vasikaran.g
29-07-2012, 08:28 AM
கருவறையில் உலவவிட்டு ,
உணவறையை பகிர்ந்தளித்து ,
உணர்வுகளை ஒருங்கிணைத்து,
உறைவழியே -சுவாச
அறை செய்தளித்து ,
உதிரத்தை உறிஞ்ச
உரிமை கொடுத்து ,
உயிரை வளர்த்தவளை ,
திண்ணையில் உட்காரவைத்து ,
கண்ணில் குளம் தோண்டும்
கண்ணின் மணிகளுக்கு ,
சொல்லித் தெரிவதில்லை
சொந்த தாயின் அருமை .!
தன் நலம் கொன்று ,
மக்கள் நலம் பெரிதென்று
தன் வாழ்நாளை
தந்து மகிழ்ந்தவனை ,
கொன்று களிக்கின்றது
செல்ல பிள்ளைகள் .!!
கண்ணுக்குள் வைத்துக் காத்தவர்கள் ,
இன்னும் ஏன் மண்ணுக்குள்
போகவில்லை என்றொரு ஏக்கம் ,
கண்மணிகள் மணந்த
பெண்மணிகளின் பெருவிழிகளில் !!!
வயிற்றில் சுமப்பவளுக்காக ,
வயிற்றில் சுமந்தவளை ,
கயிற்றில் தொங்கவிடுகிறாயே ?
ஏய் மானிடா !
வளர்ந்தகதை மறந்ததேனடா ??
உணவறையை பகிர்ந்தளித்து ,
உணர்வுகளை ஒருங்கிணைத்து,
உறைவழியே -சுவாச
அறை செய்தளித்து ,
உதிரத்தை உறிஞ்ச
உரிமை கொடுத்து ,
உயிரை வளர்த்தவளை ,
திண்ணையில் உட்காரவைத்து ,
கண்ணில் குளம் தோண்டும்
கண்ணின் மணிகளுக்கு ,
சொல்லித் தெரிவதில்லை
சொந்த தாயின் அருமை .!
தன் நலம் கொன்று ,
மக்கள் நலம் பெரிதென்று
தன் வாழ்நாளை
தந்து மகிழ்ந்தவனை ,
கொன்று களிக்கின்றது
செல்ல பிள்ளைகள் .!!
கண்ணுக்குள் வைத்துக் காத்தவர்கள் ,
இன்னும் ஏன் மண்ணுக்குள்
போகவில்லை என்றொரு ஏக்கம் ,
கண்மணிகள் மணந்த
பெண்மணிகளின் பெருவிழிகளில் !!!
வயிற்றில் சுமப்பவளுக்காக ,
வயிற்றில் சுமந்தவளை ,
கயிற்றில் தொங்கவிடுகிறாயே ?
ஏய் மானிடா !
வளர்ந்தகதை மறந்ததேனடா ??