M.Jagadeesan
29-07-2012, 04:04 AM
பஞ்சும் நெருப்பும் பக்கத்திலே இருந்தால்
பற்றியே எரியும் என்பார் உலகியலார்.
ஆனால்
நீரோடு நீர்கலந்து எரிகின்ற காட்சியினை
ஊரார் கண்டு வியந்தே நின்றனரே!
மங்கையவள் பெயரோ மாசில்லா " கங்கை"
மன்னவன் பெயரோ வற்றாத " கிருஷ்ணா"
பேருந்து நிறுத்தத்தில் அருகருகே இருவர்
பேருந்து வந்தது ; ஏறினர் இருவரும்.
பேருந்தின் உள்ளே கங்கை அமர்ந்திருக்க
தொங்கிய நிலையில் கிருஷ்ணா பயணிக்க
சதிராடும் கண்கள் சங்கமம் ஆனதால்
மிதிலைக் காட்சியங்கே மீண்டும் நடந்தது.
பேருந்து நின்றது ; இறங்கினர் இருவரும்
கங்கையும், கிருஷ்ணாவும் கைகோர்த்து சென்றனர்
நீரோடு நீர்கலந்து எரிகின்ற காட்சியினை
ஊரார் கண்டு வியந்தே நின்றனர்!
பற்றியே எரியும் என்பார் உலகியலார்.
ஆனால்
நீரோடு நீர்கலந்து எரிகின்ற காட்சியினை
ஊரார் கண்டு வியந்தே நின்றனரே!
மங்கையவள் பெயரோ மாசில்லா " கங்கை"
மன்னவன் பெயரோ வற்றாத " கிருஷ்ணா"
பேருந்து நிறுத்தத்தில் அருகருகே இருவர்
பேருந்து வந்தது ; ஏறினர் இருவரும்.
பேருந்தின் உள்ளே கங்கை அமர்ந்திருக்க
தொங்கிய நிலையில் கிருஷ்ணா பயணிக்க
சதிராடும் கண்கள் சங்கமம் ஆனதால்
மிதிலைக் காட்சியங்கே மீண்டும் நடந்தது.
பேருந்து நின்றது ; இறங்கினர் இருவரும்
கங்கையும், கிருஷ்ணாவும் கைகோர்த்து சென்றனர்
நீரோடு நீர்கலந்து எரிகின்ற காட்சியினை
ஊரார் கண்டு வியந்தே நின்றனர்!