PDA

View Full Version : கவி ஓவியம்



A Thainis
01-08-2012, 09:37 PM
உள்ளமதில் வெள்ளமென
எழுந்திட்ட எண்ணங்களை
கருத்தாய்ந்து பகுத்தாய்ந்து
பாரெல்லாம் வழங்கிடவே
அன்னைத்தமிழ் அருள்வேண்டி
தமிழ்புலவன் நடைநின்று
தெளிமிகு சிறப்புடனே
வடித்திடவே முனைந்திட்டேன்

சொல்லொன்று தீட்டிடவே
ஓராயிரம் நொடிபொழுது
செலவழித்து இரவெல்லாம்
விழிகளை சேகரித்து
நாளெல்லாம் மூச்சுவொன்றே
உணவாக சுவாசித்து
தீட்டிட்ட தீந்தமிழ் திரவியம்
நான் வரைந்திட்ட கவி ஓவியம்

ஆ. தைனிஸ்

கீதம்
01-08-2012, 10:53 PM
படைக்கும் கவிகள் யாவும் கருத்தாய்ந்து, பகுத்தாய்ந்து படைக்கப்படுவதிலும், சொல்லொன்று தீட்டுமுன் சிந்தையிலே கொள்ளும் சிரத்தையும் உம் கவிதைகள்பால் நம்பிக்கை கொள்ள நயமாய் ஈர்க்கின்றன. தொடரட்டும் இனிய கவிப்படைப்புகள்.