ரௌத்திரன்
17-07-2012, 01:17 AM
மொட்டு விழியிரண்டால்-சிறு
மோகனப் புன்னகையால்
பட்டுத் தமிழெடுத்து-எனைப்
பாடச் சொன்னவளே!
ஆயிரம் கற்பனைக்கு-நெஞ்சின்
ஆழத்தில் குடியிருந்து
பாயிரம் எழுதிவந்த-என்றன்
பருவத்துப் பைங்கிளியே!
வட்ட வெண்ணிலவு-புவியை
வெளிச்ச விரல்களினால்
நட்ட நடுநிசியில்-தீண்டி
நேசம் பேசுகையில்,
தங்கச் சிலையுனக்காய்-கொடுந்
தனிமை பொறுத்திருந்தேன்
வங்கக் கடல்போலே-இன்றென்
விழிகள் பொங்குதடி!
தங்கம்போல் நீவந்தாய்-சுடும்
தீயாய் நானிருந்தேன்
தங்கம்நீ சுட்டதனால்-அடி
தீநான் உருகுகிறேன்!
கானல் கடல்சேர-ஒரு
கங்கை அலைந்ததுபோல்
நானும் நடந்தேனா?-அடி
நிஜமும் அதுதானா?
ஏட்டைச் சேராத-ஓர்
ஏக்கக் கதைபோல
கூட்டைக் கறையானாய்-அடி
காதல் அரிக்கிறதே!
இரவில் நள்ளிரவில்-உன்
இளமை நினைவுவர
விரகக் கனவுகளில்-என்
விழிகள் வேகிறதே!
இணையில்லா காவியமாய்-உன்னை
இதயத்தில் வடித்ததற்கா
துணையில்லா வாழ்க்கைக்குள்-என்னைத்
துப்பிவிட்டுப் போகின்றாய்?
ஒப்பில்லா அழகென்று-உன்னை
ஓயாமல் உரைத்ததற்கா
தப்பாமல் பாழ்நரகில்-என்னைத்
தள்ளிவிட்டுப் போகின்றாய்?
மூடிக் கிடப்பதனால்-மொட்டு
மலர மறுப்பதனால்
ஏடி வாசம்தான்-உள்ளே
உறங்கிக் கிடந்திடுமா?
நெஞ்சை மறைப்பதனால்-உன்
நிழலை மறைப்பதனால்
கொஞ்சும் பார்வையினால்-எழுதிய
காதல் மறைந்திடுமா?
கீத மொழியிலையே-என்
கவலை மறந்திருக்க!
பாதக் கொலுசிலையே-எங்கு
பாரம் இறக்கிவைக்க?
ஏக்கம் உள்ளவரை-கவியால்
ஏட்டை நிரப்பிடுவேன்
யாக்கை உள்ளவரை-காதல்
யாகம் நடத்திடுவேன்!
-----------ரெளத்திரன்
மோகனப் புன்னகையால்
பட்டுத் தமிழெடுத்து-எனைப்
பாடச் சொன்னவளே!
ஆயிரம் கற்பனைக்கு-நெஞ்சின்
ஆழத்தில் குடியிருந்து
பாயிரம் எழுதிவந்த-என்றன்
பருவத்துப் பைங்கிளியே!
வட்ட வெண்ணிலவு-புவியை
வெளிச்ச விரல்களினால்
நட்ட நடுநிசியில்-தீண்டி
நேசம் பேசுகையில்,
தங்கச் சிலையுனக்காய்-கொடுந்
தனிமை பொறுத்திருந்தேன்
வங்கக் கடல்போலே-இன்றென்
விழிகள் பொங்குதடி!
தங்கம்போல் நீவந்தாய்-சுடும்
தீயாய் நானிருந்தேன்
தங்கம்நீ சுட்டதனால்-அடி
தீநான் உருகுகிறேன்!
கானல் கடல்சேர-ஒரு
கங்கை அலைந்ததுபோல்
நானும் நடந்தேனா?-அடி
நிஜமும் அதுதானா?
ஏட்டைச் சேராத-ஓர்
ஏக்கக் கதைபோல
கூட்டைக் கறையானாய்-அடி
காதல் அரிக்கிறதே!
இரவில் நள்ளிரவில்-உன்
இளமை நினைவுவர
விரகக் கனவுகளில்-என்
விழிகள் வேகிறதே!
இணையில்லா காவியமாய்-உன்னை
இதயத்தில் வடித்ததற்கா
துணையில்லா வாழ்க்கைக்குள்-என்னைத்
துப்பிவிட்டுப் போகின்றாய்?
ஒப்பில்லா அழகென்று-உன்னை
ஓயாமல் உரைத்ததற்கா
தப்பாமல் பாழ்நரகில்-என்னைத்
தள்ளிவிட்டுப் போகின்றாய்?
மூடிக் கிடப்பதனால்-மொட்டு
மலர மறுப்பதனால்
ஏடி வாசம்தான்-உள்ளே
உறங்கிக் கிடந்திடுமா?
நெஞ்சை மறைப்பதனால்-உன்
நிழலை மறைப்பதனால்
கொஞ்சும் பார்வையினால்-எழுதிய
காதல் மறைந்திடுமா?
கீத மொழியிலையே-என்
கவலை மறந்திருக்க!
பாதக் கொலுசிலையே-எங்கு
பாரம் இறக்கிவைக்க?
ஏக்கம் உள்ளவரை-கவியால்
ஏட்டை நிரப்பிடுவேன்
யாக்கை உள்ளவரை-காதல்
யாகம் நடத்திடுவேன்!
-----------ரெளத்திரன்