
குடிசைகள் குதுகலித்த பின் குடிக்கலாமே -நல்ல தண்ணி

ஏழையோடு மனிதனாய் பிறந்தது குற்றமன்று -குடிசை மைந்தா
ஏதுமின்றி இருந்து விடாதே இருந்த இடத்திலேயே

seguwera
07-08-2012, 01:15 PM
சிந்தித்தால் சிகரமும் சுமக்கலாமே - நீ
சிந்துகிற வியர்வையால் சிதறுமே சில்லறைகள்

தருவதற்கு மாடியும் ஆட்சியும் -கற்பக தருவல்ல
தானே தானே வளருது பனைகூட உயரத்துக்கு


அருமை

jayanth
07-08-2012, 06:48 PM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))

கீதம்
08-08-2012, 02:29 AM
தாழ்வு மனப்பான்மை போக்கி, நெஞ்சில் உரமேற்றும் வைர வரிகள்.

அற்புதமானதொரு கவிதைக்குப் பாராட்டுகள் குளக்கோட்டன்.

சுகந்தப்ரீதன்
09-08-2012, 03:40 PM
புதியதோர் உலகம் செய்ய அழைப்புவிடுக்கும் கவிதைக்கு வாழ்த்துக்கள் குளக்கோட்டரே..!!:icon_b:

உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடை பாதையிலே
இரக்கம் காட்டத்தான் நாதியில்லே
------
------
உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை
உள்ளதை இழந்திட சொல்லவில்லை
உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா
------
-----
என்ற மருதகாசியாரின் பாடல் வரிகள் நினைவில்..!!