சொ.ஞானசம்பந்தன்
04-08-2012, 11:20 AM
( கன்பூசியஸ் என்ற ஆங்கில நூலிலிருந்து )
மூன்று தையற்காரர்கள் ஒரே தெருவில் கடை திறந்தனர் . தாமே அதிக வாடிக்கையாளர்களைக் கவரவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்பினர் .
ஒருவர் பெரியதொரு விளம்பரப் பலகை நாட்டினார் . " இந்த மானிலத்திலேயே சிறந்த தையற்கலைஞன் நானே " என்று அதில் எழுதியிருந்தது .
இதை வாசித்த இரண்டாமவர் , இதற்கு மேலே போகவேண்டும் என எண்ணி , இன்னம் பெரிய பலகை மூலம் , " இந்த நாட்டிலேயே மிகச் சிறந்த தையற்கலைஞன் நான்தான் " எனத் தெரிவித்தார் .
மூன்றாமவர் பார்த்தார் ; இந்த உலகிலேயே சிறந்தவன் என்று விளம்பரப்படுத்தலாமா எனச் சில நாள் யோசித்தபின் ஒரு சிறு பலகை மாட்டினார் . அது அனைவரையும் கவர்ந்திழுத்தது மற்ற கடைகளைக் காலியாக்கி .
என்னதான் அறிவித்தது அது ?
" நானே சிறந்த தையற்காரன் , இந்தத் தெருவில் "
-------------------------------------------------------------------------------------
மூன்று தையற்காரர்கள் ஒரே தெருவில் கடை திறந்தனர் . தாமே அதிக வாடிக்கையாளர்களைக் கவரவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்பினர் .
ஒருவர் பெரியதொரு விளம்பரப் பலகை நாட்டினார் . " இந்த மானிலத்திலேயே சிறந்த தையற்கலைஞன் நானே " என்று அதில் எழுதியிருந்தது .
இதை வாசித்த இரண்டாமவர் , இதற்கு மேலே போகவேண்டும் என எண்ணி , இன்னம் பெரிய பலகை மூலம் , " இந்த நாட்டிலேயே மிகச் சிறந்த தையற்கலைஞன் நான்தான் " எனத் தெரிவித்தார் .
மூன்றாமவர் பார்த்தார் ; இந்த உலகிலேயே சிறந்தவன் என்று விளம்பரப்படுத்தலாமா எனச் சில நாள் யோசித்தபின் ஒரு சிறு பலகை மாட்டினார் . அது அனைவரையும் கவர்ந்திழுத்தது மற்ற கடைகளைக் காலியாக்கி .
என்னதான் அறிவித்தது அது ?
" நானே சிறந்த தையற்காரன் , இந்தத் தெருவில் "
-------------------------------------------------------------------------------------