PDA

View Full Version : மணக்கோலம்



Sasi Dharan
23-06-2012, 12:48 PM
வைகறையின் வரவெண்ணி
வடிவழகில் வாயிற்கோலமெய்தி
விடியலின் மடியில்
விழிவைத்துக் காத்திருந்தாள்...

ஆதவக்கதிர்கள் வந்தணைக்காது
ஆரிருள் கவிந்தபடி
அடர்ந்தது வானம்..

கருமேகங்கள் கரைய
வடித்தெழுந்த வாயிற்கோலங்களும் கரைந்தோடியது....

நிச்சயம் விடியும் மீண்டுமொரு
விடியலெனவெண்ணி
கனவுகளை தேக்கிய கண்களாய்
வைகறையை பார்த்தபடி
வாயிற் அமர்ந்தாள்
முதிர்கன்னி!!!

vasikaran.g
24-06-2012, 11:13 AM
புதியவேறே
உமது
பதிவேன்னவோ
நிறைவதனை
நிறையதருகிறது .!