M.Jagadeesan
29-07-2012, 10:05 AM
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவியை
மறக்காமல் வலியுறுத்தும் மாண்புமிகு பெற்றோரே!
தந்தை மகனுக்குச் செய்யும் கடமையை
தயைகூர்ந்து நெஞ்சிலே நினைவில் கொள்ளுங்கள்.
பெற்றது பெண்ணென்று தெரிந்து விட்டால்
குற்றம் வந்ததே எனக்கூறி அச்சிசுவைக்
குப்பைத் தொட்டியில் எறிந்தது யார்குற்றம்?
வேரின் குற்றமா அன்றி விழுதின் குற்றமா?
பள்ளிக்குச் சென்று படிக்கும் வயதில்
பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி
பட்டாசு கம்பெனியில் வேலைக்குச் சேர்த்தது
வேரின் குற்றமா அன்றி விழுதின் குற்றமா?
பள்ளித் தேர்விலே மதிப்பெண் குறைவானால்
எள்ளி நகையாடி ஏகடியம் பேசியே
தண்டித்து அவனைத் தற்கொலைக்குத் தூண்டியது
வேரின் குற்றமா அன்றி விழுதின் குற்றமா?
காதலித்த ஒருவனைக் கைப்பிடிக்க வழியின்றி
ஜாதிமத பேதங்கள் பேசியே அவள் வாழ்வை
வேதனையில் தள்ளி வேடிக்கைப் பார்ப்பது
வேரின் குற்றமா அன்றி விழுதின் குற்றமா?
வேர்களே! என்றும் விழுதுகள் நல்லவைதான்
நீர்தான் அவற்றை நிலைநிறுத்த வேண்டும்
விழுதுகளை வேர்கள் மறந்து போனால்
பொழுது போக்கிடம் முதியோர் காப்பகம் !
மறக்காமல் வலியுறுத்தும் மாண்புமிகு பெற்றோரே!
தந்தை மகனுக்குச் செய்யும் கடமையை
தயைகூர்ந்து நெஞ்சிலே நினைவில் கொள்ளுங்கள்.
பெற்றது பெண்ணென்று தெரிந்து விட்டால்
குற்றம் வந்ததே எனக்கூறி அச்சிசுவைக்
குப்பைத் தொட்டியில் எறிந்தது யார்குற்றம்?
வேரின் குற்றமா அன்றி விழுதின் குற்றமா?
பள்ளிக்குச் சென்று படிக்கும் வயதில்
பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி
பட்டாசு கம்பெனியில் வேலைக்குச் சேர்த்தது
வேரின் குற்றமா அன்றி விழுதின் குற்றமா?
பள்ளித் தேர்விலே மதிப்பெண் குறைவானால்
எள்ளி நகையாடி ஏகடியம் பேசியே
தண்டித்து அவனைத் தற்கொலைக்குத் தூண்டியது
வேரின் குற்றமா அன்றி விழுதின் குற்றமா?
காதலித்த ஒருவனைக் கைப்பிடிக்க வழியின்றி
ஜாதிமத பேதங்கள் பேசியே அவள் வாழ்வை
வேதனையில் தள்ளி வேடிக்கைப் பார்ப்பது
வேரின் குற்றமா அன்றி விழுதின் குற்றமா?
வேர்களே! என்றும் விழுதுகள் நல்லவைதான்
நீர்தான் அவற்றை நிலைநிறுத்த வேண்டும்
விழுதுகளை வேர்கள் மறந்து போனால்
பொழுது போக்கிடம் முதியோர் காப்பகம் !