PDA

View Full Version : ஓ கவிஞர்காள்!



ரௌத்திரன்
16-07-2012, 07:49 AM
(ஈழத்தில் அழிந்துகொண்டிருக்கும் தமிழினத்திற்காகக்
குரல் கொடுக்காமல், பட்டங்கள் பதவிகளுக்காக
ஆதிக்க வர்க்கத்தினரின் காலை நக்கிக்கொண்டிருக்கும்
ஈனக் கவிஞர்களைச் சாடியும், ஏனையக் கவிஞர்களுக்கு
அழைப்பு விடுத்தும் எழுதிய கவிதை)


அழுகல் பிணங்களை அர்ச்சனை செய்ததில்
====அங்கம் வளர்த்திடும் வாழ்க்கை-அதிலே
====அனுதினம் பெருகுது வேட்கை-இங்கு
மழுவைக் கைகளிற் கொண்டிருந் தும்பலர்
====மழித்துக் கொண்டிருக்கும் செய்கை-அது
====மானம் இழந்தவர்தம் கொள்கை!


காசு கொடுப்பவர் கட்டிலில் விழுகின்ற
====தாசி குலத்தவர் வர்க்கம்-அவர்க்குத்
====தூர மிலைஇவர் பக்கம்-எலும்பு
வீசி யெறிபவர் யாரா யிருப்பினும்
====வாலைக் குழைத்து நிற்கும்; அந்த
====நாய்களோ டென்ன தர்க்கம்?


கொள்கை தவறிய கவிஞனின் பேனா
====சமுதாயத் தலைமாட்டில் கொள்ளி-அதனால்
====சாத்திய மிலைவிடி வெள்ளி-மெத்தப்
பல்கி வளரினும் பூவின மாயினும்
====பூஜைக் குதவாது எருக்கு-அவை
====பூமியில் எதற்கினி நறுக்கு!


சீறிப் பாயுமோர் சீர்வலி குன்றினும்
====வளைந்து கொடுக்காது அங்கம்-நரியின்
====வாலைப் பிடிக்காது சிங்கம்-நெஞ்சில்
ஈர முள்ளவர் வீர முள்ளவர்;இதைத்
====தேறி விட்டாலே கொஞ்சம்-சிங்களத்
====தீவுக் கழிவன்றோ மிஞ்சும்?


மானம் பெரிதெனும் மறத்தமி ழச்சியின்
====மார்பில் பாலினைப் பருகி-வளர்ந்த
====மரபில் வந்தவர் உருகி-வருவீர்!
ஈனக் குலத்தவர் ஈரக் குலையினை
====அறுக்கப் படையெனப் பெருகி-போதும்
====அமைதி காத்தது மருகி!


அங்கம் முழுவதும் ஆணவ மாகிய
====சிங்களர் தலைகளைக் கொய்வோம்-அவர்
====செந்நீர்க் கடலினிற் பெய்வோம்-அதில்
வங்கக் கடலெனும் பெயர்மெல மாறிச்
====செங்கட லானது என்று-நாளைச்
====சரித்திரம் பேசட்டும் நின்று!


ஒன்று சேருவோம் நன்று சேருவோம்
====இன்று சேருவோம் வாரீர்-என்
====இன்தமிழ்க் கவிகளே வாரீர்-எங்கும்
மன்று ஏறுவோம் நின்று சீறுவோம்
====கன்று போலவே வாரீர்-இமயக்
====குன்று போலெழுந்து வாரீர்!


கூட்டுப் புழுவென வீட்டி லடங்கிய
====நாட்டு மக்களைக் கூட்டுவோம்-புரட்சி
====நாட்டக் கவிதைகள் தீட்டுவோம்-நர
வேட்டை யாடநம் எழுது கோல்களை
====வில்லைப் போல்வளைத்துக் காட்டுவோம்-தமிழர்
====வீரம் தனைநிலை நாட்டுவோம்!


உதிக்கும் சூரியன் உதிக்க நினைத்தால்
====எட்டுத் திசைகளும் கிழக்கு-பின்
====விட்டு விலகிடும் இருட்டு-இங்கு
கொதிக்கும் உள்ளங்கள் கூட்டணி யாகக்
====கோத்து நின்றாலே வெறுங்கை-அதில்
====வேர்த்து விழாதோ இலங்கை?



--------------ரௌத்திரன்.