lavanya
01-01-2004, 09:45 PM
படித்தவை
படித்த புத்தகத்தில்
கிழிந்த கடைசி பக்கம்
கொலையாளி யார்?
- யாரோ.
சில வித கதைகள் படிக்கும்போது ஆஹா இப்படி முடிவு வச்சிருக்காங்களே..இதை இப்படி முடிச்சிருக்கலாமே என தோன்றும். இது ஒரு வகை. (சில கதை முடிஞ்சாலே
போதும்பா என தோண வைக்கும் அது ஒரு வகை கதை ). ஆனால் கதையை சுவையாக
கொண்டு சென்று முடிவை நாமே ஊகிக்கும் விதமாக முடிக்கும் கதைகள் ஏதும்
படித்திருக்கிறீர்களா...? அதாவது நம் மனநிலைக்கு ஏற்றார்போல் முடிவுகளை நாமே
அவதானிப்பது...என் கல்லூரி ஆங்கில பாடத்திட்டத்தில் உள்ள ஒரு கதை - இன்னும்
தடுமாறி கொண்டிருக்கிறேன்...
பெண்ணா அல்லது புலியா ? (Lady or the Tiger)
கொஞ்சம் என் நடையில் கதையை சொல்கிறேன்
ஒரு ராஜா...அவனுக்கு ஒரே மகள். பேரழகி..அந்த சாம்ராஜ்யத்தின் அடுத்த வாரிசு..மன்னன்
உயிரையே வைத்திருக்கும் ராஜகுமாரி தமிழ் சினிமாவின் வழக்கமான பார்முலாப்படி அரண்மனை சேவகனை காதலிக்கிறாள். ராஜா கொஞ்சம் இருபத்தி மூன்றாம் புலிகேஸி ரகம். யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு வித்தியாசமான தண்டனை கொடுப்பான்.
உதாரணமாக யாராவது திருடினால் அவனை ஒரு மைதானத்துக்கு வரவழைப்பான்.அந்த மைதானத்தின் நடுவில் இரண்டு அறைகள் கொண்ட ஒரு கட்டடம் இருக்கும். ஒரு
அறையில் திருடன் திருடியது போல் பல மடங்கு சொத்து. மற்றொரு அறையில் பசித்த
கொடிய புலி இருக்கும். குற்றவாளி ஏதேனும் ஒரு அறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதிர்ஷ்டவசமாக சொத்து உள்ள அறை தேர்ந்தெடுத்தால் சந்தோஷ வாழ்க்கை.புலி அறை
தேர்ந்தெடுக்கப்பட்டால் அவ்வளவுதான் .ஆள் காலி... இந்த அறைகளின் பொருட்கள்
அடிக்கடி இடம் மாறும்.
அப்படிப்பட்ட அரசனுக்கு மகளின் காதல் தெரிய வருகிறது...அப்புறமென்ன...அரண்மனை
சேவகன் மைதானத்துக்கு கொண்டு வரப்படுகிறான். ஒரு அறையில் புலி . எந்த அறையில் புலி எந்த அறையில் பெண் என்பது இளவரசிக்கும் தெரியும். மற்றொரு அறையில் இளவரசியைப் போல் பல மடங்கு அழகுள்ள ஒரு பெண். ஒரு அறையை தேர்ந்தெடுக்க மன்னனால் நிர்ப்பந்திக்கப்படுகிறான் சேவகன். கடைசி தருணத்தில் அரசன் பக்கத்திலிருந்த இளவரசி ஒரு அறையை கண்களால் ஜாடை காட்டுகிறாள். அது தெரிந்த அரசன் இளவரிசியை உடனே அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுகிறான்.இளவரசி கண்காட்டி சொன்ன அறையை சேவகன் தேர்ந்தெடுக்க முடிவு செய்கிறான்.
இங்கு கேள்விகள் ஆரம்பம். -
அ ] 'பொதுவாக' என கொண்டால் இளவரசி சொல்ல வந்தது
1. அந்த அறையில்தான் புலி இருக்கிறது. போகாதே
2. அந்த அறையில்தான் அழகி இருக்கிறாள் போ.
ஆ ] இளவரசி 'பொழைச்சு போகட்டும் அவன் ' என்ற மனப்பான்மையில் இருந்தால்
1. அந்த அறையில் தான் அழகி இருக்கிறாள். போ
2. அந்த அறையில் தான் புலி இருக்கிறது. போகாதே
இ ] இளவரசி 'எனக்கு கிடைக்காதவன் செத்தே போகட்டும்' என்று நினைத்தால்
1. அந்த அறையில் தான் அழகி இருக்கிறாள் ( புலி உள்ள அறை)
2. அந்த அறையில்தான் புலி இருக்கிறது (அழகி உள்ள அறை)
இப்போது சொல்லுங்கள் இளவரசி சொல்ல வந்த அறை Lady or the Tiger ?
சின்னதம்பி : அதிருக்கட்டும் லாவண்யா...நீங்க என்னா பதில் எழுதினீங்க...?
லாவண்யா : நான் எழுதுனது இருக்கட்டும்..நீங்களா இருந்தா என்னா எழுதுவீங்க...?
சின்ன தம்பி : சாய்ஸ்லே விட்டுட்டு வேற கேள்விக்கு போய்டுவேன். ஏதோ ரொமாண்டிக்
ஸ்டோரியா இருக்கும்னு வந்தா....ம்..
படித்த புத்தகத்தில்
கிழிந்த கடைசி பக்கம்
கொலையாளி யார்?
- யாரோ.
சில வித கதைகள் படிக்கும்போது ஆஹா இப்படி முடிவு வச்சிருக்காங்களே..இதை இப்படி முடிச்சிருக்கலாமே என தோன்றும். இது ஒரு வகை. (சில கதை முடிஞ்சாலே
போதும்பா என தோண வைக்கும் அது ஒரு வகை கதை ). ஆனால் கதையை சுவையாக
கொண்டு சென்று முடிவை நாமே ஊகிக்கும் விதமாக முடிக்கும் கதைகள் ஏதும்
படித்திருக்கிறீர்களா...? அதாவது நம் மனநிலைக்கு ஏற்றார்போல் முடிவுகளை நாமே
அவதானிப்பது...என் கல்லூரி ஆங்கில பாடத்திட்டத்தில் உள்ள ஒரு கதை - இன்னும்
தடுமாறி கொண்டிருக்கிறேன்...
பெண்ணா அல்லது புலியா ? (Lady or the Tiger)
கொஞ்சம் என் நடையில் கதையை சொல்கிறேன்
ஒரு ராஜா...அவனுக்கு ஒரே மகள். பேரழகி..அந்த சாம்ராஜ்யத்தின் அடுத்த வாரிசு..மன்னன்
உயிரையே வைத்திருக்கும் ராஜகுமாரி தமிழ் சினிமாவின் வழக்கமான பார்முலாப்படி அரண்மனை சேவகனை காதலிக்கிறாள். ராஜா கொஞ்சம் இருபத்தி மூன்றாம் புலிகேஸி ரகம். யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு வித்தியாசமான தண்டனை கொடுப்பான்.
உதாரணமாக யாராவது திருடினால் அவனை ஒரு மைதானத்துக்கு வரவழைப்பான்.அந்த மைதானத்தின் நடுவில் இரண்டு அறைகள் கொண்ட ஒரு கட்டடம் இருக்கும். ஒரு
அறையில் திருடன் திருடியது போல் பல மடங்கு சொத்து. மற்றொரு அறையில் பசித்த
கொடிய புலி இருக்கும். குற்றவாளி ஏதேனும் ஒரு அறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதிர்ஷ்டவசமாக சொத்து உள்ள அறை தேர்ந்தெடுத்தால் சந்தோஷ வாழ்க்கை.புலி அறை
தேர்ந்தெடுக்கப்பட்டால் அவ்வளவுதான் .ஆள் காலி... இந்த அறைகளின் பொருட்கள்
அடிக்கடி இடம் மாறும்.
அப்படிப்பட்ட அரசனுக்கு மகளின் காதல் தெரிய வருகிறது...அப்புறமென்ன...அரண்மனை
சேவகன் மைதானத்துக்கு கொண்டு வரப்படுகிறான். ஒரு அறையில் புலி . எந்த அறையில் புலி எந்த அறையில் பெண் என்பது இளவரசிக்கும் தெரியும். மற்றொரு அறையில் இளவரசியைப் போல் பல மடங்கு அழகுள்ள ஒரு பெண். ஒரு அறையை தேர்ந்தெடுக்க மன்னனால் நிர்ப்பந்திக்கப்படுகிறான் சேவகன். கடைசி தருணத்தில் அரசன் பக்கத்திலிருந்த இளவரசி ஒரு அறையை கண்களால் ஜாடை காட்டுகிறாள். அது தெரிந்த அரசன் இளவரிசியை உடனே அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுகிறான்.இளவரசி கண்காட்டி சொன்ன அறையை சேவகன் தேர்ந்தெடுக்க முடிவு செய்கிறான்.
இங்கு கேள்விகள் ஆரம்பம். -
அ ] 'பொதுவாக' என கொண்டால் இளவரசி சொல்ல வந்தது
1. அந்த அறையில்தான் புலி இருக்கிறது. போகாதே
2. அந்த அறையில்தான் அழகி இருக்கிறாள் போ.
ஆ ] இளவரசி 'பொழைச்சு போகட்டும் அவன் ' என்ற மனப்பான்மையில் இருந்தால்
1. அந்த அறையில் தான் அழகி இருக்கிறாள். போ
2. அந்த அறையில் தான் புலி இருக்கிறது. போகாதே
இ ] இளவரசி 'எனக்கு கிடைக்காதவன் செத்தே போகட்டும்' என்று நினைத்தால்
1. அந்த அறையில் தான் அழகி இருக்கிறாள் ( புலி உள்ள அறை)
2. அந்த அறையில்தான் புலி இருக்கிறது (அழகி உள்ள அறை)
இப்போது சொல்லுங்கள் இளவரசி சொல்ல வந்த அறை Lady or the Tiger ?
சின்னதம்பி : அதிருக்கட்டும் லாவண்யா...நீங்க என்னா பதில் எழுதினீங்க...?
லாவண்யா : நான் எழுதுனது இருக்கட்டும்..நீங்களா இருந்தா என்னா எழுதுவீங்க...?
சின்ன தம்பி : சாய்ஸ்லே விட்டுட்டு வேற கேள்விக்கு போய்டுவேன். ஏதோ ரொமாண்டிக்
ஸ்டோரியா இருக்கும்னு வந்தா....ம்..