கலைவேந்தன்
05-08-2012, 09:06 AM
ஒரு பக்தனின் வேண்டுதல்...
http://4.bp.blogspot.com/_P5lKIV54Hts/TGkWnNNUEeI/AAAAAAAAEbc/fUS9LkPLDgg/s1600/pray-2.jpg
வேண்டும் வேண்டும்...
பஞ்சம் இல்லாத பாரதம் வேண்டும்...
லஞ்சம் இல்லாத அரசியல் வேண்டும்...
பயமே இல்லாத மனிதர் வேண்டும்...
சுயநலம் இல்லாத மனநிலை வேண்டும்...
தட்சிணை இல்லாத வரன்கள் வேண்டும்...
கட்சிகள் இல்லாத தமிழகம் வேண்டும்...
பட்டினி இல்லாத வாழ்க்கை வேண்டும்...
தட்டினில் குறையாத உணவுகள் வேண்டும்...
ஏக்கம் தராத மகளிர் வேண்டும்...
தூக்கம் மறுக்காத இரவுகள் வேண்டும்...
வாட்டம் இல்லாத வாழ்க்கை வேண்டும்...
ஆட்டம் இல்லாத திரைப்படம் வேண்டும்...
நஞ்சம் இல்லாத நாகம் வேண்டும்...
வஞ்சம் இல்லாத பகைவர்கள் வேண்டும்...
வேண்டும் வேண்டும் எல்லாம் வேண்டும்...
வேண்டிட மறந்த பிறவும் வேண்டும்...
விரக்தியில்லாத மனமும் வேண்டும்..
வேதனை இல்லாத சொல்லும் வேண்டும்..
கரந்து வாழாத வீரம் வேண்டும்..
கற்ற்வை பகிரும் துணிவும் வேண்டும்...
சோர்வு இல்லாத உழைப்பும் வேண்டும்..
சொந்தமாக ஓர் இல்லம் வேண்டும்..
பார்வை எல்லாமே பரிவுகள் வேண்டும்..
பாரே போற்றும் பணிவுகள் வேண்டும்..
ரத்தம் சிந்தாத யுத்தம் வேண்டும்..
ராத்திரி உணவு நிலைப்பட வேண்டும்..
பித்தம் தெளிந்திட்ட தலைவன் வேண்டும்..
பிள்ளை இல்லாத பிரதமர் வேண்டும்..
வேதம் பிறழாத வேதியர் வேண்டும்..
வேண்டியதைத் தரும் இறைவன் வேண்டும்..
பேதம் இல்லாத திருமணம் வேண்டும்..
பேடியல்லாத மணமகன் வேண்டும்...
இன்னும் இன்னும் வேண்டிட வேண்டும்..
இதயம் நிறைந்த வரங்கள் வேண்டும்..
மன்னும் போதே மறைந்திட வேண்டும்..
மக்கள் போற்றிட புதைந்திட வேண்டும்...
http://4.bp.blogspot.com/_P5lKIV54Hts/TGkWnNNUEeI/AAAAAAAAEbc/fUS9LkPLDgg/s1600/pray-2.jpg
வேண்டும் வேண்டும்...
பஞ்சம் இல்லாத பாரதம் வேண்டும்...
லஞ்சம் இல்லாத அரசியல் வேண்டும்...
பயமே இல்லாத மனிதர் வேண்டும்...
சுயநலம் இல்லாத மனநிலை வேண்டும்...
தட்சிணை இல்லாத வரன்கள் வேண்டும்...
கட்சிகள் இல்லாத தமிழகம் வேண்டும்...
பட்டினி இல்லாத வாழ்க்கை வேண்டும்...
தட்டினில் குறையாத உணவுகள் வேண்டும்...
ஏக்கம் தராத மகளிர் வேண்டும்...
தூக்கம் மறுக்காத இரவுகள் வேண்டும்...
வாட்டம் இல்லாத வாழ்க்கை வேண்டும்...
ஆட்டம் இல்லாத திரைப்படம் வேண்டும்...
நஞ்சம் இல்லாத நாகம் வேண்டும்...
வஞ்சம் இல்லாத பகைவர்கள் வேண்டும்...
வேண்டும் வேண்டும் எல்லாம் வேண்டும்...
வேண்டிட மறந்த பிறவும் வேண்டும்...
விரக்தியில்லாத மனமும் வேண்டும்..
வேதனை இல்லாத சொல்லும் வேண்டும்..
கரந்து வாழாத வீரம் வேண்டும்..
கற்ற்வை பகிரும் துணிவும் வேண்டும்...
சோர்வு இல்லாத உழைப்பும் வேண்டும்..
சொந்தமாக ஓர் இல்லம் வேண்டும்..
பார்வை எல்லாமே பரிவுகள் வேண்டும்..
பாரே போற்றும் பணிவுகள் வேண்டும்..
ரத்தம் சிந்தாத யுத்தம் வேண்டும்..
ராத்திரி உணவு நிலைப்பட வேண்டும்..
பித்தம் தெளிந்திட்ட தலைவன் வேண்டும்..
பிள்ளை இல்லாத பிரதமர் வேண்டும்..
வேதம் பிறழாத வேதியர் வேண்டும்..
வேண்டியதைத் தரும் இறைவன் வேண்டும்..
பேதம் இல்லாத திருமணம் வேண்டும்..
பேடியல்லாத மணமகன் வேண்டும்...
இன்னும் இன்னும் வேண்டிட வேண்டும்..
இதயம் நிறைந்த வரங்கள் வேண்டும்..
மன்னும் போதே மறைந்திட வேண்டும்..
மக்கள் போற்றிட புதைந்திட வேண்டும்...