சொ.ஞானசம்பந்தன்
30-06-2012, 06:49 AM
சூடாமணி 50 வயதுப் பெண்மணி . பருத்த உருவம் ஆயினும் சுறுசுறுப்புக்குக் குறைவில்லை . ஆன்மிகப் பழமாகிய அவர் பக்திப் பனுவல்களைப் பரவசத்துடன் பாராயணம் செய்வார் . ஆசாரம் , அனுஷ்டானம் , நோன்பு , சம்பிரதாயம் எல்லாம் தீவிரமாய்க் கடைப்பிடிப்பார் . நல்ல நாள் பார்த்துத்தான் முக்கிய செயல்களில் ஈடுபடுவார் .சோதிடத்தில் அசைக்கமுடியா நம்பிக்கை கொண்டவர் .
ஒரே மகன் , மருமகளாய் வாய்த்த ஒரு குணவதி , மூவரும் ஒற்றுமையாய்ப் பாசப் பறவைகளாய் இன்ப வாழ்வு வாழ்ந்து பிற குடும்பங்களுக்கு நல்லுதாரணமாய்த் திகழ்ந்தனர் .
துன்பம் முன்னறிவித்துவிட்டா வருகிறது ? ஒரு மாலை நேரத்தில் சூடாமணியைத் தாக்கிய நெஞ்சுவலி மார்பின் இடப் பக்கம் தோன்றி இடக் கைக்குப் பரவிற்று ; வியர்த்துக் கொட்டியது ..
இதயத் தாக்கு ! மூவரும் புரிந்துகொண்டனர் .
" கிளம்புங்கள் உடனே! மருத்துவ வண்டியைக் கூப்பிடுகிறேன் "
மகன் பரபரத்தான் . அமைதிப் படுத்தினார் தாயார் :
" தம்பி , நேற்று அஷ்டமி , இன்று நவமி . ரொம்பக் கெட்ட நாளுப்பா . இப்போது வேண்டாம் ; விடிந்ததும் போவோம் ".
" ஒரு நிமிஷமும் தாமதம் கூடாதம்மா ; இதற்கெல்லாம் நாள் பார்க்காதீங்க "
கெஞ்சினான் . எடுத்துச் சொல்லிப் பார்த்தாள் மருமகளும் .
அவர் மசியவில்லை :
" பயப்படாதீங்க . ஜாதகப்படி நான் இன்னம் இருபது வருஷம் இருப்பேன் . பகவான் கைவிடமாட்டார் . பொலபொலன்னு விடியிறத்துக்கு முன்னாடி போயிடலாம் " என்று அவர் திட்டவட்டமாய்ச் சொல்லியமையால் வேறு வழியின்றிக் கைப்பக்குவம் செய்தவாறு கடவுளை வேண்டிக்கொண்டு கண்மூடாமல் காத்திருந்தனர் .எப்போது விடியும் எனக் கடிகாரத்தை அடிக்கடி நோக்கிக்கொண்டிருந்தார்கள்.
முதல் தாக்குதல்தானே ? ஆபத்தில்லை என்னும் எண்ணம் மகன் மனத்தில் நிறைந்திருந்தது .
" ஐயோ ! " அலறினார் அம்மா ; அவ்வளவுதான் , அவர் சொன்னபடியே விடியிறத்துக்கு முன்னாடி போய்விட்டது உயிர் .
================================================================
.
ஒரே மகன் , மருமகளாய் வாய்த்த ஒரு குணவதி , மூவரும் ஒற்றுமையாய்ப் பாசப் பறவைகளாய் இன்ப வாழ்வு வாழ்ந்து பிற குடும்பங்களுக்கு நல்லுதாரணமாய்த் திகழ்ந்தனர் .
துன்பம் முன்னறிவித்துவிட்டா வருகிறது ? ஒரு மாலை நேரத்தில் சூடாமணியைத் தாக்கிய நெஞ்சுவலி மார்பின் இடப் பக்கம் தோன்றி இடக் கைக்குப் பரவிற்று ; வியர்த்துக் கொட்டியது ..
இதயத் தாக்கு ! மூவரும் புரிந்துகொண்டனர் .
" கிளம்புங்கள் உடனே! மருத்துவ வண்டியைக் கூப்பிடுகிறேன் "
மகன் பரபரத்தான் . அமைதிப் படுத்தினார் தாயார் :
" தம்பி , நேற்று அஷ்டமி , இன்று நவமி . ரொம்பக் கெட்ட நாளுப்பா . இப்போது வேண்டாம் ; விடிந்ததும் போவோம் ".
" ஒரு நிமிஷமும் தாமதம் கூடாதம்மா ; இதற்கெல்லாம் நாள் பார்க்காதீங்க "
கெஞ்சினான் . எடுத்துச் சொல்லிப் பார்த்தாள் மருமகளும் .
அவர் மசியவில்லை :
" பயப்படாதீங்க . ஜாதகப்படி நான் இன்னம் இருபது வருஷம் இருப்பேன் . பகவான் கைவிடமாட்டார் . பொலபொலன்னு விடியிறத்துக்கு முன்னாடி போயிடலாம் " என்று அவர் திட்டவட்டமாய்ச் சொல்லியமையால் வேறு வழியின்றிக் கைப்பக்குவம் செய்தவாறு கடவுளை வேண்டிக்கொண்டு கண்மூடாமல் காத்திருந்தனர் .எப்போது விடியும் எனக் கடிகாரத்தை அடிக்கடி நோக்கிக்கொண்டிருந்தார்கள்.
முதல் தாக்குதல்தானே ? ஆபத்தில்லை என்னும் எண்ணம் மகன் மனத்தில் நிறைந்திருந்தது .
" ஐயோ ! " அலறினார் அம்மா ; அவ்வளவுதான் , அவர் சொன்னபடியே விடியிறத்துக்கு முன்னாடி போய்விட்டது உயிர் .
================================================================
.