மதுரை மைந்தன்
04-08-2012, 03:04 AM
இளம் வழக்கறிஞர் சட்ட நாதன் தனது பால்ய நண்பர் ரங்கனை சந்திக்கிறான்.
ரங்கன்: என்னம்மா எப்படி கீறே?
சட்ட நாதன்: ஒண்ணும் சுகமில்லை. ஏதோ இருக்கேன்.
ரங்கன்: உனக்கு சட்டை நாத்தன்னு பேர் வச்சிருக்கணும்பா. என்னா இது உன் பக்கத்தில இருந்து இப்படி கப் அடிக்குது?
சட்ட நாதன்: எங்க குடும்பம் வழக்கறிஞர்கள் குடும்பம்னு என்னை சட்டப் படிக்க வச்சுட்டு கண்ணை மூடிட்டாங்க அப்பா அம்மா. வக்கீல் தொழில் ஆரம்பிக்கலாம்னு ஒரு போர்ட் தொங்க விட்டேன். ஒருத்தரும் வரலை. அப்புறம் ஒரு சீனியர் கிட்ட ஜூனியரா சேர்ந்து வேலை பண்ணினேன். அந்த ஆளு ஒரு கஞ்சன். எனக்கு காபி செலவுக்கும் பஸ் சார்ஜுக்கும் தான் பணம் தந்தார். வீட்டு வாடகை இதர செலவுகளுக்கு இந்த சோஹன்லால் மதன்லால் அம்பாலால்....
ரங்கன்: ஏய் நிறுத்து. ஒரு சேட்டுகிட்ட கடன் வாங்கினேன்னு சுருக்கமா சொல்லு. அதை விட்டுட்டு அவனோட குலம் கோத்திரம் எல்லாத்தையும் சொல்றே.அது சரி, கடனுக்கும் உன் சட்டை நாத்தத்துக்கும் என்ன சம்பந்தம். கடனோட கடனா ஒரு சோப்பை வாங்கி கருமத்தை துவக்க வேண்டியது தானே.
சட்ட நாதன்: பொறுமையா கேளு ரங்கா. கடன் கொடுத்த சேட் பணத்தை வட்டியோட சேர்த்து திருப்பிதற கிடுக்கிப்பிடி
போட ஆரம்பிச்சார். நானும் சாக்கு போக்கு சொல்லி தப்பிச்சு வந்தேன். ஆனா போன வாரம் யாரோ நாலைஞ்சு தடிப்பசங்க வந்து என்னை கையை முறுக்கி அவங்க தாதா கபாலி கிட்ட கூட்டிக்கிட்டு போனாங்க.
ரங்கன்: தனுஷ் படத்தில விவேக் தெலுங்கு தாதா முன்னாடி மூச்சா பேஞ்ச மாதிரி பண்ணினயா? அதான் உங்கிட்ட இப்படி கப் அடிக்குது.
சட்ட நாதன்: அப்படியெல்லாம் ஒண்ணும் பண்ணலை. சேட்டு கபாலிகிட்ட என்னைப் பத்தி போட்டு கொடுத்துட்டான்னு எனக்கு புரிஞ்சது. கபாலி என்னை முறைச்சு பாத்து " என்ன தம்பி வாங்கின பணத்தை திருப்பிதர மாட்டேங்கறயாமே. என்னோட ஆட்களை பாத்தியா அவங்க கிட்ட நான் சொன்னா போறும் உன்னை பிரிஞ்சு மேஞ்சுடுவாங்க. நான் முதல்ல அப்படித்தான் செய்யலாம்னு நினைச்சேன். ஆனா உன்னோட அதிர்ஷ்டம் உனக்கு தப்பிக்க ஒரு வாய்ப்பு இருக்குனு சொன்னான்.
ரங்கன்: அவனோட எதிரி ஆட்களை யாராயாவது நீ தீர்த்து கட்டணும்னு சொன்னானா?
சட்ட நாதன்: இல்லை. சின்ன வயசில காணாமா போன அவனோட பையனை கண்டுபிடிச்சு தரணும்னு சொன்னான்.
ரங்கன்: இது ஒண்ணும் அப்படி கஷ்டமான வேலையா தெரியலையே. பையனோட போட்டோவையும் அவனோட அங்க அடையாளங்களையும் கேட்டு வாங்கினீனா நாம் கண்டு பிடிச்சுடலாமே.
சட்ட நாதன்: அங்கே தான் என்னோட கஷ்டம் எல்லாம் இருக்கு. அவன்கிட்ட பையனோட போட்டோ இல்லையாம். கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கு முன்னாலே மஞ்ச குப்பத்துல ஒரு குடிசைல அவன் வசிச்ச போது ஆறு வயசு பையனா இருந்தானாம் அவனோட பையன். அப்போ கபாலிக்கு ஒரு கேஸ்ல ஏழு வருசம் ஜெயில் வாசம் கிடைச்சதாம். வெளியே வந்து குப்பத்துக்கு போனா அனக்கே அவனோட குடிசை தீப்பிடிச்சு எரிஞ்சுபோனதாகவும் அவனோட மனைவி அதில இறந்து போய்விட்டதையும் கேள்விபட்டானாம். பையனை பத்தி விசாரிச்சப்போ பையன் தீ விபத்திலிருந்து தப்பிச்சு எங்கேயோபோயிட்டான்னு அறிஞ்சானாம்.
ரங்கன்: அட கஷ்ட காலமே பையனைப் பத்தி ஒண்ணும் தெரியாம எப்படி தேடறது?
சட்ட நாதன்: இப்போ புரிஞ்சதா? என் பையனை கண்டுபிடிச்சு கொடு நான் சேட்டு கிட்ட சொல்லி நீ தர வேண்டிய பணத்தை மாப் பண்ண சொல்றேன்னு அவன் சொன்னதுக்கப்புறம் எனக்கு சாப்பாடு தூக்கம் எல்லாம் பிடிக்கலை. இதில சட்டையை மாத்தணும்னு தோணலை. அவன் சொன்ன ஒரே ஒரு விஷயத்தில தான் என்னோட உசிரே இருக்கு.
ரங்கன்: என்ன விஷயம்பா?
சட்ட நாதன்: தீ விபத்து சமயத்தில அங்கே இருந்தவங்க பையனோட கால் தீயில கருகி போச்சுனு அவனை தருமாஸ்பத்திரில சேர்த்திருக்காங்க. அங்கே அவனுக்கு குணமாச்சா இப்போ எங்கேயிருக்கான்னு ஒருத்தருக்கும் தெரியாதுனு கபாலி சொன்னான்.
ரங்கன்: அப்போ நாம தேடப்போற பையன் ஒரு கரிகாலன்னு சொல்லு.
தொடரும்
ரங்கன்: என்னம்மா எப்படி கீறே?
சட்ட நாதன்: ஒண்ணும் சுகமில்லை. ஏதோ இருக்கேன்.
ரங்கன்: உனக்கு சட்டை நாத்தன்னு பேர் வச்சிருக்கணும்பா. என்னா இது உன் பக்கத்தில இருந்து இப்படி கப் அடிக்குது?
சட்ட நாதன்: எங்க குடும்பம் வழக்கறிஞர்கள் குடும்பம்னு என்னை சட்டப் படிக்க வச்சுட்டு கண்ணை மூடிட்டாங்க அப்பா அம்மா. வக்கீல் தொழில் ஆரம்பிக்கலாம்னு ஒரு போர்ட் தொங்க விட்டேன். ஒருத்தரும் வரலை. அப்புறம் ஒரு சீனியர் கிட்ட ஜூனியரா சேர்ந்து வேலை பண்ணினேன். அந்த ஆளு ஒரு கஞ்சன். எனக்கு காபி செலவுக்கும் பஸ் சார்ஜுக்கும் தான் பணம் தந்தார். வீட்டு வாடகை இதர செலவுகளுக்கு இந்த சோஹன்லால் மதன்லால் அம்பாலால்....
ரங்கன்: ஏய் நிறுத்து. ஒரு சேட்டுகிட்ட கடன் வாங்கினேன்னு சுருக்கமா சொல்லு. அதை விட்டுட்டு அவனோட குலம் கோத்திரம் எல்லாத்தையும் சொல்றே.அது சரி, கடனுக்கும் உன் சட்டை நாத்தத்துக்கும் என்ன சம்பந்தம். கடனோட கடனா ஒரு சோப்பை வாங்கி கருமத்தை துவக்க வேண்டியது தானே.
சட்ட நாதன்: பொறுமையா கேளு ரங்கா. கடன் கொடுத்த சேட் பணத்தை வட்டியோட சேர்த்து திருப்பிதற கிடுக்கிப்பிடி
போட ஆரம்பிச்சார். நானும் சாக்கு போக்கு சொல்லி தப்பிச்சு வந்தேன். ஆனா போன வாரம் யாரோ நாலைஞ்சு தடிப்பசங்க வந்து என்னை கையை முறுக்கி அவங்க தாதா கபாலி கிட்ட கூட்டிக்கிட்டு போனாங்க.
ரங்கன்: தனுஷ் படத்தில விவேக் தெலுங்கு தாதா முன்னாடி மூச்சா பேஞ்ச மாதிரி பண்ணினயா? அதான் உங்கிட்ட இப்படி கப் அடிக்குது.
சட்ட நாதன்: அப்படியெல்லாம் ஒண்ணும் பண்ணலை. சேட்டு கபாலிகிட்ட என்னைப் பத்தி போட்டு கொடுத்துட்டான்னு எனக்கு புரிஞ்சது. கபாலி என்னை முறைச்சு பாத்து " என்ன தம்பி வாங்கின பணத்தை திருப்பிதர மாட்டேங்கறயாமே. என்னோட ஆட்களை பாத்தியா அவங்க கிட்ட நான் சொன்னா போறும் உன்னை பிரிஞ்சு மேஞ்சுடுவாங்க. நான் முதல்ல அப்படித்தான் செய்யலாம்னு நினைச்சேன். ஆனா உன்னோட அதிர்ஷ்டம் உனக்கு தப்பிக்க ஒரு வாய்ப்பு இருக்குனு சொன்னான்.
ரங்கன்: அவனோட எதிரி ஆட்களை யாராயாவது நீ தீர்த்து கட்டணும்னு சொன்னானா?
சட்ட நாதன்: இல்லை. சின்ன வயசில காணாமா போன அவனோட பையனை கண்டுபிடிச்சு தரணும்னு சொன்னான்.
ரங்கன்: இது ஒண்ணும் அப்படி கஷ்டமான வேலையா தெரியலையே. பையனோட போட்டோவையும் அவனோட அங்க அடையாளங்களையும் கேட்டு வாங்கினீனா நாம் கண்டு பிடிச்சுடலாமே.
சட்ட நாதன்: அங்கே தான் என்னோட கஷ்டம் எல்லாம் இருக்கு. அவன்கிட்ட பையனோட போட்டோ இல்லையாம். கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கு முன்னாலே மஞ்ச குப்பத்துல ஒரு குடிசைல அவன் வசிச்ச போது ஆறு வயசு பையனா இருந்தானாம் அவனோட பையன். அப்போ கபாலிக்கு ஒரு கேஸ்ல ஏழு வருசம் ஜெயில் வாசம் கிடைச்சதாம். வெளியே வந்து குப்பத்துக்கு போனா அனக்கே அவனோட குடிசை தீப்பிடிச்சு எரிஞ்சுபோனதாகவும் அவனோட மனைவி அதில இறந்து போய்விட்டதையும் கேள்விபட்டானாம். பையனை பத்தி விசாரிச்சப்போ பையன் தீ விபத்திலிருந்து தப்பிச்சு எங்கேயோபோயிட்டான்னு அறிஞ்சானாம்.
ரங்கன்: அட கஷ்ட காலமே பையனைப் பத்தி ஒண்ணும் தெரியாம எப்படி தேடறது?
சட்ட நாதன்: இப்போ புரிஞ்சதா? என் பையனை கண்டுபிடிச்சு கொடு நான் சேட்டு கிட்ட சொல்லி நீ தர வேண்டிய பணத்தை மாப் பண்ண சொல்றேன்னு அவன் சொன்னதுக்கப்புறம் எனக்கு சாப்பாடு தூக்கம் எல்லாம் பிடிக்கலை. இதில சட்டையை மாத்தணும்னு தோணலை. அவன் சொன்ன ஒரே ஒரு விஷயத்தில தான் என்னோட உசிரே இருக்கு.
ரங்கன்: என்ன விஷயம்பா?
சட்ட நாதன்: தீ விபத்து சமயத்தில அங்கே இருந்தவங்க பையனோட கால் தீயில கருகி போச்சுனு அவனை தருமாஸ்பத்திரில சேர்த்திருக்காங்க. அங்கே அவனுக்கு குணமாச்சா இப்போ எங்கேயிருக்கான்னு ஒருத்தருக்கும் தெரியாதுனு கபாலி சொன்னான்.
ரங்கன்: அப்போ நாம தேடப்போற பையன் ஒரு கரிகாலன்னு சொல்லு.
தொடரும்