PDA

View Full Version : எலி சனியன்



ரங்கராஜன்
22-07-2012, 06:51 AM
j3gjp35

தாமரை
22-07-2012, 07:38 AM
கட்டா மிட்டா நட்பு என்பார்கள். இனிப்பும் புளிப்புமான ஒரு நட்பு. புரியலை இல்லையா? எளிமையாகச் சொல்லணும்னா டாம் அண்ட் ஜெர்ரி நட்பு...

எலியுடன் வாழ்வது என்பது தனிக்கலை. சேலத்தில் எங்கள் வீட்டில் தலைமுறை தலைமுறையாக வாழும் எலிகள் உண்டு. அவர்களும் சரி நாங்களும் சரி பட்டினியாக படுத்ததில்லை. காரணம் இருக்கிறது. இது பரவாயில்லை. எங்க அம்மாவின் தாத்தா வீட்டில் பரண் மேல பாம்பே வசித்ததாம். அவங்களும் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு வாழ்ந்திருக்காங்க.

பட்டணத்துக்காரனுக்கு பக்கத்து வீட்டுக்காரனைத் தெரியாது என்பது பழமொழியாகவே அங்கீகரிக்கப்படும் காலம் வந்துவிட்டது. இப்ப நம்ம வீட்டில் இருப்பவங்களைப் பற்றியே நமக்கு தெரியாமல் போகிறது. எத்தியோப்பியா சோமாலியா என நம்ம பொது அறிவை தம்பட்டம் அடித்துக் கொண்டு விவரிக்கும் போது நம்ம வீட்ல நம்கூட தினம் தினம் புழங்கும் ஒரு உயிரைப் பற்றி எவ்வளவு அக்கறை காட்டுகிறோம்?

நம்ம வீடு? பார்த்தீங்களா நம்ம ஆணவத்தை. என்னவோ பூமியை நாமதான் உருண்டை பிடிச்சு வச்ச மாதிரி ஒரு எண்ணம். நாம பிறந்த அதே மண்ணில்தான் அந்த எலியும் பிறந்திருக்கு. அதுக்கும் உரிமை இருக்கில்லையா?

பலபேர் செல்லப் பிராணி வளர்ப்பாங்க. தங்களோட சுகதுக்கங்களை அதனோட பங்கு போட்டுக்குவாங்க.. நாய், பூனை, கிளி, எலி (வெள்ளெலி), மைனா,மீன் புறா இப்படிச் செல்லப் பிராணிகள் உண்டு. தன்னுடைய வாழ்வில் பிறருக்கு இடம் கொடுப்பது என்பது மிக முக்கியமான அம்சம். அம்மாக்களுக்கு இதில் பிரச்சனை இருப்பதில்லை. பிள்ளைகள் கிடைத்ததினால் எளிதாக பகிர்ந்து கொள்ள முடிகிறது. பலருக்கும் இப்படி யாராவது கிடைத்து விடுகிறார்கள்.

நம் வாழ்க்கையில் நம் இடத்தில் புதிதாக நுழையும் ஒருவர் மெல்ல மெல்ல நம் சிந்தனையை ஆக்ரமிப்பது போல இயற்கையான ஒரு உறவு உண்டாவது எளியதுதான்.

எனக்கு ஒரு விஷயம் இன்றைய நாள் வரை முழுத்தெளிவு கிடைக்காமலேயே இருந்தது. இன்று உன் பகிர்வு அதை மிகத் தெளிவாக உணர்த்தி விட்டது.
அதுதான் இந்தியத் திருமணவாழ்க்கை. பெற்றோர் நடத்தும் திருமணங்களில் தம்பதிகளுக்கு ஆரம்ப காலத்தில் நிம்மதி இல்லாமல் இருந்தாலும் காலம் செல்லச் செல்ல எப்படி அவர்கள் உறவு எப்படி வலு பெறும் என்பதை உன் வீட்டு எலி மிக எளிதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டது.

Ravee
22-07-2012, 10:00 AM
http://www.neilpeterson.com/wp-content/uploads/2009/02/walt-disney_mickey-mouse-drawing.jpg


தகஸ் உன் எழுத்துக்கு நான் எப்பவும் ரசிகன் . ஒரு முறை கூட என்னை ஏமாற்றியது இல்லை உன் எழுத்துக்கள் .... மனதில் உள்ளதை அப்படியே ரசனை குறையாமல் சொல்லும் உன் படைப்புக்களை விட அதில் வரும் பாத்திரங்களை சந்திக்க ஆவலை தூண்டும் . இந்த முறை ஒரு துளி கண்ணீரில் முடிந்து விட்டது .


கேலிச் சித்திர மேதை வால்ட் டிஸ்னி ... தன அங்கீகாரத்துக்காக ஹாலிவுட்டில் போராடிக்கொண்டு இருந்த காலத்தில் அவருடைய அறையை பங்கு போட்டுக்க் கொண்டது ஒரு எலி . எலி எப்போதும் அதன் செயல் என்னவோ அதை தான் செய்தது . துரு துரு வென்று இங்கும் அங்கும் ஓடி திரியும் . காலணிகளை கடித்து வைக்கும் . தின்பண்டங்களை கொறித்து வைக்கும் . உங்கள் சட்டையில் இலவசமாக ஏர்கண்டிசன் வசதிகள் செய்து வைக்கும் . இதை எல்லாம் பொறுத்துக்கொள்ள கண்டிப்பாக சாதாரண ஆத்மாக்களால் முடியாது . பரமாத்மாக்களால் மட்டுமே முடியும் . வால்ட் டிஸ்னியும் ஒரு பரமாத்வாக அதை ரசித்தார் . அதன் பின் தான் அவர் கற்பனையில் மிக்கி மவுஸ் பிறந்தது . சாதாரண எலி அவரை சிரஞ்சிவியாக இந்த உலகில் ஆக்கி போனது . இன்று ஒருவருக்கும் அந்த எலியை தெரியாது .... ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் இதயத்தையும் அந்த எலியின் பிம்பம் தொட்டுவிட்டு போகிறது .


திருமணத்திற்கு பிறகு நிறைய விசயங்களை ரசிக்கப்பழகி கொள்கிறோம். அதை பார்க்கும் போது கொசுக்கடியை விட எலித்தொல்லை பரவாயில்லை என்றுதான் சொல்வேன் . முடிந்தால் கீழே உள்ள படத்தின் டி வி டி கிடைத்தால் பார்.


http://hindi-comedy.com/humour/wp-content/uploads/2011/12/watch-online-The-Mouse-Hunt-Hollywood-Comedy-movie-for-free.jpg

கீதம்
22-07-2012, 01:05 PM
மீண்டும் தக்ஸின் எழுத்துக்களைக் காண்பதில் மிகவும் மகிழ்ச்சி. நீண்ட நாட்களுக்குப் பின் மன்றத்தில் உன்னைப் பதிவிட வைத்த எலிக்கு முதலில் நன்றி. எலியுடனான உன் சிநேகத்தையும் பகையையும் அப்பட்டமாய் எடுத்துச் சொல்லும் எழுத்துக்கள். எலி, தான் இறந்த விவரம் உனக்குத் தெரியவேண்டுமென்பதற்காகவே பொந்துக்கு வெளியில் வந்து கிடந்ததோ என்று தோன்றுகிறது.

ரயிலைப் பிடிக்க ஓடும் ஓட்டத்தையும், படும் பாட்டையும், நகைச்சுவையாக எழுதியிருந்தாலும் அதிலிருக்கும் கஷ்டத்தை உணரமுடிகிறது. சைதாப்பேட்டை முதல் மறைமலைநகர் வரை முன்பு அடிக்கடி ரயில் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஏறுவதை விடவும் இறங்குவதற்குள் முழிபிதுங்கிவிடும்.

ஆசிரியர் மனதில் நிறைந்துவிட்டார். அவருடைய மாணவரும்தான். புதிய பணிக்கு வாழ்த்துக்கள் தக்ஸ்.

கலைவேந்தன்
22-07-2012, 04:54 PM
ரங்கராஜன்.. நான் தங்கள் கதைகளை அதிகம் வாசித்ததில்லை. ( இனிமேல் வாசிக்கவேண்டும் என்னும் வெறியே வந்துவிட்டது.)

ஓர் எலியின் அல்லல்களும் அதனால் மனிதன் படும் அல்லல்களையும் நகைச்சுவை மிளிர அழகாக வழங்கி இருக்கிறீர்கள். நகைச்சுவையாய் எழுத தனிக்கலை அவசியம். அது ஒரு வரம். அந்த வரம் தங்களுக்கு அதிகம் வாய்த்திருக்கிறது.

ஹூம்.. நம் வீடு நமதென்று நாமெண்ணி இருக்க தன் வீடு தனதென்று எலியெண்ணி இருக்க.. இருவருக்கும் இடையில் போராட்டம். அதை இத்தனை நகைச்சுவையுடன் வழங்கிய தங்கள் திறமை மெச்சத்தக்கது.

சிறப்புப்பாராட்டுகள் ரங்கராஜன்..!

மதி
23-07-2012, 04:46 AM
நீண்ட நாள் கழித்து உன் எழுத்தைப்படிக்கிறேன்.. சுவாரஸ்யம் குறையாமல் நகைச்சுவை கலந்த சம்பவக்கோர்வை.. நல்ல ஒரு கொரியன் படம் பார்த்த திருப்தி.. :) வேலையெல்லாம் செட்டாச்சா???

ஜானகி
23-07-2012, 05:27 AM
அம்மாவின் வீட்டிற்குப் பெண்ணை அழைத்துவருவதற்காகத் தன் உயிரையே கொடுத்த அந்த எலிக்கு என் அஞ்சலிகள் !

கூடிய சீக்கிரம் நல்ல தோழமை [தோழிமை] கிடைக்க வாழ்த்துகிறேன் !

அமரன்
25-07-2012, 05:40 AM
கட்டா மிட்டா நட்பு என்பார்கள். இனிப்பும் புளிப்புமான ஒரு நட்பு. புரியலை இல்லையா? எளிமையாகச் சொல்லணும்னா டாம் அண்ட் ஜெர்ரி நட்பு...

எலியுடன் வாழ்வது என்பது தனிக்கலை. சேலத்தில் எங்கள் வீட்டில் தலைமுறை தலைமுறையாக வாழும் எலிகள் உண்டு. அவர்களும் சரி நாங்களும் சரி பட்டினியாக படுத்ததில்லை. காரணம் இருக்கிறது. இது பரவாயில்லை. எங்க அம்மாவின் தாத்தா வீட்டில் பரண் மேல பாம்பே வசித்ததாம். அவங்களும் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு வாழ்ந்திருக்காங்க.

பட்டணத்துக்காரனுக்கு பக்கத்து வீட்டுக்காரனைத் தெரியாது என்பது பழமொழியாகவே அங்கீகரிக்கப்படும் காலம் வந்துவிட்டது. இப்ப நம்ம வீட்டில் இருப்பவங்களைப் பற்றியே நமக்கு தெரியாமல் போகிறது. எத்தியோப்பியா சோமாலியா என நம்ம பொது அறிவை தம்பட்டம் அடித்துக் கொண்டு விவரிக்கும் போது நம்ம வீட்ல நம்கூட தினம் தினம் புழங்கும் ஒரு உயிரைப் பற்றி எவ்வளவு அக்கறை காட்டுகிறோம்?

நம்ம வீடு? பார்த்தீங்களா நம்ம ஆணவத்தை. என்னவோ பூமியை நாமதான் உருண்டை பிடிச்சு வச்ச மாதிரி ஒரு எண்ணம். நாம பிறந்த அதே மண்ணில்தான் அந்த எலியும் பிறந்திருக்கு. அதுக்கும் உரிமை இருக்கில்லையா?

பலபேர் செல்லப் பிராணி வளர்ப்பாங்க. தங்களோட சுகதுக்கங்களை அதனோட பங்கு போட்டுக்குவாங்க.. நாய், பூனை, கிளி, எலி (வெள்ளெலி), மைனா,மீன் புறா இப்படிச் செல்லப் பிராணிகள் உண்டு. தன்னுடைய வாழ்வில் பிறருக்கு இடம் கொடுப்பது என்பது மிக முக்கியமான அம்சம். அம்மாக்களுக்கு இதில் பிரச்சனை இருப்பதில்லை. பிள்ளைகள் கிடைத்ததினால் எளிதாக பகிர்ந்து கொள்ள முடிகிறது. பலருக்கும் இப்படி யாராவது கிடைத்து விடுகிறார்கள்.

நம் வாழ்க்கையில் நம் இடத்தில் புதிதாக நுழையும் ஒருவர் மெல்ல மெல்ல நம் சிந்தனையை ஆக்ரமிப்பது போல இயற்கையான ஒரு உறவு உண்டாவது எளியதுதான்.

எனக்கு ஒரு விஷயம் இன்றைய நாள் வரை முழுத்தெளிவு கிடைக்காமலேயே இருந்தது. இன்று உன் பகிர்வு அதை மிகத் தெளிவாக உணர்த்தி விட்டது.
அதுதான் இந்தியத் திருமணவாழ்க்கை. பெற்றோர் நடத்தும் திருமணங்களில் தம்பதிகளுக்கு ஆரம்ப காலத்தில் நிம்மதி இல்லாமல் இருந்தாலும் காலம் செல்லச் செல்ல எப்படி அவர்கள் உறவு எப்படி வலு பெறும் என்பதை உன் வீட்டு எலி மிக எளிதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டது.

விபரம் ப்ளீஸ்.

மதி
25-07-2012, 06:49 AM
என்ன விவரங்கள் எதிர்பார்க்கிறீர்கள் அமரா??

சுகந்தப்ரீதன்
25-07-2012, 02:16 PM
எலியுடனான ஒருமனிதனின் உறவை கொஞ்சமும் சுவராஸ்யம் குறையாமல் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை உணர்வுகளை அப்பட்டமாக வெளிபடுத்தி வாசகனை வசப்படுத்தும் எளிமையான இந்த எழுத்துநடை உங்களின் எழுத்தாளுமையை எடுத்தியம்புகிறது தக்ஸ்..!!

உங்களின் ஆரம்பகால எழுத்துகளை இவ்வேளை நினைக்கையில் நல்லதொரு முன்னேற்றத்தை உங்கள் எழுத்துகளின் உணரமுடிகிறது.. தொடர்ந்து நேரம் கிடைக்கையில் எழுதுங்கள் நண்பரே..!!

எலிசனியனுக்கு எமது ஆழ்ந்தவருத்தங்களும் வாழ்த்துக்களும்..!!:)

ஆதவா
25-07-2012, 03:42 PM
மாப்பி!!
கலக்கிட்ட.. சுவாரசியமா, போரடிக்காம ஒரு பெரிய கட்டுரை எழுதறது சாதாரண விஷயமல்ல... ரெயிலைப் பிடிக்கறதைப் பத்தி எழுதியிருக்கியே.... சான்ஸே இல்ல.. நீ ஒரு “ப்ரொ” !

இந்த நிகழ்வுகளில் இருந்து உனக்கான கதை, கதைப்போக்கு, அனுபவம், எழுத்தாளுமை எல்லாம் எப்படி கிடைக்கிறது என்பதை ஓரளவு யூகிக்க முடிகிறது!!! வெல்டன் மாப்பி!

அமரன்
26-07-2012, 07:29 AM
என்ன விவரங்கள் எதிர்பார்க்கிறீர்கள் அமரா??
நவீனநாரதர்..

மதி
26-07-2012, 07:31 AM
இன்னுமா நாரதர்.... :frown:

Mano.G.
27-07-2012, 01:23 AM
கதையூடே சில தத்துவங்களையும் சொல்லும்
உன் திறமைக்கு சல்யூட்,

வாழ்த்துக்கள்

ரங்கராஜன்
29-07-2012, 07:50 AM
நன்றி உறவுகளே.......

என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நம் மன்றத்தில் குறிப்பிட வேண்டும் என்று நினைத்து தான் என்னுடைய விளையாட்டு தனமான உணர்வுகளையும், எனக்குள் இருக்கும் சில உணர்வுகளையும் அப்படியே பதிக்கிறேன்...... அதற்கு நீங்கள் பாராட்டியது உங்களின் பெருந்தன்மையை தருகிறது....... மன்றம் என்பதாலும், என்னைப் பற்றி மன்றத்தில் தெரியும் என்பதாலும் (லூசுப்பையன் என்று ஹா ஹாஹா) அதனால் குழந்தையின் மனது வலிக்க கூடாது என்பதற்காக தாய், செட்டை செய்யும் குழந்தையை கொஞ்சுவதைப் போல நான் இதை எடுத்துக் கொள்கிறேன்......

இது தன்னடக்கத்தால் அல்ல........காரணம் அப்படி நினைத்திருந்தால் என்னுடைய படைப்பில் தன்னடக்க வாக்கியங்கள் நிறைய அமைந்திருக்கும்........ என் மன்ற முன்னோடிகள்..... அப்படி இப்போது அவர்கள் எழுதுவதில்லை......... அவர்களிடம் வந்தது தான் எல்லாம்.....(நான் தன்னடக்கத்தை பற்றி சொல்லவில்லை, எழுத்தில் திமிர் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி சொல்கிறேன்)....எனக்கும் காலம் செல்ல செல்ல தன்னடக்கம் வந்து விடுமோ என்ற பயத்தில் உண்மையை நிறைவாக சொல்ல வேண்டும் என்ற பதட்டம் அதிகமாகி வருகிறது.....அதன் வெளிப்பாடு தான் திருடன் திருடன் திருடன் என்ற சமீபத்திய திரி......... நன்றி.......