ரௌத்திரன்
15-07-2012, 12:11 AM
முத்தினமே!
என்
நித்திலமே!
அடி
ரத்தினமே!
அழகுச்
சித்திரமே!
நீயின்றி நான்கொண்ட மோகம்-இது
ஆகாயம் இல்லாத மேகம்!
பாழாகுமோ?
உடல்
நூலாகுமோ?
மனம்
தூளாகுமோ?
இன்னும்
நாளாகுமோ?
சிந்திக்க வேண்டும்நீ கொஞ்சம்-அடி
சந்திக்க வேண்டும்நாம் மஞ்சம்!
சித்தம் வரும்
முகம்
பித்தம் தரும்
அது
நித்தம் தரும்
உடல்
மொத்தம் தரும்
இதழோடு இதழ்கொஞ்சம் பொருத்து-என்
இதயத்தை எரியாமல் நிறுத்து!
வாட்டுகிறான்!
கணை
பூட்டுகிறான்!
கனல்
மூட்டுகிறான்!
வேலை
காட்டுகிறான்!
மன்மத னால்கொள்கை கைவிட்டு-உன்னைக்
கொஞ்சத் துடிக்கிறேன் மெய்தொட்டு!
வஞ்சம் என்னடி?
உன்
நெஞ்சம் என்னடி?
இதில்
பஞ்சம் என்னடி?
நான்
தஞ்சம் உன்னடி!
கட்டித் தழுவிசிவ சக்திநிலை-வா
கண்டு விடலாம் முக்திநிலை!
-----------ரெளத்திரன்
என்
நித்திலமே!
அடி
ரத்தினமே!
அழகுச்
சித்திரமே!
நீயின்றி நான்கொண்ட மோகம்-இது
ஆகாயம் இல்லாத மேகம்!
பாழாகுமோ?
உடல்
நூலாகுமோ?
மனம்
தூளாகுமோ?
இன்னும்
நாளாகுமோ?
சிந்திக்க வேண்டும்நீ கொஞ்சம்-அடி
சந்திக்க வேண்டும்நாம் மஞ்சம்!
சித்தம் வரும்
முகம்
பித்தம் தரும்
அது
நித்தம் தரும்
உடல்
மொத்தம் தரும்
இதழோடு இதழ்கொஞ்சம் பொருத்து-என்
இதயத்தை எரியாமல் நிறுத்து!
வாட்டுகிறான்!
கணை
பூட்டுகிறான்!
கனல்
மூட்டுகிறான்!
வேலை
காட்டுகிறான்!
மன்மத னால்கொள்கை கைவிட்டு-உன்னைக்
கொஞ்சத் துடிக்கிறேன் மெய்தொட்டு!
வஞ்சம் என்னடி?
உன்
நெஞ்சம் என்னடி?
இதில்
பஞ்சம் என்னடி?
நான்
தஞ்சம் உன்னடி!
கட்டித் தழுவிசிவ சக்திநிலை-வா
கண்டு விடலாம் முக்திநிலை!
-----------ரெளத்திரன்