ரௌத்திரன்
17-07-2012, 01:25 AM
(ஒரு விலைமகள் என்னை ஆசையோடு நெருங்கிய போது
நான் உற்ற உணவுர்வுகளும், அடைந்த அவஸ்தைகளும்,
நடந்த நிஜங்களும் கவிதையாகி இருக்கிறது)
வேண்டாம்!
தயவு செய்து
என்னை நெருங்காதே!
நீ
அழகுதான்!
அதனால்தான்
அச்சப்படுகிறேன்....
உன்
நீல விழிகொண்டு
நீளப் பார்வை பார்க்காதே!
நான்
அவ்வப்போது அருந்தும்
விஸ்கியைவிட
உன்
விழியில் போதை அதிகமாக இருக்கிறது....
வேண்டாம்!
சொன்னால் கேள்!
ஒரு
கூலிக்காரனின்
காசைப் போல
சிறுகச் சிறுக
சேமித்த இந்திரியத்தைச்
சில நிமிடங்களில்
செலவழிக்கச் செய்துவிடாதே.....
புரிகிறது!
நீ சீதையுமல்ல
இது அசோக வனமுமல்ல!
ஆனால்
நிச்சயம்
நான் ராவணன் ஆயிற்றே....
அதனால்தான்
அச்சப்படுகிறேன்!
உன்
தேகம் தீண்டினால்
காமன் கணைகளுக்கும்
காய்ச்சலடிக்குமே....
அதனால்தான்
அச்சப்படுகிறேன்!
உன்
கட்டழகைக்
கண்டுவிட்டால்
இவன் ரெட்டைக் கண்களில் என்ன
சிவனின் நெற்றிக் கண்ணிலும்
காமம் வழியுமே....
அதனால்தான்
அச்சப்படுகிறேன்!
வேண்டாம்!
சொன்னால் கேள்!
வேதத்தின்
வேர்களைத் துழாவிய
விசுவாமித்திரன் கூட
விவேகம் இழந்த இடம் பெண்...
அதனால்தான்
அச்சப்படுகிறேன்!
துறவியின்
தூய்மையைக் கூட
துடைத்து எறிந்துவிடும் ஆற்றல்
ஒரு
பெண்ணின் முந்தானைக்கு உண்டு....
அதனால்தான்
அச்சப்படுகிறேன்!
புழுதியைக் கூடப்
பூமணக்கச் செய்யும்
பாதங்களால்
என் கால்களை அழுத்தாதே!
உன் கால்களுக்குக் கீழே
என்
ஆண்மை பீடமே
அமுங்குவதாய்ப் படுகிறது எனக்கு....
உன்
புடவைவீசும்
புயல்காற்றில்
என்
புலன்களென்னும்
பூவனத்தை உதிர்த்துவிடாதே...
ஓ!
வேண்டாம்!
வேண்டாம்!
உன்
இடையைப் போல
இளைத்துக்கொண்டே வருகிறது
என் வைரக்கியம்....
ராவணனாய் வாழ்ந்து
ரணமானது போதும்.
இனியேனும்
ராமனாய் வாழ ஆசைப்படுகிறேன்!
சொன்னால் கேள்!
வரம் கிடைக்கும் நேரத்தில்
தவத்தைக் கலைத்துவிடாதே!
ஐயோ! போதும்!
ஆதவனின் கதிர்க்கரங்கள் தீண்டியும்
அவிழாத
அதிசயத் தாமரைகளாய்
என்
முகத்தில் அழுந்தும்
மதர்த்த நின்
முலைகளை எடு!
மூச்சு
முட்டுகிறது எனக்கு.....
விலகு...
விலகிவிடு...
வருகிறேன்!
ராவணன்
ராமனாகி விட்ட சந்தோஷத்தில்
நடக்க ஆரம்பித்தேன்.
ஆனால்
அந்த ஆனந்தத்தை
அடுத்த நொடியே
அடித்து நொறுக்கியது
என்
உள்மனம்
உதிர்த்த செய்தி!
"ராமனாகிவிட்டதாய்
ரொம்பப் பெருமைப் படாதே!
அவள் நினைத்திருப்பாள்
"சீ!
இவன் ஆண்மகன் தானா?""
ஒ!
ராமன் எனில்
ஆண்மையற்றவனோ?
-------------ரௌத்திரன்
நான் உற்ற உணவுர்வுகளும், அடைந்த அவஸ்தைகளும்,
நடந்த நிஜங்களும் கவிதையாகி இருக்கிறது)
வேண்டாம்!
தயவு செய்து
என்னை நெருங்காதே!
நீ
அழகுதான்!
அதனால்தான்
அச்சப்படுகிறேன்....
உன்
நீல விழிகொண்டு
நீளப் பார்வை பார்க்காதே!
நான்
அவ்வப்போது அருந்தும்
விஸ்கியைவிட
உன்
விழியில் போதை அதிகமாக இருக்கிறது....
வேண்டாம்!
சொன்னால் கேள்!
ஒரு
கூலிக்காரனின்
காசைப் போல
சிறுகச் சிறுக
சேமித்த இந்திரியத்தைச்
சில நிமிடங்களில்
செலவழிக்கச் செய்துவிடாதே.....
புரிகிறது!
நீ சீதையுமல்ல
இது அசோக வனமுமல்ல!
ஆனால்
நிச்சயம்
நான் ராவணன் ஆயிற்றே....
அதனால்தான்
அச்சப்படுகிறேன்!
உன்
தேகம் தீண்டினால்
காமன் கணைகளுக்கும்
காய்ச்சலடிக்குமே....
அதனால்தான்
அச்சப்படுகிறேன்!
உன்
கட்டழகைக்
கண்டுவிட்டால்
இவன் ரெட்டைக் கண்களில் என்ன
சிவனின் நெற்றிக் கண்ணிலும்
காமம் வழியுமே....
அதனால்தான்
அச்சப்படுகிறேன்!
வேண்டாம்!
சொன்னால் கேள்!
வேதத்தின்
வேர்களைத் துழாவிய
விசுவாமித்திரன் கூட
விவேகம் இழந்த இடம் பெண்...
அதனால்தான்
அச்சப்படுகிறேன்!
துறவியின்
தூய்மையைக் கூட
துடைத்து எறிந்துவிடும் ஆற்றல்
ஒரு
பெண்ணின் முந்தானைக்கு உண்டு....
அதனால்தான்
அச்சப்படுகிறேன்!
புழுதியைக் கூடப்
பூமணக்கச் செய்யும்
பாதங்களால்
என் கால்களை அழுத்தாதே!
உன் கால்களுக்குக் கீழே
என்
ஆண்மை பீடமே
அமுங்குவதாய்ப் படுகிறது எனக்கு....
உன்
புடவைவீசும்
புயல்காற்றில்
என்
புலன்களென்னும்
பூவனத்தை உதிர்த்துவிடாதே...
ஓ!
வேண்டாம்!
வேண்டாம்!
உன்
இடையைப் போல
இளைத்துக்கொண்டே வருகிறது
என் வைரக்கியம்....
ராவணனாய் வாழ்ந்து
ரணமானது போதும்.
இனியேனும்
ராமனாய் வாழ ஆசைப்படுகிறேன்!
சொன்னால் கேள்!
வரம் கிடைக்கும் நேரத்தில்
தவத்தைக் கலைத்துவிடாதே!
ஐயோ! போதும்!
ஆதவனின் கதிர்க்கரங்கள் தீண்டியும்
அவிழாத
அதிசயத் தாமரைகளாய்
என்
முகத்தில் அழுந்தும்
மதர்த்த நின்
முலைகளை எடு!
மூச்சு
முட்டுகிறது எனக்கு.....
விலகு...
விலகிவிடு...
வருகிறேன்!
ராவணன்
ராமனாகி விட்ட சந்தோஷத்தில்
நடக்க ஆரம்பித்தேன்.
ஆனால்
அந்த ஆனந்தத்தை
அடுத்த நொடியே
அடித்து நொறுக்கியது
என்
உள்மனம்
உதிர்த்த செய்தி!
"ராமனாகிவிட்டதாய்
ரொம்பப் பெருமைப் படாதே!
அவள் நினைத்திருப்பாள்
"சீ!
இவன் ஆண்மகன் தானா?""
ஒ!
ராமன் எனில்
ஆண்மையற்றவனோ?
-------------ரௌத்திரன்